<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9576093</id><updated>2011-04-21T18:27:26.891-05:00</updated><category term='மாலன்'/><category term='தமிழ் இணையம்'/><category term='இந்தியா'/><category term='தமிழ்'/><category term='ஈழம்'/><title type='text'>அலைஞனின் அலைகள்: கரைவு</title><subtitle type='html'>அறிதலின் அந்தம் நாடி
அரித்தலில் அந்தாதல்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://karaivu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://karaivu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>11</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9576093.post-8948732735716598915</id><published>2007-07-28T00:33:00.000-05:00</published><updated>2007-07-28T01:54:59.082-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாலன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு - பகுதி 1அ</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://bp2.blogger.com/_OBFBfYawg8g/Rqra09u354I/AAAAAAAAAXE/Cd0myVx7f-w/s1600-h/kalyanasundaram-eText.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5092122932154984322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_OBFBfYawg8g/Rqra09u354I/AAAAAAAAAXE/Cd0myVx7f-w/s1600/kalyanasundaram-eText.jpg" width="400" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:78%;"&gt;கல்யாணசுந்தரத்தின் தமிழ் மின்னுரைச்சுவடிகள் பக்கம் &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;em&gt;&lt;span style="font-size:78%;"&gt;@ உலூசன் பல்கலைக்கழகம் '96 (ஆரம்பம் 23 மே 1995)&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/div&gt; &lt;div align="left"&gt; &lt;a href="http://karaivu.blogspot.com/2007/07/blog-post.html"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு - பகுதி 1அ&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;முன்னைய பகுதி&lt;/em&gt;&lt;br /&gt;&lt;a href="http://wandererwaves.blogspot.com/2007/07/9_21.html"&gt;அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு - காப்பு (பகுதி 0)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;strike&gt;மு&lt;/strike&gt;என்னுரையும் இன்ன பிறவும் - அ&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பகுதியிலே மாலனுக்கான பதிலிலே பேசப்படவேண்டிய கருக்களுக்கு முக்கியமற்றபோதுங்கூட, தம்மளவிலே முக்கியமான சில உதிரிக்கூற்றுகள்மீதான எனது விளக்கங்களைத் தரவிரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கூற்று 1:&lt;/em&gt; இணையத்தமிழினைத் தொழில்நுட்பத்திலே முன்னேற்றாது இணையத்தமிழ் வரலாற்றினைப் பேசும்போது என்பது வெற்றுவிவாதங்களாகி அயர்ச்சியே மிஞ்சுகின்றது என்று எண்ணங்களின் குரல் கூறியிருப்பதன்மீது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கூற்று 2:&lt;/em&gt; தன்னதை ஒத்த கருத்தினைச் சொன்ன எத்தனையோ பேரிருக்க மாலன் தன்னை மட்டும் நான் கேள்விகளைக் கேட்டது காழ்ப்புணர்வின் அடிப்படையிலேயே என்று கூறியிருப்பதன்மேல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கூற்று 3:&lt;/em&gt; இணையபிதா, டாக்டர், பேராசிரியர் என்று பதங்கள் சொல்லப்பட்டது குறித்து எதற்காக நான் 'அதிகம் அலட்டிக்கொள்கின்றேன்' என்பது பற்றி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கூற்று 4:&lt;/em&gt; "சீன அரசின் சார்புநிலைப்பாட்டோடு திபெத்தின் சுதந்திரத்தேவையினைத் தாக்கியெழுதும் இந்து இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிக்கின்றார்" என்ற அர்த்தத்திலே நான் சந்திப்புக்குப் பதிலாகச் செல்வநாயகியின் பதிவிலே சுட்டிக்காட்டியது, மாலனுக்குத் தனிமனிதத்தாக்குதலும் எள்ளலுமாகிப்போனது பற்றி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கூற்று 5:&lt;/em&gt; தகுந்த ஆதாரங்கள் என்று முன்வைக்கும்போது, கருத்திலே கொள்ளப்படவேண்டிய குறைந்த பட்ச நம்பிக்கை &amp; தராதரம் பற்றி&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிரவும் பேசப்படவேண்டிய வேறு உதிரிக்கருத்துகளிருக்கலாம். இத்தொடரை முடிக்கும்போது, அவை ஞாபகத்துக்கு வந்தால், மீண்டும் ஒரு பதிவாக்கி அதனையிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய ஐந்திற்கான விளக்கங்களையும் ஒரேயடியாக இவ்விடுகையிலே விரித்துத் தருதலுக்கான சாத்தியமில்லையென்பதாலே, முதலிரு கூற்றுக்களின் மீதான எனது விளக்கங்களை இங்கே தருகிறேன். மற்றைய மூன்றும் அடுத்த இடுகையிலே தொடரும். அதனைத் தொடர்ந்து கோவிந்தசாமி-இணையத்தமிழ் குறித்த மாலனின் ஆதாரங்களின் தம்மைத்தாமே சுட்டுக்கொல்லும் தன்மையையும் மேலதிக ஆதாரங்களையும் பார்க்கலாம். இயன்றவரை இணைப்புகளை இங்கே தரமுயன்றிருக்கின்றேன். மேலதிக ஆதார இணைப்புகள் தொடர்ந்து கிடைக்கும்போதெல்லாம் தகுந்தவிடங்களிலே ஏற்றப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கூற்று 1:&lt;/em&gt; &lt;strong&gt;இணையத்தமிழினைத் தொழில்நுட்பத்திலே முன்னேற்றாது இணையத்தமிழ் வரலாற்றினைப் பேசும்போது என்பது வெற்றுவிவாதங்களாகி அயர்ச்சியே மிஞ்சுகின்றது என்று எண்ணங்களின் குரல் கூறியிருப்பதன்மீது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இன்று தமிழர்களுக்கு இணையத்தமிழின் வரலாறா, தமிழ்க்கணித்தொழில்நுட்பமா முக்கியமானது?' என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டுமென்ற கட்டாயத்தேர்தல் வருமானால், தொழில்நுட்பத்தேவைக்கே என் வாக்கு; இணையத்தமிழின் வரலாற்றினைப் பற்றி நான் ஏதும் பேசமாட்டேன். ஆனால், இங்கே அப்படியான கட்டாயத்துக்கான தேவையேதும் எழவில்லை. அதனால், இணையத்தமிழின் வரலாற்றினைப் பற்றி நான் நீட்டிப் பேசுவதற்கான காரணங்கள் எனக்குத் தெளியத் தெரிந்து, இரண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;காரணம் 1:&lt;/em&gt; என் முன்னைய இடுகை ஒன்றிலே குறிப்பிட்டதுபோல, "யார், எதை, எப்போது, எங்கே செய்தார்" என்பதற்கான சரியான தரவுக்கோவை முறையான வரலாறாகத் தொகுக்கப்பட்டுப் பதிவாகுவதுகூட அவசியமில்லை. ஆனால், தவறான, திரிந்த, உறுதியற்ற, மழுங்கிய முன்வைப்புகள் வரலாற்றுத்தரவுகளாகத் தரப்படும்போது, "யார், எதை, எங்கே, எப்போது, எங்கே செய்யவில்லை" என்பதற்கான எதிர்த்தரவுக்கோவை முறையாக முன்வைக்கப்பட்டேயாகவேண்டும். அவ்வகையிலே மாலனும் அருணாவும் கூறிய கருத்துகளின், முன் வைத்த ஆதாரங்களின் எதிர்வினையாகவே நான் இணையத்தமிழின் வரலாற்றினை - என் கைக்கெட்டிய ஆதாரங்களுடன் - முன்வைக்கவிரும்புகிறேன். இஃது எவ்விதத்திலும் கணித்தொழில்நுட்பத்தின் முக்கியத்தை மறுப்பதாகக் கருதப்படக்கூடாது. இது போன்ற நோக்குடனேதான், கணித்துறையிலே திறந்தமூலமென்நிரல்களிலே, அவற்றுக்குப் பங்களித்தவர்களின் பெயர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன; அவர்களின் பங்களிப்புகள் காலவரிசைப்படி பட்டியலிடப்படுகின்றன. இப்படியான பதிதல்களும் சுருக்கமான வரலாற்றுப்பதிதலே; அதன் தேவையும் இங்கே நாம் பேசிக்கொள்ளும் நிரல்களின் வளர்ச்சி, பங்களிப்பினைப் பற்றிய சரியான தகவல்களை ஆவணப்படுத்தும் நோக்காகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;காரணம் 2:&lt;/em&gt; மேலே கூறிய காரணத்தினைவிடவும் எனக்கு - &lt;em&gt;ஈழத்தமிழனென்ற அளவிலே&lt;/em&gt;- முக்கியமாகும் இன்னொரு காரணமுண்டு. ஒரு சமூகம் தன் வரலாற்றினை இயன்றவரை தொடர்ச்சியாகவும் கோவையாகவும் (&lt;em&gt;அது மிகத்திருத்தமாகக்கூட அமைய வேண்டியதில்லை&lt;/em&gt;) பதிந்துகொள்வதன் தேவையை ஈழத்தமிழரின் இன்றைய (வரலாற்று)நிலை உணர்த்தியிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையிலே பேசிக்கொண்டிருந்த ஒரு நண்பர் சொன்னார், "எவருமே நம்ப முடியாத வகையிலே ஆண்சிங்கத்துக்கும் மனிதப்பெண்ணுக்கும் பிறந்து வந்த சந்ததியே சிங்கள (ஹெல) இனம் என்று எழுதிவைத்திருந்தாலுங்கூட, சிங்களவர்களுக்கு, அவர்களின் வரலாறென்பதைக் காலவரையறைப்படி எடுத்துச் சொல்லும் வகையிலே மகாவம்சம், சூளவம்சம் என்ற ஆவணப்படுத்துதல் தொடர்ந்திருக்கின்றது;" இது நாம் மிகவும் கூர்ந்து காணவேண்டிய கோணம். ஈழத்தமிழருக்கென்று இவ்விடத்தின் இன்னார்தான் என நிறுவமுடியாத ஈழத்துப்பூதத்தேவனாரின் கவிதையிலிருந்து வரலாற்றினைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளவேண்டிய அவலமே இன்னமும் இருக்கின்றது. அவரின் பெயரிலேயிருக்கும் ஈழம் என்பது இப்போது நாங்கள் குறிப்பிடும் ஈழமா, வேறிடமா, அச்சொல்லுக்கான வேறேதும் கருத்திலே (&lt;em&gt;'பொன்' என்பது போல&lt;/em&gt;) வந்ததா என்றுகூட எங்களால் அறுதியிட்டுச் சொல்லமுடிவதில்லை. அதன் பின்னால், குளக்கோட்டன், குத்தன் - சேனன், எல்லாளன், யாழ்ப்பாடி, திருஞானசம்பந்தர் + சுந்தரர் தேவாரங்கள், பல்லவ_சோழ_பாண்டிய வரலாறுகள், அருணகிரிநாதர் திருப்புகழ் என்று வழிவந்த கதைகளும் பாடல்களும் அடுத்தார் வரலாறுகளும் பேசப்பட்டபோதுங்கூட, இவற்றில் எதுவுமே ஈழத்திலே தமிழர் வரலாற்றினை, அவர்களின் இருப்பின் தொடர்ச்சியினை முறையாக ஆவணப்படுத்தியதாக, ஆவணப்படுத்த உதவியதாக அமையவில்லை. தமிழ்ப்பாடல்களிலிருந்து தரவுகளை உய்த்தறிந்து வடிகட்டி, வரலாற்றினை உருக்கி வடிவமைத்துக்கொள்ளும் இரண்டாம்நிலை ஆதாரத்தினைப் பிடித்துக்கொள்ளும் அவலமே தொடர்ந்திருக்கின்றது. இதன் அவவிளைவே, பரணவிதாரண போன்றோரின் கைகளிலே இலங்கையின் 'தொல்பொருளியலாய்வும் அகழ்வும்' சென்றதும், அதன்பின்னான 'கண்டுபிடிப்புகள்' சிங்களக்குடியேற்றங்கள் முதல் இன்னோரன்ன மொழிசார் இனவமைப்பு ஒடுக்குமுறைகளுக்கு, தமிழ்பேசும் சமூகங்கள் ஈழத்திலே உள்ளாகவும் காலாயிருந்திருக்கிறன; காலாயிருக்கின்றன. தமிழ்ப்பௌத்தர்கள் இருந்திருக்கலாமென்ற வாதத்தைக்கூட முன்வைத்து, சிங்களப்பேரினவாதத்தின் வரலாற்றாக்கத்தை மறுத்துப்பேசமுடியாத நிலையிலே கந்தரோடை, வல்லிபுரம், நயினாதீவு, திரியாய் ஆகிய இடங்கள் 'பௌத்தர்கள்=சிங்களவர்கள்' என்ற சமன்பாட்டினாலே எழுதிவைக்கப்படுகின்றன. இங்கேதான் ஈழத்தமிழர்கள் சந்த்யானாவின் 'தமது கடந்த காலத்தினை நினைவுகூரமுடியாதவர்கள் எதிர்காலத்திலே அதை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்படுவார்கள்' என்ற நிலைக்கு ஆளாகியிருக்கின்றோம். இந்நிலையிலேதான் வரலாற்றினைப் பதிவுசெய்தலென்பது வாழ்தலின் இருத்தலின் தொடர்ச்சியாக ஒரு சமூகத்துக்கு ஓர் அவசியமான அத்திவாரக்கூறாகின்றது. இன்னமும், வரலாற்றின் தேவைதான் - கடந்த காலத்திலிருந்து எமது இன்றைய நிலையைச் சரிபார்த்துக்கொள்தலும் போகும் பாதைக்குக் கடந்தகாலத்தின் தவறுகளைத் தவிர்த்தலுமே - கற்றுக்கொள்ளவைக்கின்றது; இதன் அடிப்படையிலேயே பொதுவரலாறு ஒரு பாடமாக பாடசாலைகளிலே கற்பிக்கப்படுவதும், இராணுவ,போர்வரலாறு இராணுவக்கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுவதும் அமைகிறன. வரலாற்றின் பதிவின்றி உடோல்ஸ்டோயின் பாதையிலே மோஹன்தாஸ் காந்தியும் அதன் தொடர்ச்சியாக மார்டின் உலூதர் கிங்கும் அடியொற்றி நடக்க முயன்றிருக்கமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமூகத்தின் விடுதலையென்பதும் சுதந்திரமென்பதும் இருநிலைத்தளங்களிலே நிகழலாமென்பது என் பார்வை. ஒன்று உறைவிடம்சார் பௌதீகதளத்திலே (&lt;em&gt;அச்சமூகத்தின் ஒடுக்கப்படுதலுக்கெதிராக&lt;/em&gt;) நிகழ்வது; இன்றைக்கு இலங்கைத்தீவிலே தேடப்படும் விடுதலையென்பதும் இவ்வகை உறைவிடம்சார் இனவிடுதலையாகவே கருதப்படலாம். (&lt;em&gt;'மொழிசார்ந்த' என்று சொல்லவில்லை.... சிங்களவரிடமிருந்து தமிழர்களும் தமிழர்களிடமிருந்து முஸ்லீம்களும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இங்கே 'இனம் சார்ந்த' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்கின்றேன்.&lt;/em&gt;) இந்த புவிசார் அரசியல் விடுதலை எய்தப்படும்போது, அதன் விளைவாக, அவ்வடிமைத்தனம் சங்கிலித்தொடராகக் கட்டிவைத்திருந்த எல்லைப்படுத்தல்களும் முறிந்து, அதன் வழிப்பட்ட எமது மற்றைய மனிதசுதந்திரங்களும் வந்துசேரும். .&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது, உளம்சார், சிந்தைசார்தளத்திலே நிகழும் விடுதலையென்பது; இதற்குப் பௌதீக, புவியமை எல்லையில்லை. இவ்விடுதலையென்பது புவிகட்டுப்படுத்தும் வரையறைகளுள்ளே அவற்றினை முறித்துத் தனித்துவம் காண்பதற்காக நிகழ்வதல்ல. கருத்துத்தளத்திலே தன்மீதான அடக்குமுறைகளிலிருந்து தம்மை உடைத்துக்கொண்டு, விட்டுவிலகிச் சிட்டுக்குருவியாகப் பறக்கும் நோக்கிலே பிறப்பது; தமிழர் என்ற கருத்துநிலையிலே ஈழத்தமிழர், மற்றும் அவர்கள்போன்ற நிலையிலுள்ள ஏனைய உட்கூற்றுத்தமிழர்களின் தம்மடையாளங்களை, 'தமிழினை மேம்படுத்தியவர்கள் நாம்' என்ற கருத்துநிலை மேலாதிக்கத்தாக்குதலின்மூலம், கருத்துநிலை அரசியல்மூலம் இதுவரைநாள் நிலைநிறுத்தி நிற்கின்றவர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு காணும் சுதந்திரம் இவ்வகைப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கின் குடியேற்றவாதிகளை எமது சொந்தநாடுகளிலிருந்து வெளியேற்றுவதென்பது உறைவிடம்சார் சுதந்திரப்படுத்துதலென்று கொண்டால், அவர்களின் கருத்தாக்கங்களும் வரலாற்றுப்படுத்துதலுமே முற்றுமுழுதாகச் சரியென்ற கருத்துநிலையிலிருந்து எம்மை விடுவிடுத்துக்கொள்வதிலான சுதந்திரம் கருத்துநிலைச்சுதந்திரமாகும். இதே கண்ணோட்டத்திலேயே ஈழத்தமிழரின் சிந்தை மீதான மேலாதிக்கவாதிகளின் சிறைப்படுத்துதலிலிருந்து விடுதலை பெறும் நிலையையும் நான் காண்கின்றேன். இவ்விரு உறைவிடம்சார் விடுதலைப்போராட்டத்தினை ஈழக்களத்திலும், கருத்துநிலைசார் விடுதலைப்போராட்டத்தினை பல்வேறு தகவலூடகக்களங்களிலும் சமகாலத்திலேயே நிகழ்த்தவேண்டிய அவநிலைக்கு நாம் உள்ளாகியிருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போராட்டங்களிலே எம் சுயத்தினையும் தேவைகளையும் அடையாளம் காணவேண்டும்; எம் காலம் சார்ந்த இருப்பின் தொடர்ச்சியினையும் பங்களிப்பினையும் நிறுவவேண்டும்; நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எமது புவிநிலை, கருத்துநிலைசார் விடுதலைகளை, ஈழத்தமிழரென்று கொண்டிருக்க நாம் ஆரம்பித்துச் செய்யவேண்டியது இதுதான்: "ஈழத்தமிழரின் சிங்களம் அண்டிய புவிசார் வரலாற்றோடு, கருத்துநிலைசார் அகிலத்தமிழர் என்ற பெருங்கூட்டத்தினுள்ளேயும் எம் தொடர்ச்சியான இருப்பும் பங்களிப்பும் குறித்த வரலாற்றினையும் ஆவணப்படுத்தவேண்டும்." எதிர்கால வரலாறு எம்மை விடுதலை செய்யவேண்டுமானால், எம் கடந்த கால வரலாற்றினை நாம் விடுதலை செய்தாகவேண்டும்; தங்கிநிற்கும் மோழைத்தனமும் இரண்டாம்நிலைச்சமூகமென்ற தாழ்வுணர்வும் நீங்கும்படியாக, மற்றவர்களுக்கீடான எமது சாதனைகள், பங்களிப்புகள் பதியப்பட்டாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக, எதிர்கால இருத்தலை, சமூகத்திலே எமக்கான பங்கை நிச்சயப்படுத்தும் நோக்குடனேயே, நாம் இங்கே தமிழரின் வரலாற்றின் தொடர்ச்சியாக தமிழிணையவரலாற்றினையும் காணவேண்டும். மகாவம்சமும் பரணவிதாரணவும் அடித்துப்போட்டுப் போட்டு நிலையற்று அலையும் ஈழத்தமிழரின் கடந்த புவிசார்வாழ்வுக்கு ஈடான ஓர் இரண்டாம்நிலை(இணைய)த்தமிழ்வாழ்வினையே 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' என்ற சொல்லாடல், இச்'சுதேசமித்திரன் பாரம்பரிய'த்தை, அதைச் சார்ந்திருக்கின்றவர்களின் கதைகளுக்கு அப்பாலான எத்தமிழருக்கும் வழங்கும். மாலன் + லேனா தமிழ்வாணன் போன்றோரின் "வெறும் ஆறுமுகமாக வந்தவருக்கு நாவலர் என்பதைக் கொடுத்தவர்கள் நாம்" என்ற சொற்றொடர் வெறுமனே எஸ். பொன்னுத்துரை என்னும் ஒருவரின் நாவடக்கமுடியாத எதேச்சைப்பேச்சுக்கான எதிர்வினையென மட்டுமே கருதிவிட்டுப்போகமுடியாது. அக்கூற்றின் அடியிலேயிருக்கும் குமுதம்+கல்கண்டு ஆசிரியர்களின் நுண்ணரசியல், எம் சிந்தைத்தளத்தினை, அவர்கள் தருவதே வரலாறு என்ற கருத்துநிலைத்தளத்திலே அடக்கி ஒடுக்கும் தன்மையிலேயே எள்ளலாக வெளியிட்டுக் கக்குகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காலகட்டத்திலே அச்சு ஊடகங்கள், கேள்காண் ஊடகங்கள் இவற்றினை வளைத்துப்போட்டு அவற்றின் 'ஆசிரியரிடமிருந்து --&gt; வாசகர்களுக்கு' என்ற ஒற்றைத்திசைச்செயற்பாடுகளைத் தம் விருப்பப்படி இயக்கும், தோற்றம் தரச்செய்யும் விதமாக கைகளிலே வைத்துக்கொண்டிருக்கின்றவர்கள், இணையத்தின்பால் மிகவும் அவதானமாக அடுத்த நிலைக்கு நகர்கின்றார்கள்; &lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_2256.html"&gt;இதன் வழிப்பட்டதே, தமிழ் பேசும் இணையமும் அவர்தம் இயக்கத்தின்படி பொம்மலாட்டமிட வைக்கும் நோக்குடன், இவர்கள் நகரும் திசைதான், "தலையும் முண்ட அவயவங்களும் உங்களிடமேயிருக்கட்டும்; கழுத்தின் கட்டுப்பாட்டைமட்டும் எம் கைகளிற் கொடுங்கள்" என்பதற்கொப்பாக, வலைப்பதிவுகள் எப்படியாக நெறிப்படுத்தப்படவேண்டும், இயக்கப்படவேண்டும் என்பவற்றின் மீது தம் கருத்துகளைச் சாணக்கியத்தனமாக வரையறுத்து மாலன் போன்றோர் முன்வைக்கும் கருத்துகள்.&lt;/a&gt; இவற்றுக்கு ஆதரவாக, தம் ஆள்தலுக்கு, நெறிப்படுத்துதலுக்கு வசதிசெய்யும் இருக்கைகளை இணையத்திலே அமைத்துக்கொள்ள, தமக்குச் சாதகமான 'நீண்டகாலப்பாரம்பரிய'த்தினை வடிவமைக்கின்றனர்; சாதுரியமாக, இணையத்திலே தமிழுக்கான தம் பங்கினை 'இன்னாருக்கு இணையத்திலே தமிழ்ப்பொறி' படச்செய்தோமெனத் தம்மை முற்படுத்தும் பண்பும், 'வலைப்பதிவுவரை தொடரும் சுதேசமித்திரன் பாரம்பரியம்' போன்ற கருத்தாடல்களும் வாசிப்போரின் உளத்தளத்திலே நுணுக்கிப் பதிந்துகொள்ள இடமாகின்றது. (&lt;em&gt;மாலன் போன்றோரின் பிரபலம், அவரின் கருத்துகளை ஆராய்ந்து சரிபிழை பார்க்காமலே, எத்தனை வாசகர்களை நம்பவைத்திருக்கின்றதென்பதை அவரின் இணையம் பற்றிய கருத்துப்பதிவுகளுக்கு, மற்றும், எனக்கான எதிர்வினை இடுகைகளுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களே தெரியப்படுத்துகின்றன&lt;/em&gt;.)&lt;br /&gt;&lt;br /&gt;இப்பின்புலத்திலேயே மாலன் கூறிய தரவுக்கருத்துகளுக்கான எமது மாற்றுத்தரவுகளை முன்வைத்து, இன்னொரு திருத்தமான கண்ணோட்டத்திலே வரலாற்றினைக் கூறி எம் கருத்துநிலைத்தமிழர் விடுதலையைப் பெற வேண்டியிருக்கின்றது. ஆறுமுகத்துக்கு புகழ் அவருக்கு ஆதீனம் கொடுத்த நாவலர் பட்டத்தினாலல்ல. அவரைப் போன்றவர்களின் செயற்பாடுகளே அப்படியான ஒரு பட்டத்திற்கான தேவையினை, இருப்பினை உருவாக்கியிருக்கின்றதென்ற மறுதலைநிலைதான் உண்மை; நாவலர் என்ற பட்டமின்றியிருப்பதால், ஆறுமுகத்தின் திறமையிலே ஏது பங்கமும் ஏற்பட்டிருக்காது; ஆனால், ஆறுமுகம் போன்ற திறனாளர்களில்லாவிட்டால், 'நாவலர்' என்ற பட்டம் தக்கித்திருக்குமா? அங்கே உண்மையிலே பேசப்படவேண்டியது, நாவலர் என்ற பட்டத்துக்கு இருப்பை நாவலர் கொடுத்ததேயொழிய, ஆறுமுகத்துக்குப் பின்னால் நாவலர் ஒட்டிக்கொண்டதல்ல. ஆனால், அந்த தொப்புட்கொடியாக, சேயாக அங்கிகாரத்தினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கருத்துநிலைத்தமிழ்க்கைதிகளான ஈழத்தமிழரிடையேயேனும், மாலன் போன்றோர் "நாவலர் என்ற பட்டத்தைத் தந்தோம்" என்று ஏற்படுத்தும் மயக்கத்தினைத் தெளியவைத்து, அங்கீகார எதிர்பார்த்தலிலிருந்து கருத்துவிடுதலை செய்ய நாம் வரலாற்றினை மீண்டும் சொல்லவேண்டியதாகவிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக-ஈழத்தமிழரிடையே தொப்புட்கொடி உறவிருக்கவில்லை என்பதை நான் அவ்வகையிலேயே மாலனுடன் சேர்ந்து ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அப்படியாக ஒத்துக்கொள்வதற்கான என் காரணம், அவருடையதற்கொப்பானதல்ல; தாய்-சேய் உறவென்பதிலும்விட, ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகளே ஈழம்-தமிழகம் ஆகியவற்றின் தமிழ்ச்சமூகங்களென்ற எடுகோளின்பாற்பட்டதாகும். இரு தொப்புட்கொடிகளைக் கொண்டு சமகாலத்திலே ஒரு தாயிடமிருந்து பிறந்த குழந்தைகளென்பதே சரியானதாகும். ஆறுமுகத்துக்கு நாவலர் என்பதிலும், பரிதிமாக்கலைஞர் கொடுத்த 'வசனநடைகைவந்த வல்லாளர்' என்பதிலும் சிலிர்த்து மகிழ்ச்சியடையும் ஈழத்தமிழர்கள், இராமலிங்கவள்ளலாரோடு ஆறுமுகம் காட்டிய நாவன்மையையினையோ, தமிழிலே முதன்முதலாக -பரிதிமாக்கலைஞர் சுட்டிக்காட்டிய,"பொருட்டெளிவும் விரைவுணர்ச்சியும்' தரத்தக்க- நிறுத்தற்குறிகளை அறிமுகப்படுத்திய திறனையோ மறந்துவிடுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் கொடுத்தனுப்பிய தமிழகம்போலவேதான், வீரகேசரிக்கு வந்த வரா உம், இராமநாதன் நுண்கலைக்கல்லூரிக்கு வந்த இசை கற்பித்த மஹாராஜபுரம் சந்தானமும் பின்னாளிலே தமிழகத்திலே பெயர் பெறும்வரை வாழ இலங்கையும் வழிசெய்ததென்பதை 'சுதேசமித்திரன் பாரம்பரியக்காரர்கள்' மறை/றந்துவிடுகின்றார்கள். (&lt;em&gt;ஒரு வலைப்பதிவு நண்பர், தாம் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த கர்நாடக இசைச்செல்வி ஒருவரிடம் ஈழத்தின் பிரபலமான சில இசைக்கலைஞர்களின் பெயர்களைச் சுட்டிப்பேசியபோது, "யார் அவர்கள்?" அச்செல்வி கேட்டதாகச் சொன்னார்&lt;/em&gt;) தமிழக ஆதீனங்களுக்கு ஆறுமுகத்தம்பிரான்களையும் ஈழம் தந்திருக்கின்றது; அண்ணாமலைப்பல்கலைக்கழகத்துக்கு விபுலாநந்தரைத் தந்திருக்கின்றது; கனகசுந்தரம்பிள்ளை, தமிழ் அகராதி கண்ட கதிரவேற்பிள்ளை ஆகியோரைத் தந்திருக்கின்றது; வி. கல்யாணசுந்தரம் சொல்வதுபோல "சுவாமிநாதையர் கூரைபோட உதவிய தமிழ்ப்பதிப்புலகுக்கு, அடிக்கல்லிட்ட ஆறுமுகத்தையும் சுவர்கட்டியெழுப்பிய தாமோதரம்பிள்ளையும்" தந்திருக்கின்றது. தமிழாராய்ச்சி மகாநாட்டினைத் தொடங்க, உழைக்க தனிநாயகத்தினைத் தந்திருக்கின்றது. (&lt;em&gt;அதன் தொடர்ச்சியான தமிழாராய்ச்சி மகாநாட்டிலே சிதம்பரத்திலே ஆறுமுகநாவலரின் சிலை எழுப்பப்படும் என்று அன்றைய தமிழக அரசுத்தலைமைச்செயலர் சொல்லியும் அது தவறிப்போயிருக்கின்றது. தொடர்ச்சியாக, ஜெயலலிதா முதல்வராகவிருந்தபோது, ஈழத்திலிருந்து தமிழாராய்ச்சி மகாநாட்டுக்குப் போன தமிழறிஞர்களைச் சிறைவைத்த சம்பவமும் நிகழ்ந்திருக்கின்றது. இஃதெல்லாம் எப்பாரம்பரியத்தின் வழிப்பட்டது? சுஜாதா ரங்கராஜன்கூட "சிங்களத்தீவுக்கோர் பாலமமைப்போம்" எழுதினார். அந்நேரத்திலே மாலன் என்ன செய்தார்? கற்கண்டு இலெட்சுமணன் என்ன செய்தார்?)&lt;/em&gt; தமிழிலக்கியவிமர்சனத்துறையிலே மார்க்ஸிய அணுகுமுறைக்கு கைலாசபதியையும் சிவத்தம்பியையும் காலத்தே முந்தியதாக ஈழம் தந்திருக்கின்றது; தலித் எழுத்து முன்னோடியாக, 'பஞ்சமர்' டானியலைத் தந்திருக்கின்றது; கவிப்படிமத்துக்கும் ஒரு பிரேமிளை, அவரைத் தமிழகத்தவரென்றே மயங்கிக்கொள்ளுமளவுக்குத் தந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;1882 இலே தொடங்கிய சுதேசமித்திரனுக்கு ஏறக்குறைய நாற்பதாண்டுகள் முன்னமே இலங்கை உதயதாரகையைத் தந்திருக்கின்றது. சென்னையிலே பீற்றர் பார்சிவல் தான் நடத்திய 1855 இலே நடத்திய தினவர்த்தமானி வாரப்பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த உதயதாரகையின் ஓர் ஆசிரியரான கரோல் விசுவநாதபிள்ளையையும் சி. வை. தாமோதரம்பிள்ளையையும் கூப்பிட்டழைத்து சேவைக்குள்ளாக்கியிருக்கின்றார். இப்படியே பட்டியலை வளர்த்துக்கொண்டுபோனால், தமிழ்ப்பத்திரிகை, படைப்புலகிலே "எல்லாமே சுதேசமித்திரன் பாரம்பரியம் என்பதன் தொடர்ச்சி" என்பது சுக்குநூறாகிப்போகும். இத்துணைக்கும் இங்கே என் இக்குறிப்புகளின் எல்லை ஆக ஈழத்தின் தமிழுக்கான வழங்கலை முன்வைத்துமட்டுமே; தமிழகத்திலேயே சுதேசமித்திரன் பாரம்பரியத்துக்கு மாற்றுப்பாரம்பரியமென்பவை ஒன்றுக்கு மேலாகவிருக்கின்றன. அவற்றினை அவற்றின் நீட்சியும் விரிவும், என் அறிதலின் போதாமை கருதி இங்கே தவிர்த்துக்கொள்கிறேன். இவற்றினை அறிந்து தம்மைத் தாமே இரண்டாம் தள நிலையிலிருந்து, சேய்நிலை 'தரப்படுவதை'யே பெரிதெனக் கருதிப் புளகங்காகீதம் எய்தும் கருத்துச்சிறையிலிருந்து ஈழத்தமிழர்கள் விடுவித்துக்கொள்ள, நாம் வரலாற்றினைப் பற்றி, அவசியப்பட்ட போதெல்லாம் மீள மீளப் பேச வேண்டியதாகவேயிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலனைப் போன்றவர்கள் சுதேசமித்திரனுக்கு முன்/பின், பாரதிக்கு முன்/பின் (&lt;em&gt;இன்னமும் ஈழ-இந்திய அரசியல்நிலைகளிலே இராஜீவ் காந்தி கொலைக்கு முன்/பின்&lt;/em&gt;) என்று காலப்பகுதிகளைப் பிரிக்க அமைகோடு போடும் புள்ளிகளும் இதே மாதிரியாக மிகவும் அவதானமாகக் கேட்கும், வாசிக்கும்போதெல்லாம் 'இவையே/இன்னார்களே மூலாதாரங்கள், மீதியெல்லாம் சார்ந்ததெழுந்தவை' என்பதான உணர்வினை உளத்தளத்திலே மறைமுகமாகத் தூண்டிப் பதிக்கும் வகையிலே அமைபவை. (&lt;em&gt;கிரகோரியன் நாட்காட்டி &amp; கிறீஸ்து ஆண்டுக்கணக்குக்கு மாற்றாக தமிழர் நாட்காட்டி &amp;amp;amp;amp;amp;amp;amp; திருவள்ளுவர் ஆண்டு, இந்து, இஸ்லாமிய ஆண்டுகள் நாட்காட்டிகள் இவை பிறந்ததற்கான காரணமும் இப்படியான மாற்றுக்கண்ணோட்டத்தினையும் எதிர்நிலைகளையும் உணர்த்தவே. எமக்கும் அதுவே அத்தியாவசியமாகின்றது&lt;/em&gt;). எதற்காக, தமிழகத்தின் அறியப்பட்ட முதலாவது தமிழிதழிலிருந்து தமிழகத்தின் தாளிகைப்பாரம்பரியம் காலநீட்சி கருதிச் சுட்டப்படமுடியாது?&lt;br /&gt;&lt;br /&gt;இதே 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' இணையத்தளத்திலே கடை விரிக்கப்படும்போது, மீண்டும் கணிசமான பங்களிப்பினை ஆற்றிய தமிழ்நாட்டின் பெரும்பான்மையினரும் ஈழ, மலேசிய, சிங்கப்பூர், புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் அது வைக்கப்படும் பாங்கிலே தம் சுய அடையாளமிழப்பார்கள்; தமிழ்மறுமலர்ச்சி அடையாளத்தினை முன்வைத்துச் சங்கத்தமிழ்க்குடிநிலையை மீளக்கண்டெடுத்து, திராவிடப்பாரம்பரியம் கட்டமைக்கும் மறுமலர்ச்சித்திசையிலே சென்றதால், தமது மீனாட்சிசுந்தரம்பிள்ளை பாரம்பரியத்தைச் சுவாமிநாதைய்யர் பாரம்பரியமாகத் தாரைவார்த்துக்கொடுத்தவர்கள் செய்த தவற்றிலிருந்து இந்த "தமிழிலே முதல்" வரையறை செய்யப்படும் வரலாற்றுத்தவறு ஆரம்பிக்கின்றது. அச்சூடகங்களிலும் கேள்காணூடகங்களிலே தமது கிடுக்கிப்பிடியை வைத்திருக்கும் மாலன் போன்றோரின் 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' இணையத்துக்கு விரிகின்றபோது, -&lt;em&gt;முதற்படையெடுப்பிலே தோற்றாலும் அடுத்தடுத்த படையெடுப்புகளிலே&lt;/em&gt;- இணையத்திலே "தமிழில் முதல்" என்று அவராலே கண்டுபிடிக்கப்படுகின்றவர்களின் வரலாறு தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளும்வகையிலே அமைக்கப்பட்டு வந்துகொண்டேயிருக்கும்; இதனைத் தகுதியான தரவுகளோடு நாம் எதிர்கொள்ளப்படவேண்டும். தமிழினை முதலிலே இணையத்திலே ஏற்றியவர்கள், தமிழிலே முதற்தேடுபொறிசெய்தவர்கள், தமிழிலே முதல் இணையவுரையாடி அமைத்தவர்கள், தமிழிலே முதற்சஞ்சிகை அமைத்தவர்கள் இப்படியான *சரியான தரவுகளுடனான* வரலாறு -&lt;em&gt;எம்முடையது உட்பட&lt;/em&gt;- எல்லோரினதும் சான்றுடனான மொழிப்பங்களிப்பினை உறுதிப்படுத்தி, கருத்துநிலைதமிழ்ச்சுதந்திரத்தினை எமக்கும் எல்லோருக்கும் உணர்த்துவதாக அமையவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாகவே, கருத்துநிலையிலே தமது சொந்த(த் தமிழ்)ச் சமூகத்துள்ளேயே இரண்டாம்நிலைக்குடிமக்களாக உணராதிருக்கும் சுதந்திரம்வேண்டியே எவ்வரலாற்றினையும் - &lt;em&gt;தமிழர் நிகழ்நிலை வரலாற்றையோ, மெய்நிகர் இணைய வரலாற்றினையோ&lt;/em&gt; - நாம் திருப்பியும் திருந்தவும் சரியான தரவுகளைத் தாங்கி எழுத வேண்டிய அவசியமேற்படுகின்றது. எம் மொழி,குடி, பண்பு வரலாற்றை நாம் மாலன் போன்றவர்களின் கைகளிலிருந்து விடுதலை செய்யவேண்டியதாகின்றது. வாய்ஸ் ஆப் விங்க்ஸ் போன்ற நண்பர்களுக்கு (மீள) வரலாற்றினையெழுதலின் தேவையின்மையும் அதன் முக்கியம் உணர்வதற்கு முடியாததாக வெறும் உணர்வின் அடிப்படைப்பட்ட வெற்றுக்கூச்சலாகவும் படலாம். ஆனால், எனக்கு அப்படியாகத் தோன்றவில்லை. இணையத்தமிழ்வரலாற்றைப் பேசுவது மாலனுடன் வாதத்தினை வெல்வதற்குமப்பால், தனக்கென்றே ஒரு வரலாற்றுத்தேவையமைந்தாயுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;[&lt;em&gt;இம்மீட்டெடுத்தலைத் தம்மளவிற் செய்தவர்கள், தம் அடுத்த செயற்பாடாக, இன்றைய நிலையிலே தம் சுயத்தினைக் காக்க, காந்தி, வ.உ.சிதம்பரம் இவர்களின் வரலாற்றினைப் பாடமாக்கிக்கொள்ளலாம்; தாமே உப்பினைக் காய்ச்சுவதும் இராட்டையிலே கதர் இழைப்பதும் கப்பல்விடுவதும் முயற்சி செய்யமுடிந்தால், பதிப்பகங்களும் ஊடகமும் தம் நிலத்திலேயே வளர்க்கும் நோக்கும் தவறானதல்ல என்பது புரியும். ஆனால், இவை தனியே பேசப்படவேண்டிய விடயம். இப்பதிலுக்குப் பெருமளவிலே சம்பந்தமில்லாததால், இங்கே தவிர்க்கின்றேன்&lt;/em&gt;.]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கூற்று 2:&lt;/em&gt; &lt;strong&gt;தன்னதை ஒத்த கருத்தினைச் சொன்ன எத்தனையோ பேரிருக்க மாலன் தன்னை மட்டும் நான் (-/பெயரிலி.) கேள்விகளைக் கேட்டது காழ்ப்புணர்வின் அடிப்படையிலேயே என்று கூறியிருப்பதன்மேல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;காரணம் 1:&lt;/em&gt; தமிழ்க்கணிமை தொடர்பாக தமிழ் விக்கிபீடியாவினை நான் என்றைக்குமே தேடலுக்கு அணுகியதில்லை. அதனால், அங்கே இட்டிருக்கும் தகவல்களைத் திருத்தவேண்டுமென்ற எண்ணமேற்படவே வாய்ப்பில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;காரணம் 2:&lt;/em&gt; மாலன் ஆதாரமாகக் காட்டியிருக்கும் கோவிந்தசாமியின் கட்டுரையிலே ஏதேனும் வரலாற்றுச்சந்தேகத்தினைக் கேட்பதானால், நான் யாரிடம் கேட்பது? சொல்லப்போனால், பரஸ்பர நட்பு என்பதை ஓரமாக ஒதுக்கி விட்டுவிட்டு, அக்குறித்த கட்டுரை வாசிக்கப்பட்ட கருத்தரங்கிலேயிருந்த ஏனைய கணித்தமிழுக்குப் பங்காற்றியவர்களே கோவிந்தசாமியிடம் கேட்டிருக்கவேண்டும். அவர்கள் தவறவிட்டுவிட்டார்கள் (&lt;em&gt;என்றுதான் இதுவரை வாசித்ததை வைத்துத் தோன்றுகின்றது; வேண்டுமானால், அது வாசிக்கப்பட்டது, ஆரம்பகாலக்கருத்தரங்கொன்று என்பதாலே, இணைநிலையிலே அல்லது முதலிலே ஆங்காங்குத் தனித்தனியே செய்யப்பட்ட முயற்சிகள் கோவிந்தசாமிக்குத் தெரிந்திருக்கமுடியாததுபோலவே, மற்றைய கருத்தரங்கின் பங்காளிகளுக்கும் தெரியாதிருந்திருக்கலாம் என்றும் நாம் கொள்ளலாம்&lt;/em&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் 3: மாலன்(, அருணா) போன்ற ஊடகத்துறைப்பின்புலமும் பலமும் கொண்டு வருகின்றவர்கள் சொல்லும் கருத்துகள், தமிழூடகங்கள் தரும் தகவல்களை அப்படியே கேள்வியின்றிக் கேட்டுக் கடத்துகின்றவர்களின் தொகை எத்துணையென்பதற்கு மாலனின் பதிவுகளின் பின்னூட்டங்களே சான்று. (&lt;em&gt;இதுபோலவே சுஜாதாவின் அம்பலம் வலையுடையாடலுக்கு வாராவாரம் தீர்த்தயாத்திரைபோலச் சென்று வந்து வலையிலே அவர் தமக்கான வரிப்பதிலிட்டதையும் பேசிப்பெருமிதப்பட்டவர்களையும் கண்டிருக்கின்றேன்&lt;/em&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு உதாரணத்துக்கு மாலனின் பிரபலத்தினை நம்பி அவர் சொன்னவற்றினை அப்படியே எடுத்துக்கொண்டு போகும் வாசகர்களினால் தவறவிட்டவற்றிலே சிலவற்றினைக் காண்போம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;நேரடியாகத் தெரியும் உதாரணங்கள் சில: -&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;உ+ம் 1 :&lt;/em&gt; கோவிந்தசாமியின் கட்டுரையிலேயே 'தமிழ் முன்னமே இணையத்திலே எழுத்துருவாக ஏறியிருந்தாலும், கோவிந்தசாமியே அதை "செழுமைப்படுத்தி" வெளியிட்டவர்' என்ற அர்த்தத்திலே சொல்லப்படும்போது, "அப்படியானால், இணையத்தின் தமிழ்பிதா என்று எப்படியாக கோவிந்தசாமியைச் சொல்வது எப்படி?" என்று ஒருவரும் அருணாவினைக் கேள்வி கேட்டதாகத் தெரியவில்லை; ஏற்கனவேயிருந்ததாகச் சொல்லும் கோவிந்தசாமிக்கு மாலன் எப்படி 'இணையத்திலே தமிழேற்றப் பொறிதட்ட'ச் செய்திருக்கலாம் என்பதைப்பற்றியும் இவ்வாசகர்கள் கேட்டதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnation.org/digital/tamilnet99/govindasamy.htm"&gt;தமிழ்நேஷன் தளத்திலிருந்து கோவிந்தசாமியின் கட்டுரையிலிருந்து தேவையான பகுதி&lt;/a&gt; (தடித்த எழுத்தாக்கம் நான் செய்திருப்பது)&lt;br /&gt;/Tamil Eelam Page (http://www.eelam.com) was and is still very active in this direction. Tamil Nadu Home Page, and Tamil Electronic Library . (http://www.geocities.com/Athens/5180/index.html) are other popular Tamil Web Sites on Internet at that time. Tamil Electronic &lt;b&gt;Library was using (and is still using) a mono 7bit font (Mylai) for the Tamil display on the Web.However, Mylai font cannot support native emailing at that time.&lt;br /&gt;So there was a need to develop a Tamil Internet System which should go beyond Web display.&lt;/b&gt; In May 1995, I met Dr Tan at the Technet Unit, National University of Singapore, soon to become the Internet Research and Development Unit (IRDU) (now upgraded to Centre for Internet Research). We identified the potential solutions and agreed for a possible research collaboration between NUS and my institution, NIE, NTU, the two instititutions of higher learning in Singapore at that time. /&lt;br /&gt;நிலை இப்படியிருக்க, இன்றைக்கு &lt;a href="http://en.wikipedia.org/wiki/Naa_Govindasamy"&gt;ஆங்கில விக்கிபீடியாவரைக்கும் 'தமிழிணையத்தந்தை கோவிந்தசாமி' என்று எழுதப்பட&lt;/a&gt; இப்படியான கேள்வியெழுப்பாததும் விமர்சனத்தன்மையற்ற பிரபலமானவர்களின் சொற்களை அப்படியே நம்பி மலட்டுவாசிப்புச் செய்து அசைபோட்டு மீட்டும் மந்தைத்தன்மையுமே வழியமைத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;உ+ம் 2:&lt;/em&gt; மாலன் தந்திருக்கும் &lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html"&gt;ஐந்து ஆதாரத்தரவுகளிலே, குறைந்தது மூன்று ஆதாரங்கள், ஒன்றிலிருந்து மற்றொன்று வருவிக்கப்பட்டதாக வெளிப்படையாகத் தெரிகின்றன.&lt;/a&gt; ஆனால், இவ்வெள்ளிடைமலையை ஏன் அவரின் "ஆமாம் சார்" வாசகர்கள் காணமுடியவில்லை? கோவிந்தசாமியின் கட்டுரையிலிருந்து ஆல்பேர்ட்டும் அதிலிருந்து விக்கிபீடியாவும் எடுத்துப்போட்டிருப்பதை மாலனின் "அன்புள்ள பெயரிலிக்கு" இடுகையைத் தொடர்ந்து வாசிக்கும் எவருமே உணர்ந்துகொண்டிருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;உ+ம் 3:&lt;/em&gt; வருவிக்கப்பட்ட விக்கிபீடியாவின் தரவினை யாராவது முதலாவது ஆதாரமாகத் தரமுடியுமா என்று யோசித்துப்பார்த்தார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;உ+ம் 4:&lt;/em&gt; இணையத்திலே உடனடியாகத் தமிழினை ஏற்றிவிடத் துடிக்கும் வகையிலே சிங்கப்பூரிலே தன்னிடம் இணையம் பற்றிப் பொறிபடச் சொன்ன மாலனைப் பற்றி, இணையத்திலே தமிழ் ஏற்றிய தன் மகாநாட்டுக்கட்டுரையிலே ஏன் கோவிந்தசாமி சொல்லவில்லை என்பதும் எவருக்கும் கேள்விக்குரியதாகத் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;கொஞ்சம் தேடி முயன்றிருந்தால், (மாலனும் தன் தவறினை ஒப்புக்கொள்ளும்படி) அவரின் இணையவரலாற்றினைப் பாராட்டும் வாசகர்கள் கண்டிருக்கக்கூடிய உதாரணங்கள் சில: -&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;உ+ம் 5:&lt;/em&gt; கணியன்/தமிழ்நெட் என்பன கோவிந்தசாமியின் விசைப்பலகை/எழுத்துரு இணை; அதற்கும் கணியன் இதழுக்கும் கணியன் பூங்குன்றனாரின் கவிதைக்கும் வித்தியாசங்கள் உண்டென்பது எனக்குத் தெரியாமலில்லை. அதேபோலவே, தமிழ்நெட் என்ற பாலா பிள்ளையின் மின்னஞ்சற்குழுவிலே 96 இன் பின்னரையிலிருந்து இருந்தேன் என்பதால், அதற்கும் (&lt;em&gt;அது பயன்படுத்திய முரசு-அஞ்சல்/இணைமதி எழுத்துருவிணைக்கும்&lt;/em&gt;) தமிழ்நெட் எழுத்துருவுக்கும் உள்ள வித்தியாசம் எனக்கும் தெரியும். கோவிந்தசாமியின் நண்பரும் உத்தமம் அங்கத்தவருமான மாலனுக்கு கோவிந்தசாமியின் எழுத்துரு தமிழ்நெட் என்பதைக்கூடத் தெரியவில்லையென்பது சோகமான விடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;உ+ம் 6:&lt;/em&gt; ஆல்பேர்ட் சிங்கப்பூரின் தமிழிணையக்கருத்தரங்கிலே கோவிந்தசாமி குறித்த தன் கட்டுரையை வாசித்ததாக மாலன் சொல்கின்றார். மாலன்கூட கலந்து கொண்ட அக்கருத்தரங்கிலே ஆர்பேர்ட் அக்கட்டுரையை வாசித்தாரா? ஆல்பேர்ட் &lt;a href="http://web.archive.org/web/20041226203230/e-sangamam.com/naago.asp"&gt;தன் கட்டுரையை&lt;/a&gt; எழுதியது, உத்தமத்தின் மின்மஞ்சரியிலே தோன்றி, பின்னால், அவர் தான் நடத்திய ஈ-சங்கமம் என்ற இணையவிதழின் ஏழாம் இணையத்தமிழ்ச்சிறப்பிதழுக்காக மட்டுமே இடப்பட்டதென ஞாபகம். அதே இதழிலேயே &lt;a href="http://web.archive.org/web/20041226203230/http://e-sangamam.com/7thconf.asp"&gt;மாலனும்&lt;/a&gt; &lt;a href="http://web.archive.org/web/20041226203230/http://e-sangamam.com/madal1.asp"&gt;இராம. கி&lt;/a&gt; உம் கட்டுரைகள் எழுதியிருந்தார்கள் என்பது மேலதிகத்தகவல். &lt;a href="http://www.tamilnation.org/hundredtamils/naag.htm"&gt;Tamil Nation தளத்திலே ஓரிடத்திலே தவறாகச் சொல்லப்பட்டிருப்பதை&lt;/a&gt; அப்படியே எடுத்துப் போட்டதால் ஏற்பட்ட பிழை இஃதில்லையென்றால், ஏழாவது தமிழிணையக்கருத்தரங்கிலே சிங்கப்பூரிலே வாசிக்கப்பட்டதாவென மாலன் உறுதிப்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல, இலகுவிலே தகர்ந்துவிடக்கூடிய, ஓட்டை நிறைந்த பாத்திரங்களிலே (&lt;em&gt;பின்னைய இடுகைகளிலே இவை பற்றியும் மேலதிகமான புது ஆதாரங்கள் பற்றியும் மேலும் விபரமாக எழுதுவேன்&lt;/em&gt;) நீர் நிரம்பியிருப்பதாக "சார், நல்ல விளக்கம்!", "இ-தமிழின் வரலாற்றை அறிய வைத்தமைக்கு நன்றி" என்று வாசகர்களை எண்ண வைத்துக்கொண்டு நகரவைப்பது, மாலனுக்குச் சாத்தியப்படுகின்றதென்றால், அதற்கு அவரின் புன்புலம் தந்த பிரபலமே காரணம். இப்பிரபலம் வாசகர்களிடையே பரப்பக்கூடும் வரலாற்றுப்பிறழ்வுகளை, மாலன் நான் ஏன் கேள்வி கேட்டிருக்கக்கூடாதென வினாவிச் சுட்டும் மற்றவர்கள் (இணையத்தமிழ் குறித்த விடயங்களிலே தமிழ்விக்கிபீடியா நண்பர்கள், ஆல்பேர்ட் போன்றோர்) விட்டிருந்தால், தப்பித்துப்போகமுடியாது; சொல்லப்போனால், அவர்கள் சரியாகச் சொன்னாலுங்கூட, மாற்றுக்கருத்துகள், முரண்படும் தரவுகள் தென்படுகின்றதா எனத் தேடுகின்றவர்களே அதிகமாகவிருப்பார்கள். அதுவும் மாலன் போன்றவர்களின் வரலாற்றினைத் திருத்த முயற்சிக்கும்போது, "மாலன் சார், இவ்வளவு பொறுப்பாக பதில் சொல்லித்தான் தீரவேண்டுமா? இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அபாயம் இருக்கிறது", "காய்த்த மரத்தில் கல்லெறிவது நல்லதுதான் போலும்; இல்லையெனில் இத்தனை 'கனிகள்' விழுமா என்ன ..?", என்று கண்ணைமூடிக்கொண்டு வருகின்ற நிலைதான் எம்மிடையேயிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.vikatan.com/av/2004/feb/01022004/av0906.shtml"&gt;சுஜாதா&lt;/a&gt; குறித்து &lt;a href="http://domesticatedonion.net/tamil/?p=148"&gt;வெங்கட்&lt;/a&gt; எழுதியிருக்கும் பதிவும் &lt;a href="http://wandererwaves.blogspot.com/2007/07/blog-post.html#c3801716457734083443"&gt;இரவிசங்கர் சொன்ன கருத்தும்&lt;/a&gt; 'பிரபல்யம் தரும் இப்படியான வரலாற்றுப்பிறழ்வுப்பிரச்சனை' பற்றிய என் கருத்தினை மேலும் பலப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, மாலன் என்பவர் பேசும்போது, அவரிடம்மட்டும் நான் கேள்விகளைப் போட்டதற்கான மூன்றாவது காரணம், இப்படியான வரலாற்றுப்பிறழ்வே வரலாறென வாசகரிடையே வாசகரால், மாலனின் வசனங்களாலே இறுகிப்பதிந்துபோகும் இலகுத்தன்மையை ஆரம்பத்திலேயே தகர்த்து சரியான அத்திவாரமிட்டு நேரே நிமிர்த்தவேண்டுமென்பதாலேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;காரணம் 4:&lt;/em&gt; இந்த நான்காவது காரணம் எனக்கு - ஈழத்தமிழனென்றளவிலே - மிகவும் அவசியமானது. மாலன் என்ற பத்திரிகையாளரை, சஞ்சிகையாசிரியரை, தொலைக்காட்சிச்செய்தியாளரை அவரைக் காசு கொடுத்து அச்சுவடிவமாக, ஓரளவுக்குச் காண்கேள் செய்தியாக நான் வாசித்திருக்கும் கடந்த இருபத்தெட்டு ஆண்டுக்காலத்திலே முதன் முறையாக நான் கேள்விகளைக் கேட்டு அவர் உலகலாவிய பல இலட்சம் வாசகர்களிலே ஓர் ஈழவாசகனாக எண்ணிக்கொண்டு, தப்பிப்போகமுடியாத சூழலை இந்த இணையம் ஏற்படுத்தித்தர, எனக்குக் கேள்விகள் கேட்கவேண்டியிருந்த புள்ளிகளிலே அவரே தன் கருத்துகளைச் சொல்லி முடுக்கிவிட்டு வாய்ப்பினைத் தந்திருப்பது. மாலனின் ஈழம்-இந்தியா தொடர்பான நிலைப்பாடு, அரசியல், எனது ஈழம்-இந்தியா தொடர்பான நிலைப்பாடு, அரசியல் என்பவற்றினையும் கடந்து, ஓர் ஊடகவியலாளரை அவரின் சேவைக்கு இருபத்தெட்டாண்டுகள் ஏதோ விதத்திலே அப்போதும் இப்போதுமாக சொந்தப்பணம் தந்து பெற்றுக்கொண்டிருக்கும் (&lt;em&gt;ஒரு தமிழ்ச்சமூகத்தின்&lt;/em&gt;) ஒரு வாசகன், பயனாளி அவர் பதில் சொல்லாமல் தப்பிக்கமுடியாத தளத்திலே, வகையிலே கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் இது. இப்படியான தேவை எனக்கு விக்கிபீடியாவினரிடமோ ஆல்பேர்ட்டிடமோ கோவிந்தசாமியிடமோ இல்லை; இராமிடமிருக்கின்றது, சோவிடமிருக்கின்றது, ஜெயக்காந்தனிடமிருக்கின்றது; மாலனிடமிருக்கின்றது. மாலனிடம் இணையத்தமிழுக்கு அப்பாலும் கேட்கவேண்டிய கேள்விகளிருக்கின்றன; அதற்கான களத்தினை அவர் &lt;a href="http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_05.html"&gt;செல்வநாயகியின் பதிவிலும்&lt;/a&gt; தமிழ்சசி போன்றோரின் &lt;a href="http://blog.tamilsasi.com/2005/11/1.html"&gt;முன்னைய பதிவுகளிலும்&lt;/a&gt; எனக்கான &lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html"&gt;எதிர்வினையாகவும்&lt;/a&gt; ஏற்படுத்தியிருக்கின்றார். அதனாலேயே தேர்ந்தெடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கான அரசியற்கேள்விகளை இங்கே இவ்விடுகையிலே எழுப்பவில்லை; இத்தொடரிலே பிறகு வரும் இடுகைகளிலே பார்த்துக்கொள்ளலாம். ஆனால், நான் மேலிருக்கும் பந்தியிலே அவரிடம் கேள்வி கேட்பதற்கான காரணமாகச் சொன்னதன் பின்புலத்தினையும் தேவையையும் மேலும் விரிவாக்கி, நிகழ்வுகளின் சுருக்கமாகச் சொல்லவிரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் பின்னோக்கி எழுபதுக்குப் போவோம். ஊரிலே எனது வீட்டினைச் சுற்றிய பகுதியிலே அப்பகுதியினரிடம் மாதாமாதம் சேகரிக்கப்படும் தொகையை வைத்துக்கொண்டு, தினசரி, சஞ்சிகைகள், நூல்கள் வாங்கி நடத்தப்படும் நூலகம். இதுபோலவே பத்துப்பன்னிரெண்டென ஊருக்குள்ளே நூலகங்கள்; தவிர, தனியவே தத்தமது வாசிப்புக்காக, வீடுகளிலே வாங்கும் சஞ்சிகைகள்; எழுபதுகளின் ஆரம்பத்திலே அம்புலிமாமாவோடும் கட்டப்பட்ட கண்ணன் தொகுப்புகளோடும் சிறுவர் உலகம் எனக்கும் என் வயதொத்தவர்களுக்கும் விரிந்தது. அம்புலிமாமா வகையிலே வந்த இலங்கையின் நட்சத்திரமாமாவினை ஒதுக்கினோம். பின்னர், எழுபதுகளின் பின்னரையிலிருந்து, மிஸ்டர் வேதாந்தம், துப்பறியும் சாம்பு, தில்லானாமோகனாம்பாள், பொன்னியின் செல்வன் தொடக்கம், வரும் அத்தனை தமிழ் குடும்ப, 'பெண்', சினிமா, சிறுவர் இதழ்களோடு, பெமினா, இலஸ்ரரேட் வீக்கிலி, பிலிமாலயா ஈறாக அடங்கும் உலகமாக விரிந்தது. இதயம் பேசுகிறது, மயன், குங்குமம், சாவி, திசைகள், வண்ணத்திரை, மங்கையர்மலர், ராணி, அலிபாபா, ராணிமுத்து, கல்பனா, மாலைமதி, கல்கண்டு, துக்ளக், முத்து &amp; வாசு காமிக்ஸ்கள் உட்பட்ட திரிசியம் தெறிக்கும் வானவில்வகை தமிழக, இந்தியப்பதிப்புகளையும் உற்பத்திகளையும் காசைவிட்டு வாங்கித்தள்ளினோம்; 'இதயம் பேசுகிறது' வேங்கடசுப்பிரமணியன் இலங்கை வந்துபோனபோது, எங்கே நம்மூரைப் பற்றியும் ஏதேனும் குறிப்பு இவ்வாரமேனும் வருமா என்று காத்திருந்தோம். .. காத்திருந்தோம்.... காத்திருந்தோம்.... அவர் எழுதாமல் ஏமாற்றியபோதுங்க்ட, அவர் ஆனந்தவிகடனிலிருந்து லட்சுமி சுப்பிரமணியம், மாயாவுடன் சென்று நடத்திய அந்த இதயம் பேசுகின்றது இதழினையும், அவர் பதிப்பித்துத்தள்ளிய அத்தனையையும் வாங்கினோம். ஆனால், ஈழக்கவிஞர்கள், படைப்பாளிகளை இன்னாரெனச் சிலர் அறிந்திருந்தாலுங்கூட, பெரிதளவு ஊக்குவிக்கவில்லை. அதன் பின்னால், எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரே, பிரமிள் என்னும் ஒரு கவிஞர் தமிழகத்திலேயிருக்கின்றார் என்று தெரிந்தது, அதற்குப் பின்னும் மூன்றாண்டுக்குப் பின்னர்தான் அவர் எம் தெருக்காரராகப் பிறந்து வளர்ந்திருந்து தமிழகத்துக்குப் பெயர்ந்தவர் என்பதும் தெரிந்தது. ஆனாலும், அதைப் பற்றியேதும் அச்சமும் நாணமுமுறாமல் இந்திய இராணுவக்காலத்தின் செயற்பாடுகளின்போதும் அதன் பின்னும் எம்மைத் திட்டித் தள்ளிய, இந்திய இராணுவத்தின், அரசின், இந்தியத்தூதுவரின் அத்துமீறல்களைப் பற்றி ஒரு குண்டூசிச்சத்தமோ சொல்லோ எழுப்பாதும் அழகிகள் வண்ணப்படங்களுடம் மினுமினுங்கி வந்த தமிழகத்தின் புதுபுதுச்சஞ்சிகைகள் பத்திரிகைகளையும் வாங்கினோம். எண்பத்தேழிலிருந்து (என்று ஞாபகம்; சரியாகத் தெரியவில்லை) தொண்ணூற்றி இரண்டு வரைக்கும் உழைக்கத்தொடங்கிக் காசு கை கண்டபோது, சொந்தக்காசைவிட்டே இந்தியா ருடே, துக்ளக்(, சரிநிகர்) இவற்றினை எங்கள் அயல் நூலகத்துக்கு நானே எடுத்துக்கொடுத்துக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இராணுவம் குறித்து எவ்விதமான விமர்சனத்துக்கும் உட்படுத்தாது, ஈழத்தமிழருக்கு எது வேண்டுமென்று தாமே தீர்மானித்துக்கொண்ட துக்ளக் போன்ற சஞ்சிகைகளை இறக்குமதி செய்து சொந்தக்காசினை விட்டு வாங்கிக்கொண்டபொழுதிலேதான், இந்திய இராணுவம் ஈழத்தமிழரின் நலனுக்காக வந்திருப்பதாக, இந்திய இராணுவ ஆதரவுச்செய்தியூடகங்களிலே ஜெயக்காந்தன் என்பவரும் மாபொ சிவஞானகிராமணியாரும் எங்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதுதான் முரண்நகை; ஜெயக்காந்தனையும் சிவஞானத்தினையும் விட்டு ஈழத்தமிழருக்குச் சொல்லக் காரணம், அவர்கள்மீதான ஈழத்தமிழருக்கான இலக்கியப்பரிச்சயம் என்பதுதான். காசை விட்டு அவர்களின் படைப்புகளையும் உரைகளினையும் கேட்ட் ஈழத்தவர்களை அவர்களுக்குப் பரிச்சயமிருந்திருக்குமா என்பது இன்றைக்கும் எனக்குள்ளே கேள்விக்குறியே. இப்படியாக, ஜெயக்காந்தன் சொல்லிக்கொண்டிருந்த வேளையிலேதான் அவரை ஆண்டாண்டுக்குப் புண்ணியயாத்திரையாகப் போய்த் தரிசித்து வந்த டொமினிக் ஜீவா பாடசாலையிலே பிள்ளைகள் பயன்படுத்தும் தாள்களைப் போன்ற கடதாசியிலேனும், தன் மல்லிகையைப் பிழைக்க வைக்கமுடியுமா என்று வழி பார்த்துக்கொண்டிருந்தார். ஜெயக்காந்தன் அதைப் பற்றி எதையும் வானொலியிலே எங்களுக்குச் சொல்லவில்லை. எல்லாம் முடிந்து பதினைந்து ஆண்டுகளின்பின்னால், "இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளோடு மோதாமல் திரும்பி வந்திருக்கவேண்டும்" என்ற விதத்திலே ஐங்கரநேசனுக்குச் செவ்வி கொடுக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இப்படியான காலத்திலெல்லாம், குமுதம், இந்தியா ருடே, அவுட்லுக், புரொண்ட் லைன் முதல் எங்களை(யும்) வாசகர்களாகக் கொண்ட சஞ்சிகைகளோ இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைப் பற்றி ஒரு வசனமேதும் உதிர்க்கவில்லை; புத்தகவாசனைக்காற்றிலேகூட விசனிக்கக்கூட இல்லை. மீள மீள தம் அரசின் நிலைப்பாட்டினையே பாடிக்கொண்டிருந்தன; எங்களின் தவறுகளாக தமது செயற்பாடுகளைச் சுமத்தி அவ்வப்போது தேவைக்கேற்ப நியாயப்படுத்திக்கொண்டிருந்தன; அல்லது, பேச்சேயில்லாமலிருந்தன. நாங்கள் தொடர்ந்து குமுதம், இந்தியா ருடே, துக்ளக், கல்கண்டு, கல்கி ஆகியவற்றைச் சலிக்காமல் அகதிக்காசு வந்தபோதும் விட்டு வாங்கிக்கொண்டேயிருந்தோம். ஆக, எம் நிலையைப் பேசியவர்கள் நாங்கள் ஒருபோதும் வாங்கவே எண்ணியிருக்க வாய்ப்பில்லாத, அறிந்திருக்காத ஓரிரு இந்தியச்சிறுபத்திரிகையாளர்களும் பதிப்பாளர்களுமே.&lt;br /&gt;&lt;br /&gt;தொண்ணூறுகளின் பின்னால், புலம்பெயர்ந்த ஈழத்தவரினைக் குறி வைத்த பெருவணிகச்சஞ்சிகைகள் அவதானமாக ஈழத்தவர்கள் என்ற பெயரிலே அரசியல் சாராத அல்லது அரசியற்சோரம்போன அல்லது விடுதலைப்புலிகளுக்கெதிரான நிலைப்பாடுள்ள அல்லது இந்திய ஆதரவுநிலைப்பாடுள்ள புலம்பெயர்ந்தவர்களை ஈழத்தவர்கள் என்ற பெயரிலும் ஈழத்தவரின் பன்முகத்தலைமைகள் என்ற பெயரிலும் முன்னிலைப்படுத்தின. குமுதம், யாழ்மணம் என்பதினை வெளியிட்டபோது, கேட்காமலே அள்ளிப்போட்டவற்றினை விட்டால் [&lt;i&gt;எப்படி எனக்குத் தெரியுமென்றால், நான் உயிர்நிழலிலே எழுதிய ஒரு கோழிமுட்டைத்துக்கடாவை அள்ளிக் கவிதை என்று வகை பிரித்துப்போட்டதனாலேதான்&lt;/i&gt;], மிகவும் கவனமாக, ஈழத்திலே அப்போதும் வாழும் தமிழர்களின் படைப்புகளைத் தவிர்த்துக்கொண்டன. அரசியலை மிகவும் இலகுவாக இராஜீவ் காந்தி கொலைக்கு முன்னால்/பின்னால் என்பதாக மட்டுமே நிலைப்படுத்திக்கொண்டு செயற்பட்டன. அப்போதுங்கூட, புலம்பெயர்ந்தும் பெயராதிருந்தும் குமுதம், இந்தியா ருடே, துக்ளக் இவற்றினை வாங்கிக்கொண்டு மேலதிகமாக சன் தொலைக்காட்சிக்கும் செய்மதியுணர்தி பொருத்திப் பார்த்துக்கொள்ளத் தொடங்கினோம் - எல்லாமே எம் சொந்தக்கையிருப்பினை விட்டுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேநேரத்திலே, எங்களுக்கு, சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலருக்குப் பட்டம் கொடுக்கப்பட்டதை இதே சஞ்சிகைகளின் ஆசிரியர்களே எடுத்துச் சொன்னார்கள். அதன் பின்னால், பத்தாண்டுகளிலே பார்த்தால், அதே லேனா தமிழ்வாணனின் அண்ணன் ரவி தமிழ்வாணன் ஈழம், புலம் அனைத்திலும் அலைந்து பதிக்க, "சோளங்கதிர் ஐந்து வாங்கினால், ஒன்று இலவசம்" என்ற வகையிலே படைப்பாளிகளைத் தேடிப்பிடித்தார். இந்திய பதிப்பகங்களோ, பத்திரிகை+சஞ்சிகைகள், திரைப்படங்கள் பெரிதான பொருளாதார அளவிலே ஈழத்தமிழரையோ புலம்பெயர்ந்தவர்களையோ நம்பியில்லை என்பதை அறிவேன். ஆனால், ஆனந்தவிகடன் தொடங்கிய காலத்திலிருந்து எமது கைப்பொருளைவிட்டு வாங்கிய இச்சஞ்சிகைகளோ ஊடகசேவைகளோ தம் நாட்டின் மீதான குற்றங்களை முற்றாக மறைத்துவிட்டும் ஈழத்திலான தம் நோக்கத்தினைத் தம் நாட்டின் அதேமொழிபேசும் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தாமலுமிருந்துவிட்டு (&lt;em&gt;திரித்ததையும் சேர்த்துக்கொள்ளலாம்&lt;/em&gt;), தொடர்ந்தும் எம்மை வாடிக்கையாளராகக் கொண்டிருப்பது,எம்மைப் பற்றிய இவர்களின் உட்கருத்தினை மிகவும் தெளிவாகக் காட்டிவிடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எமது கருத்துகள் இந்திய இராணுவத்தின் இலங்கைக்கான வருகையின் பின்னால், ஒரு போதும் இச்சஞ்சிகைகளிலே, ஊடகங்களிலே தெரியப்படுத்தப்பட்டதில்லை. கிட்டத்தட்ட ஈராக்குக்கு படையினரோடு சென்ற அமெரிக்கப்பத்திரிகையாளர்கள்போலவே தமிழ்நாட்டின் பத்திரிகையாளர்கள் செயற்பட்டுக்கொண்டார்கள். இராம், மாலன், சோ போன்ற இதழாசிரியர்கள் இன்னமும் ஒரு படி மேலே சென்று இந்த அரசியலிலே தமக்கான ஒரு நிலைப்பாட்டினைக்கூட எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு அப்படி எடுக்க இருக்கும் உரிமையை எவ்வகையிலும் நான் மறுக்கவில்லை. ஆனால், அவர்கள் ஆசிரியர்களாகவிருக்கும் ஊடகங்கள், சஞ்சிகைகள், செய்திநிறுவனங்களிலே பணம் விட்டு வாங்கிக் காணும் எல்லா வாசகர்களுக்கும் பேதமின்றிக் கருத்தினைச் சொல்லும் சந்தர்ப்பத்தினையும் செய்திகளைச் சரியான தரவுகளோடு எவருக்குச் சாதகம்-பாதகம் என்றில்லாமலே தந்திருக்கவேண்டும். ஆனால், ஒருபோதும் செய்யவில்லை. எங்கள் குரலைக் கேட்கவிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான பத்திரிகையாளர்களுக்கு, செய்தியாளர்களுக்கு ஒரு பிரபல இந்திய ஊடகவியலாளர் காஷ்மீர் நிலை குறித்து இந்தியா-பாக்கிஸ்தான் மக்களைக் குறித்து ஊடகங்களின் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்திச் சொன்னதை இச்சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்; "...before talking of any political solutions, misgivings have to be cleared. An average Indian especially from the south sees Kashmir only on TV or in the paper and perceives Kashmiris to be unpatriotic or ungrateful. Perhaps the media is responsible for this portraiture. This has to be rectified. Possibly a similar situation prevails with reference to Pakistan. There is a very colonial mindset with a series of biased perceptions against each other. Without clearing the air, it is not possible to put forward a solution. There is a very large constituency for peace and this has to be strengthened before moving towards any solution. And, yes, there is definitely a need for more interaction with Kashmiri journalists..." இத்தகைய களநிலையை, உண்மைநடப்பினை, தமிழ்நாட்டின், இந்தியாவின் பத்திரிகையாளர்கள் தம் உற்பத்தியினைத் தொடர்ந்து வாங்கும் ஒரே மொழி பேசும் ஈழத்தமிழருக்காக, அவர்களின் குரல்களையும் கேட்டு, தமது சொந்தநாட்டிலிருக்கும் வாசகர்களுக்கும் அடுத்த பக்கத்தினைச் சொல்லியிருக்கச் செய்திருக்கவேண்டிய அவசியமும் வாய்ப்புமுள்ள பத்திரிகைநெறியும் வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தவேண்டிய கடப்பாட்டு வியாபாரநெறியுமிருந்திருக்கின்றன. ஆனால், மாலன், லேனா போன்ற ஆசிரியர்கள், உதவியாசிரியர்கள் செய்யவில்லை. எங்கோ ஆங்கிலம் பேசும் அமெரிக்கா அரபு பேசும் ஈராக்குள்ளே நுழைவதற்காக யுத்தத்தினை எதிர்த்துக் குரல் எழுப்பி தமிழிலேயும் ஆங்கிலத்திலேயும் ஆர்ப்பாட்டம் பண்ணுவதிலே மும்முரமாகவிருந்திருக்கின்றார்கள். யாரோ ஆங்கிலம் பேசும் அமெரிக்க ஊடகவியலாளர்களிலே ஓரிருவரேனும் விழித்துக்கொண்டு, அரபுத்தேசத்திலே அபு கிராப் பற்றியோ, அமெரிக்க இராணுவத்தினர் சிலரின் ஈராக்கியப்படுகொலைகள், பாலியல்வன்புணர்வுகள் பற்றிப் பேசும்போதும், அந்த அழுத்தத்திலே அமெரிக்க அரசு சம்பந்தப்பட்டவர்களிலே விசாரணை நடத்தும்போதும் நியாயம் நிகழ்ந்ததென இப்பத்திரிகையாசிரியர்கள் வரவேற்கின்றார்கள். ஆனால், இன்றைய நாள்வரை அதேபோன்ற இந்திய இராணுவத்தின் ஈழச்செயற்பாடுகள் குறித்து ஏன் விசாரணை எழுப்பப்படவில்லையென்றோ என்ன நடந்ததென்றோ ஒரே மொழி பேசும், ஈழத்தமிழருக்கு இன்னமும் பதிப்புற்பத்தி ஏற்றுமதி செய்யும் தமிழகப்பத்திரிகையாளர்களோ, செய்தியாசிரியர்களோ அதைப் பற்றி ஒரு சொட்டுச்சத்தமுமெழுப்பவில்லை. நாங்கள் தொடர்ந்தும் குமுதம், கல்கி, துக்ளக், இந்தியா ருடே, புரொண்ட் லைன் வாங்கிக்கொண்டு, சிவாஜி படத்திலே "யாழ்ப்பாணப்பெண்ணெடுப்பது" குறித்து ஒரு வரி சொன்னது எமக்கான அங்கீகாரமெனப் புளகாங்கீதம் அடைந்துகொள்கிறோம். (&lt;i&gt;இங்கேதான் என் முதற்கூற்றிலே சொல்லப்பட்ட கருத்துநிலைவிடுதலை அவசியமாகின்றது. எவரது அங்கீகாரமும் எமக்குத் தேவையில்லை; ஆக, நாம் எதிர்பார்ப்பது, சமதட்டிலிருக்கும் சக நண்பர்களையே&lt;/i&gt;)&lt;br /&gt;இத்தனைக்குப் பிறகு, இப்படியான அவலச்சூழலிலே அவம்சுமக்கும் தன் ஊடகவியலாளர் முகத்தினை இன்னமும் இணையத்திலே(யும்) காவி வந்து "விடுதலைப்புலிகளையா இந்துவையா உலகம் நம்பும்?" என்று மாலன் வெட்கமின்றி எம்மிடம் கேட்கும்போது, இத்தனை ஆண்டுகளாக குமுதத்துக்கும் இந்தியா ருடேக்கும் நான் விட்டழித்த காசின் பெயரினாலே, தமிழகச்சஞ்சிகைகளில் இழந்த நம்பிக்கையின் பேரால், ஒரு வாசகனாக, ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளனாக, அவரிடம், அவரது பத்திரிகாதர்மம் மேலே, இங்கே -&lt;i&gt;அவர் தப்பித்துப்போகமுடியாத,என் குரலும் அமுக்கமுடியாது கேட்கும் இணையத்திலே&lt;/i&gt;- கேள்வி கேட்காமல், வேறெங்கே, வேறு யாரிடம், வேறெப்போது, வேறெதைப்பற்றி நான் கேட்பது? இதைக் காழ்ப்புணர்விலே கேட்கின்றேன் என்று அவர் கருதினால், "இத்தனை நாள் உங்கள் உற்பத்திகளைத் தரம், குணம், மணம் பற்றியேதும் கேட்காமல் வாங்கிக்கொண்டேயிருந்த எங்களின் அவலங்கள் பற்றி ஒரு சொல் உங்கள் சஞ்சிகைகளிலே, செய்திகளிலே உங்கள் நாட்டுக்கோ, இராணுவத்துக்கோ மாற்றானதாக விடாத உங்களின் உணர்விலே எம்மைப் பற்றிக் காழ்ப்பிருந்திருக்கவில்லையா? ஓர் இரண்டாம்நிலைத்தமிழர்களென்ற கீழ்நோக்கிய பார்வையிருக்கவில்லையா? " என்று நான் எதிர்க்கேள்வி கேட்கலாமா? &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் பின்னால், "விடுதலைப்புலிகளையா இந்துவையா உலகம் நம்பும்?" என்று இங்கே இணையத்திலே எள்ளலாகக் கேட்பவர், &lt;a href="http://web.archive.org/web/20041126035006/http://www.panos.org.np/resources/reports/composite_dialogue/composite_dialouge.htm"&gt;"...before talking of any political solutions, misgivings have to be cleared. An average Indian especially from the south sees Kashmir only on TV or in the paper and perceives Kashmiris to be unpatriotic or ungrateful. Perhaps the media is responsible for this portraiture. This has to be rectified. Possibly a similar situation prevails with reference to Pakistan. There is a very colonial mindset with a series of biased perceptions against each other. Without clearing the air, it is not possible to put forward a solution. There is a very large constituency for peace and this has to be strengthened before moving towards any solution. And, yes, there is definitely a need for more interaction with Kashmiri journalists..." என்று இலங்கையிலே பெந்தோட்டவிலே நடந்த இந்திய-பாக்கிஸ்தான் உறவுநிலை குறித்த ஊடகவியலாளர்கூடலிலே காஷ்மீரிகள் &amp;amp; பத்திரிகையாளர்கள் பற்றி -&lt;i&gt;கொழும்பிலே சக தமிழ்ப்பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் அதே காலகட்டத்திலே அது பற்றி எங்குமே பதிவு செய்யாமல்&lt;/i&gt;- பேச முடிமுடியுமானால்,&lt;/a&gt; அது பாசாங்குத்தனமில்லாமல் வேறென்னவென்றே தோன்றுகின்றது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இப்போது, சொல்லுங்கள், மாலன், உங்களைப் போன்ற ஒரு தமிழ்ப்பத்திரிகையாளரிடம், வாய்ப்பாகிப்போன எனது-உங்களது என இருபக்கக்குரல்களும் கேட்கக்கூடிய இணையத்திலே, கேட்காமல், வேறு யாரிடம் நான் இந்தியாவிலே, தமிழ்நாட்டிலே என் ஈழம்-இந்தியா பற்றிய கேள்விகளையும் உங்களின் பத்திரிகாதர்மங்களின் இரட்டை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிலைப்பாடுகளைப் பற்றியும் கேட்பதாம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;-/இரமணிதரன், க.&lt;br /&gt;&lt;em&gt;'07 ஜூலை 27 வெள்ளி 17:28 கிநிநே.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9576093-8948732735716598915?l=karaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaivu.blogspot.com/feeds/8948732735716598915/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9576093&amp;postID=8948732735716598915' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/8948732735716598915'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/8948732735716598915'/><link rel='alternate' type='text/html' href='http://karaivu.blogspot.com/2007/07/1.html' title='அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு - பகுதி 1அ'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_OBFBfYawg8g/Rqra09u354I/AAAAAAAAAXE/Cd0myVx7f-w/s72-c/kalyanasundaram-eText.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9576093.post-8319700198163083352</id><published>2007-07-21T00:00:00.000-05:00</published><updated>2007-07-21T00:54:37.717-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் இணையம்'/><title type='text'>அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு - காப்பு</title><content type='html'>&lt;a href="http://bp0.blogger.com/_OBFBfYawg8g/RqGa4tu351I/AAAAAAAAAWw/NVLV_XtiU4I/s1600-h/Reply_to_malan1_fig1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5089519353044920146" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_OBFBfYawg8g/RqGa4tu351I/AAAAAAAAAWw/NVLV_XtiU4I/s400/Reply_to_malan1_fig1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;p align="right"&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஜெயச்சந்திரன் கோபிநாத்தின் வலைப்பக்கம் 1995&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு - காப்பு பகுதி 0&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுபொறியும் நொய்புள்ளியொன்றில் நெகிழ்ந்த கணத்திலே தெறிக்க, பரவிச் சுற்றெல்லாம் பற்றிக்கொள்கிறது. மாலனின் "&lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_05.html"&gt;விட்டுப்போன எட்டு&lt;/a&gt;" என்ற வலைப்பதிவு இடுகையிலே சொல்லப்பட்ட தமிழிணையம் பற்றிய கருத்துகள், பெருமளவிலே இக்குறிப்புத்தொடருக்குப் பொறியாகியிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;u&gt;&lt;em&gt;முன்நிகழ்வுகளின் சுருக்கம்&lt;/em&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மாலன் தன் &lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post.html"&gt;"எட்டியவரைக்கும் ஒரு எட்டு" பதிவின்&lt;/a&gt; பின்னூட்டத்தில் சுதேசமித்திரன் பாரம்பரியம், &lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_05.html"&gt;"விட்டுப்போன எட்டு" என்ற பதிவிலே&lt;/a&gt;யும் இணையத்திலே தமிழினை ஏற்றியது, கோவிந்தசாமி, கணிச்சொல்லகராதி, தமிழின் முதல் யூனிக்கோட் எழுத்துரு இதழ், வலைப்பதிவின் வரலாறும் வளர்ச்சியும் ஆகியவை குறித்த இரு குறிப்புகளினையும் உள்ளடக்கியிருந்தார். அதற்கு "இணையபிதா கோவிந்தசாமி" என்ற அர்த்தத்திலே அருணா ஸ்ரீனிவாசனும் பின்னூட்டியிருந்தார். இவர்களின் கருத்துகளிலே, தரவுகளிலே காணப்படும் வழுக்களையும் அவ்வரலாற்றுத்தரவுகளுக்கு மாற்றுகளிருப்பதற்கான சாத்தியத்தைச் சுட்டாத முழுமையின்மையும் பற்றி எழுத எண்ணியிருந்தேன். அதே நேரத்திலே, செல்வநாயகியின் &lt;a href="http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_05.html"&gt;"மக்கள் பங்குபெறாத புரட்சியிலே பயனில்லை"&lt;/a&gt; பதிவிலே வெளியான மாலனது, எனது எதிர்வினை, தெறிவினைகளின் காரணமாக, இவ்(வி(தண்டா))வாதம் ஈழம், இந்தியா, விடுதலைப்புலிகள், தி இந்து ராம், எள்ளல்/ஏகடியம் ஆகியவை குறித்தும் நீட்சியடைந்து, பேச்சு தடித்து விரிந்தது; இவற்றினைத் தொட்டு, மாலன், &lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_2256.html"&gt;தொட்டுப்போனவர்களுக்கு நன்றி"&lt;/a&gt; என்ற இடுகையையும் நான் &lt;a href="http://wandererwaves.blogspot.com/2007/07/blog-post.html"&gt;"விட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்"&lt;/a&gt; என்ற இடுகையினையும் இட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடுகையிலே, நாவலர், உதயதாரகை, மற்றும் கணித்தமிழ், பாரம்பரியம் இவை பற்றி மாலனினாலே சொல்லப்படாத மாற்று வரலாறுகளுக்கான சாத்தியங்களையும் சான்றுகளையும் ஓரளவுக்கு இணைத்திருந்தேன். இதற்கான எதிர்வினைகளாக, என் இடுகைகளிலே 'பாஸ்டன்' பாலாஜி, டிசே, 'மூக்கு' சுந்தர், தீவு, இரவிசங்கர், தங்கமணி, கொழுவி, குளக்காட்டான், குழப்பி உட்பட சிலர் பின்னூட்டியிருந்தனர். பதிலுக்கு, அருணா ஸ்ரீனிவாசன் மூன்று இடுகைகளைத் தந்திருந்தார்; &lt;a href="http://aruna52.blogspot.com/2007/07/blog-post_12.html"&gt;தலைப்பற்ற இடுகை (சுட்டும் காரணம் நோக்கி அவ்விடுகையினை அதன் முன்மூன்று சொற்கூட்டால் "பெயரிலி என்ற ரமணீதரனுக்கு" என்று இனிக் காட்டுவேன்)&lt;/a&gt;, &lt;a href="http://arunasarchive.blogspot.com/2007/07/tamil-net-97.html"&gt;TamillNet 97 and 2000&lt;/a&gt;, &lt;a href="http://arunasarchive.blogspot.com/2007/07/naa.html"&gt;Tamil on Web&lt;/a&gt;. இவ்விடுகைகள், கு. கல்யாணசுந்தரம், 'முரசு' நெடுமாறன், நா. கோவிந்தசாமி ஆகியோரினை அவர் கண்ட செவ்விகளைத் தந்திருந்தன. இவற்றிலே மாலன், 'அச்சுப்பதிப்பிலிருந்து இணையத்தின் ஏறிய முதலாவது தமிழ்ச்சஞ்சிகை' என்று குறிப்பிடுதலுடன் மாலனின் கருத்தும் இடம் பெற்றிருந்தது. இதன் பின்னால், மாலன், &lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html"&gt;அன்புள்ள பெயரிலிக்கு&lt;/a&gt; என்ற இடுகைகயைத் தந்திருந்தார். இவை விடுதலைப்புலிகள், வலைப்பதிவுகளின் எதிர்காலம், எதிர்வினைகளில் எள்ளல், தமிழ்ப்பாரம்பரியம், கோவிந்தசாமி- இணையத்தில் தமிழ் ஆகியவற்றுக்கான அவரின் ஆதாரங்கள் அடக்கியவை.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுக்கான எதிர்வினைகளை அவ்வப்போது என்னுடைய முன்னே சுட்டிய "விட்டதன் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்" இடுகையிலே இட்டுவந்தேன். விடுதலைப்புலிகள் தொடர்பான ஒரு மாலனின் கருத்துக்கு, கொழுவி தனது, &lt;a href="http://koluvithaluvi.blogspot.com/2007/07/blog-post_16.html"&gt;"கள நிலவரங்களும் மக்கள் ஆதரவும்"&lt;/a&gt; இடுகையினை எதிர்வினையாக்கியிருந்தார். வலைப்பதிவுகளின் அமைப்பு, தொழிற்பாடு குறித்த எதிர்வினைகளை ஓசை செல்லா, &lt;a href="http://osaichella.blogspot.com/2007/07/blog-post_08.html"&gt;"இப்படிச் சொல்லீட்டிங்களே மாலன்?"&lt;/a&gt; எனவும், மாயன் &lt;a href="http://www.pkblogs.com/maayanpaarvai/2007/07/vs.html"&gt;"மாலன் Vs. செல்லா - சில கருத்துக்கள்"&lt;/a&gt; எனவும் தந்திருந்தனர். மேலும், செல்வநாயகி, &lt;a href="http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_18.html"&gt;"அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும்"&lt;/a&gt; என்று ஈழத்தமிழர் குறித்த மாலனின் இடுகைக்குத் தொடர்பான இடுகையைத் தந்திருந்தார். இவற்றோடு வாய்ஸ் ஆன் விங்க்ஸ், இவ்விவாதங்களின் போக்கினைச் சுட்டி, &lt;a href="http://valaipadhivan.blogspot.com/2007/07/blog-post_15.html"&gt;"வெற்றுவிவாதங்கள் தரும் அயர்ச்சி"&lt;/a&gt; என்ற இடுகையினை இட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடுகைகளின் பட்டியலை வாசிப்பவர்களின் வசதிக்காக, கீழே தந்திருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post.html"&gt;எட்டியவரைக்கும் ஒரு எட்டு - மாலன்&lt;br /&gt;http://jannal.blogspot.com/2007/07/blog-post.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_05.html"&gt;விட்டுப்போன எட்டு - மாலன்&lt;br /&gt;http://jannal.blogspot.com/2007/07/blog-post_05.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_05.html"&gt;மக்கள் பங்குபெறாத புரட்சியிலே பயனில்லை - செல்வநாயகி&lt;br /&gt;http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_05.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://wandererwaves.blogspot.com/2007/07/blog-post.html"&gt;விட்டதன் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல் - -/பெயரிலி.&lt;br /&gt;http://wandererwaves.blogspot.com/2007/07/blog-post.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://aruna52.blogspot.com/2007/07/blog-post_12.html"&gt;பெயரிலி என்ற ரமணீதரனுக்கு - அருணா ஸ்ரீனிவாசன்&lt;br /&gt;http://aruna52.blogspot.com/2007/07/blog-post_12.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://arunasarchive.blogspot.com/2007/07/tamil-net-97.html"&gt;TamillNet 97 and 2000 - அருணா ஸ்ரீனிவாசன்&lt;br /&gt;http://arunasarchive.blogspot.com/2007/07/tamil-net-97.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://arunasarchive.blogspot.com/2007/07/naa.html"&gt;Tamil on Web - அருணா ஸ்ரீனிவாசன்&lt;br /&gt;http://arunasarchive.blogspot.com/2007/07/naa.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_2256.html"&gt;தொட்டுப்போனவர்களுக்கு நன்றி - மாலன்&lt;br /&gt;http://jannal.blogspot.com/2007/07/blog-post_2256.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html"&gt;அன்புள்ள பெயரிலிக்கு - மாலன்&lt;br /&gt;http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://osaichella.blogspot.com/2007/07/blog-post_08.html"&gt;இப்படிச் சொல்லீட்டிங்களே மாலன் ? - ஓசை செல்லா&lt;br /&gt;http://osaichella.blogspot.com/2007/07/blog-post_08.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.pkblogs.com/maayanpaarvai/2007/07/vs.html"&gt;மாலன் Vs. செல்லா - சில கருத்துக்கள் - மாயன்&lt;br /&gt;http://www.pkblogs.com/maayanpaarvai/2007/07/vs.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://koluvithaluvi.blogspot.com/2007/07/blog-post_16.html"&gt;கள நிலவரங்களும் மக்கள் ஆதரவும் - கொழுவி&lt;br /&gt;http://koluvithaluvi.blogspot.com/2007/07/blog-post_16.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_18.html"&gt;அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும் - செல்வநாயகி&lt;br /&gt;http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_18.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://valaipadhivan.blogspot.com/2007/07/blog-post_15.html"&gt;வெற்றுவிவாதங்கள் தரும் அயர்ச்சி - வாய்ஸ் ஆன் விங்க்ஸ்&lt;br /&gt;http://valaipadhivan.blogspot.com/2007/07/blog-post_15.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இத்தொடர் மீதான என் எதிர்பார்ப்பு&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாதங்கள்மீதான தொடர்ச்சியான என் சிறுகுறிப்புகளை வாசிக்க முன்னால், மேலே தந்திருக்கும் இடுகைகளை மிகவும் அவதானமாக வாசிக்கும்படி ஈடுபாடுடையோரைக் கேட்டுக்கொள்கிறேன். அவரசமான எதிர்வினையாற்றல், குழப்பத்தைத் தந்து எதிர்வினைகளைத் திசை திருப்புவதோடு நேர, சக்திவிரயங்களையும் எல்லோருக்கும் ஏற்படுத்தும். இதுவரை இவ்விடயத்திலே நான் அவதானித்ததன்படி, அருணா, மாலன் போன்ற சம்பந்தப்பட்டவர்கள்கூட என் இடுகை, பதில்களின் கருத்துகள், இணைப்புகள் ஆகியவற்றினைக் கவனிக்காமல், மீண்டும் எனக்கே அவ்விணைப்புகளை வாசிக்கும்படி சுட்டுவதும் &lt;em&gt;(&lt;a href="http://www.tamilnation.org/digital/tamilnet99/govindasamy.htm"&gt;கோவிந்தசாமியின் தமிழ்நேசன் தொடர்பான சுட்டி&lt;/a&gt;, &lt;a href="http://www.tamil.net/list/2000-07/msg00644.html"&gt;Casting their Net&lt;/a&gt;)&lt;/em&gt; தமக்கு வாய்ப்பான ஆதாரத்தரவுகளைக்கூடத் தவறவிடுவதும் &lt;em&gt;(நா. கோவிந்தசாமியின் &lt;a href="http://web.archive.org/web/19990202104842/irdu.nus.edu.sg/poem/archives.html"&gt;1995 ஆண்டின் இணையமேறிய தமிழ்க்கவிதைப்பக்கத்தினையும்&lt;/a&gt; அவர் &lt;a href="http://arunasarchive.blogspot.com/2007_07_01_archive.html"&gt;1995 செப்ரெம்பரிலே தொடங்கியதாகச் சொல்லி, 27 ஒக்ரோபர் 1995 இலே தமிழ்பொயம்ஸ் ஏறியதாகக் குறித்த அவரின் இணையப்பக்கத்தினையும்&lt;/a&gt; சுட்டிக்காட்டியும் மாலன் அதற்குப் பின்னாலான இரண்டாம்நிலைத்தரவுகளை முன்வைக்கின்றார்)&lt;/em&gt; அவலமான நிலை. இதற்கு என் இடுகையின் எழுத்துநடை ஏதேனும் காரணமாகவிருந்திருந்தால், அவர்கள் மன்னிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக என் வலைப்பதிவுக்கு எவரையும் வரவேண்டுமென்ற எண்ணத்தினைத் தமிழ்மணத்திலே சேர்த்தலுக்கப்பால், நான் பின்னூட்டக்கயமையினாலோ வேறேதோ வகையினாலோ முயற்சிப்பதில்லை. ஆனால், இச்சிறுதொடரை வாசிக்கும் நண்பர்கள், இயன்றவரை தம் நண்பர்களிடம் (-பல்லைக்கடித்துக்கொண்டு) வாசிக்கும்படி கேட்க வேண்டுகோள் விடுக்கின்றேன். இஃது என் பதிவு கவனம் பெறுவதற்காகவல்ல; ஆனால், &lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html#c7868968429343876932"&gt;"சார், நல்ல விளக்கம்!"&lt;/a&gt;, &lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html#c3768691288472780551"&gt;"மாலன் சார், இவ்வளவு பொறுப்பாக பதில் சொல்லித்தான் தீரவேண்டுமா? இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அபாயம் இருக்கிறது"&lt;/a&gt;,&lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html#c1495973780238817647"&gt;"காய்த்த மரத்தில் கல்லெறிவது நல்லதுதான் போலும்; இல்லையெனில் இத்தனை 'கனிகள்' விழுமா என்ன ..?"&lt;/a&gt;, &lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html#c4788517842801902060"&gt;"இ-தமிழின் வரலாற்றை அறிய வைத்தமைக்கு நன்றி"&lt;/a&gt; என வெளிப்படையான வழுக்களும் பலமில்லாத ஆதாரங்களும் கிளைத்திருக்கும் மாலனின் இடுகைக்கு விழுந்திருக்கும் பின்னூட்டங்கள் தமிழ் இணையம், தமிழ்க்கணிமை குறித்த நிகழ்வுகள் எதிர்காலத்திலே எப்படியாக எழுதிவைக்கப்படப்போகின்றதென்ற பயத்தினை ஏற்படுத்துகின்றன. 'முப்பதாண்டு பத்திரிகையனுபவம் மிக்க' மாலனின் பிரபலமோ, 'இணைய ரவுடி' -/பெயரிலி. மீதான தனிப்பட்ட வெறுப்புணர்வோ தமிழ்மொழி சார்ந்த வரலாற்றினைத் திரிபுற்றுப் புரிந்துகொள்ளக்காரணமாகிவிடக்கூடாது. அதற்காகத்தான் இவ்வேண்டுகோளை முன்வைக்கின்றேன் - -/பெயரிலி. குறித்த அபிப்பிராயத்தினை மாற்றவல்ல. மாலன், அருணா ஆகியோர் முன்வைத்திருக்கும் ஆதாரங்கள், தரவுகள், கருத்துகளை, இத்தொடரிலே இனி வரும் இடுகைகளிலே ஒவ்வொன்றாக எதிர்கொண்டு பதிலளிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறென்பது விமர்சனத்தோடு அணுகப்படவேண்டியது. நிகழ்வுகளை வரலாறு என்ற பெயரிலே பதியும்போது, பதிகின்றவனின் பார்வை நிகழ்வின்மீது தொடர்ந்தும் தன் எச்சத்தை இட்டுப்போவதைத் தவிர்க்கமுடியாது; ஆனால், நேர்மையான வரலாற்றுப்பதிதல் என்பது, வரப்போகும் விமர்சனத்தன்மையுள்ள வாசகன் சொல்லப்பட்ட வரலாற்றிலிருந்து எழுதியவனின் பார்வையைப் பிரித்து தரவுகளை உள்வாங்கவும் இன்னொரு வரலாற்றுக்குறிப்பாளன் அத்தரவுகளை நம்பிக்கையுடன் மேற்கோள்காட்டி விட்டுப்போன பகுதியைப் பொருத்தமான வகையிலே மீளாய்ந்து இட்டுநிரப்பவும் கிட்டும் புதிய தரவுகளை தகுந்த இடங்களிலே இடைச்சேர்க்கவும் வசதியை வழங்குவதாகவும் இருக்கவேண்டும். அறியாத காலம் பற்றிய வரலாற்றினை, தன் கைவசமிருக்கும் அல்லது தான் நம்பும் தரவுகள் போதுமானவையும் அறுதியானவையும் என்ற தீர்மானத்துடன் எவரும் முழுமையாகப் பதிவு செய்யமுடியாது; பதிவு செய்யக்கூடாது. தமக்கு அறியப்படாத மாற்றுநிலைகளும் நிகழ்வுகளும் இருக்குமென்பதை ஏற்றுக்கொண்டு அவற்றின் சாத்தியத்தைத் தன் வாசகருக்கு உணர்த்தி, தன் பார்வையிலே தரவுகளைத் தருகின்றபோதே அவ்வரலாறும் அதன் ஆசிரியரும் தன்னுடைய இன்றைய நாளைய வாசகர்களுக்கும் வரலாற்றாசிரியர்களுக்கும் சரியானதைச் செய்கின்றவராகின்றார்; நேர்மையுடைத்தவராகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு என்பது ஒற்றைப்புல்லுமில்லாத வெட்டவெளியிலே ஒற்றைத்தடமாக மணற்கோடு கீறுவதாகாது; நிகழ்வுகளாக உறுதிப்படுத்தப்பட்ட பல புள்ளிகளூடாகச் செல்லக்கூடிய அனைத்து நெளிகோடுகளினதும் தொகுப்பாகவே இருக்கமுடியும். இவற்றிலே எக்கோடு பொருத்தமானதென்பதை இனிவரும் நாட்களிலே தோண்டியெடுத்துச் சரிபார்த்த புதிய தரவுகளே தீர்மானிக்கமுடியும். சாதாரணமாக வாசகர்களுக்குப் போகின்றபோக்கிலே கதை சொல்கின்றபோதுங்கூட, இக்கவனம் பிறழாமல் ஒருவர் செய்யவேண்டும். இதன் அடிப்படையிலேயே என் இக்குறிப்புகள் தொடர்கின்றன. நான் எத்தரவினையும் ஆதாரத்துடன் முன்வைக்கும்போதும், கருதுகோள்களை அவற்றுக்குரிய போதும்-போதாமை உணர்ந்து எடுத்துக்கொள்வதிலும், முடிவான நிறுவல்களை, தரவுகள் போதாத வெளிகளிலே இருக்கும் தரவு, கருதுகோள் ஆகியவற்றினைப் பயன்படுத்தி ஏரணத்தின் அடிப்படையிலும் இயன்றவரை தர முயற்சிக்கின்றேன் என்பதை வாசகர்களுக்குத் தெளிவுபடத் தெரியப்படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது இச்சிறுதொடரின் நோக்கம், எவரையும் எதிலும் வெல்வதல்ல; நாவற்கிளையேதும் நான் நாட்டித்தொடங்கவில்லை. ஆக, நிகழ்ந்ததை, திருத்தமான ஆதாரத்தரவூடாக மேலும் தெளிவாக்கியும் நேராக்கியும் காட்டுதலும் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் என் தனியான புரிதல்களையும் பார்வைகளையும் தருதலுமேயாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ச்சியாக, அடுத்தடுத்த நாட்களிலே எழுதச் சந்தர்ப்பம் வாய்க்காது; ஆனால், ஓகஸ்டு 2007 இற்கு முன்னால் இச்சிறுதொடரை -இடையிலே வரும் எதிர்வினைகளுக்கும் இயன்றவரை பதிலளித்து- முடித்துவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இச்சிறுதொடரிலே கீழ்க்கண்ட இடுகைகளை இப்போதைக்கு இடுவதாக இருக்கின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பகுதி 1 - மு(எ)ன்னுரையும் இன்ன பிறவும்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;மாலன், அருணா, வாய்ஸ் ஆன் விங்க்ஸ் ஆகியோரின் மையக்கருத்துகளிலிருந்து விலகியோ முக்கியமற்றோ துகள்போலக் காணப்படும் சில உதிரி விடயங்கள் பற்றிய பதிவு இது. இணையபிதா, டாக்டர்/பேராசிரியர், வரலாற்றை உரைப்பதில் பிரபலங்களின் தாக்கம், எள்ளலும் மாலனைக் கேள்வி கேட்பதற்குமான காரணங்கள், ஆதாரங்களை முன்வைக்கும் முறையிலிருக்கும் பிரச்சனைகள், வலைப்பதிவுகளை நோக்குதல், இணையத்தமிழ் வரலாற்றினைப் பதிவு செய்யும் நோக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பகுதி 2 - இணையத்தமிழ் ஆரம்பம்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;soc.culture.tamil, gif தமிழ், இணையபிதா?, இணையத்திலே தமிழ் மீதான பொதுக்கருத்து, கோவிந்தசாமி, தமிழ்நெற் எழுத்துரு.எதிர்.தமிழ்நெற் இணையக்குழு, கணியன்+தமிழ்நெற் விசைப்பலகை+எழுத்துரு .எதிர்.கணியன் இதழ்.பூன்குன்றனார் கவிதை, மாலனின் ஆதாரங்களின் ஓட்டைகளும் துருக்களும், கல்யாணசுந்தரம் (மயிலை)/மின்னூலகம், ஜெயச்சந்திரன் கோபிநாத்+சைரஸ் தமிழினை எழுத்துருவினால் இணையமேற்றுதல் (ஓகஸ்ட்/செப் 1995)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பகுதி 3 - தமிழில் முதல் சஞ்சிகை, யூனிகோட் சஞ்சிகை, இன்ன பிற 'முதல்'&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;இணையம் கண்ட முதல் தமிழச்சுச்சஞ்சிகை 'குமுதம்' ஆ?, முதல் யூனிகோட் தமிழிதழ் 'திசைகள்' ஆ? முதல் தமிழ்ப்பக்கங்கள் தேடி, முதல் தமிழிணைய உரையாடி, இன்ன பிற&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பகுதி 4 - தமிழில் கணிச்சொற்கோவை அமைத்தலும் தன்னாவத்தொண்டுகளும்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;தமிழிலே கணிச்சொற்கோவை இணையத்திலே ஆகிவரும் முறை, தன்னார்வத்தொண்டுகளும் செயற்பாடுகளுக்கான பங்களிப்புகளும் பங்குபிரித்தல்களும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பகுதி 5 - தமிழில் வலைப்பதிவு&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;தமிழில் வலைப்பதிவு.. எங்கிருந்து, எங்கே, எவரால், இனி எப்படி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பகுதி 6 - தமிழ் இலக்கியப்பாரம்பரியம்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;யாருடையது, தமிழகத்தின் சுதேசமித்திரன் பாரம்பரியம் அடக்குவன இவை என்ற பிம்பக்கட்டுமானம், கட்டுமானம் உருவாகும் முறை, தமிழுக்கு சுதேசமித்திரன் சுட்டாதனவற்றின் பங்களிப்பு பேசும் தேவைக்கேற்ப, மொழிவளர்ச்சியில் ஈழத்தின் பங்களிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பகுதி 7 - ஈழம், இந்தியா, இந்து ராம், மாலன், விடுதலைப்புலிகள்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;ஈழம், இந்தியா, இந்து ராம், மாலன், விடுதலைப்புலிகள், தரவின்றித் தன் மையத்துக்காய்க் கருத்துக் கட்டமைத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயன்றவரை கைக்கெட்டிய கணணி, நூல்கள் ஆகியவையே என் ஆதாரங்களாகும். ஆனால், அவற்றினை முன்வைத்தே பேசுவேன். இக்கட்டுரைக்கான மேலதிகமான ஆதாரங்களையும் தொடர்புகளையும் ஏற்படுத்தித் தந்த (&amp;amp; தரப்போகும்) நண்பர்களுக்கும் நேரமெடுத்து என் பதிவுக்குப் பதில் தரும் விதத்திலே பதிவிட்ட மாலன், அருணா ஆகியோருக்கும் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;'07 ஜூலை 21, சனி 00:35 கிநிநே.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9576093-8319700198163083352?l=karaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaivu.blogspot.com/feeds/8319700198163083352/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9576093&amp;postID=8319700198163083352' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/8319700198163083352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/8319700198163083352'/><link rel='alternate' type='text/html' href='http://karaivu.blogspot.com/2007/07/blog-post.html' title='அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு - காப்பு'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_OBFBfYawg8g/RqGa4tu351I/AAAAAAAAAWw/NVLV_XtiU4I/s72-c/Reply_to_malan1_fig1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9576093.post-4306075695369164507</id><published>2007-05-02T20:42:00.000-05:00</published><updated>2007-05-02T21:17:19.259-05:00</updated><title type='text'>உள்ளதும் உள்ளுவதும் உருப்பெருக்குவதும்</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_OBFBfYawg8g/RjlGGhndRnI/AAAAAAAAAMU/-ujz9OZueHo/s1600-h/antichrist1a.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5060152734244488818" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_OBFBfYawg8g/RjlGGhndRnI/AAAAAAAAAMU/-ujz9OZueHo/s400/antichrist1a.jpg" border="0" /&gt;&lt;/a&gt; 1. பிரேம்-ரமேஷின் கட்டுரையை &lt;a href="http://padamkadal.blogspot.com/2007/05/blog-post.html"&gt;"அடிமைப்பட்டவர்கள் பாக்கியவான்கள்"&lt;/a&gt; டிசே எடுத்துப் போட்டிருக்கிறார். இரண்டு தடவைகள் வாசிக்க, ஓரளவு புரிந்தது (என நினைக்கிறேன்). கருத்தளவிலே ஆண்மை-பெண்மை இரண்டு கருத்தாக்கங்களும்/களையும் அழிவது/அழிப்பது நன்றாகத்தான் இருக்கின்றது - ரயாகரனின் உலக அரசியல் &amp; பொருளாதாரம் குறித்த கட்டுரைகள்மூலம் உலகின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைத் தருவதுபோல. ஆனால், நடைமுறையிலே கருத்தாக்கிகளின் பிரச்சனைகளுக்கான கருத்தளவிலான தீர்வுகளும் தீர்ப்புகளும் நடைமுறைக்கு எப்படியாகப் பயனுள்ளதாகப் போகின்றன என்பது காலத்துக்குமான சிக்கல். தூயகணிதத்தினைப் பிரயோககணிதத்துக்குப் பயன்படுத்துவதுபோன்ற தொடர்பளவிலே இலகுவான நிலை சமூகப்பிரச்சனைகளுக்கில்லை. பிரேம்-ரமேஷின் கருத்தாக்கத்துக்கும் இந்த அவநிலைதானிருக்கின்றது. ஆண்மை-பெண்மை என்ற இரட்டைக்கருத்துகளும் அழியவேண்டுமென்பதிலே மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதெப்படி? பிக்குணி எரியும் திரியை எண்ணெய்க்குள்ளே அழுத்தி அணைப்பதினால் கிடைக்கும் "உள்ளார்ந்த முழுமை" எவ்வகையிலே இக்கருத்தழிப்புக்கான நடைமுறை? கருத்தளவிலே ஆண்-பெண் என்றில்லாது எல்லோருக்குள்ளும் உட்கார்ந்திருக்கும் சொற்களைக் கட்டுடைத்தலும் அழித்தலும் புதுக்கலும் உருவாக்குதலும் முன்னோக்கிய சிறுநடைக்கு உதவலாம். ஆனால், அடிப்படையிலேயே (எதிர்ப்)பால் அளவிலான சந்தேகத்தினை "பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல" என்று எடுகோளாக முன்வைக்க வற்புறுத்தும் இக்கட்டுரை எப்படியாக இந்த கருத்தமைப்பின் அழிப்பினைப் பால்வேறுபாடின்றிச் செய்ய உதவப்போகின்றது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. டிசேயின் பிரேம்-ரமேஷின் இடுகைக்கு வந்திருக்கும் கறுப்பியின் பின்னூட்டம், "என்ன செய்வது இது ஆண் அதிகார உலகம். எப்போதும் இப்படித்தான் இருக்கப் போகின்றது. சின்ன விடையங்களுக்குக் கூட போராட வேண்டிய நிலையில்தான் இன்றும் என்றும் பெண்கள் இருக்கப் போகின்றார்கள்." பின்னூட்டம் இடமுன்னால், டிசே போட்ட இடுகையை வாசித்தாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். ஆண்மை-பெண்மை கருத்தமைப்பினை முழுதாய் அழித்தல் என்பது குறித்ததான இடுகை இது - இதிலே வந்து 'ஆண் அதிகாரம் &amp;amp;amp;amp;amp; கெடுதல்' பற்றி ஒரு முத்திரை; முடிந்தது காரியம். எந்த நோய்க்கும் ஒரே மருந்து போலவும் ஐன்ஸ்டைன் கண்டுபிடிக்க முக்கின முழுமைக்குமான விதியைப் போலவும் தத்துவவாதியின் கல் போலவும் "அனைத்துக்கெடுதலுக்கும் ஆணதிகாரம்" என்பதான ஒரு தட்டையான கோஷம். அதற்கப்பால், இத்தனை நாள் ஆண் அதிகார உலகினைக் கெல்லவும் கிழிக்கவும் எத்தனையோ செய்கிறாரே, எதுவுமேதான் இதுவரை நாள் பயன்தரவில்லையா, அல்லது அவர் அப்படியான அதிகார உலகமாகவிருப்பது அவரைப் பெண்ணிலைவாதியாக முன்னெடுக்க வசதி செய்துகொடுப்பதுமட்டுமே போதுமென்றிருக்கிறாரா? எப்போதுமே இப்படித்தான் இருக்கப்போகிறதையிட்டு கவலைப்படுகின்றாரா அல்லது அப்படியே அது இருப்பதுதான் அவரைப் பெண்ணிலைக்காகப் பேசவைக்க வசதியென்றிருக்கின்றாரா? அவர் சொல்லப்போவதில்லையென்றே நினைக்கிறேன்; இன்னும், இருபது ஆண்டுகள் கழித்து வந்து பதிவுகளை இதே தலைப்பின்கீழேயிட்டாலும் அவர் வந்து போடப்போகும் முதலாவது பின்னூட்டம், "இது ஆண் அதிகார உலகம். எப்போதும் இப்படித்தான் இருக்கப் போகின்றது. சின்ன விடையங்களுக்குக் கூட போராட வேண்டிய நிலையில்தான் இன்றும் என்றும் பெண்கள் இருக்கப் போகின்றார்கள்." இதற்கு அப்பால், அவர் சிந்தனை நகரப்போவதில்லை, முன்னால் இருப்பவன் ஆணென்றால், "நீ ஆணாதிக்கவாதி; உன் மனைவிக்காகப் பரிதாபப்படுகிறேன்." என்ற வரிகள் தொடர்ந்தாலல்லால். பக்கத்துவீட்டிலே பத்தாண்டுகளிருந்து அவனும் அவளும் வாழ்ந்ததைப் பார்த்ததுபோல ஒரு கருத்து. பெண் சொன்னால், ஓர் ஆண் பரிதாபப்படும் நிலையிலிருக்கும் ஓர் ஆணாதிக்கவாதியாகமட்டுமேயிருக்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரின் இச்செய்கை என்னை அம்பை என்ற சி.எஸ். லக்ஷ்மியின் ஒரு செய்கையை ஞாபகப்படுத்துகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால், நா. கண்ணன் நடத்தும் ஈ-சுவடியிலே நடந்தது. தமிழிலே முதலிலே எழுதிய முஸ்லீம் பெண் எழுத்தாளர், சித்தி ஜுனைதா பேகம் குறித்த விபரங்கள் குறிப்புகளை நாகூர் ரூமி மூலம் நா. கண்ணன் தன்னுடைய முதுசம் திட்டத்துக்குப் பெற்றுக் கொண்டதை ஈ-சுவடி யாஹூ குழுவிலே அறிவிக்கின்றார். அம்பையிடமிருந்து ஓர் அஞ்சல்; அக்குறிப்புகள் தன்னுடைய &lt;a href="http://www.sparrowonline.org/"&gt;SPARROW&lt;/a&gt; குழுவுக்கே நியாயப்படி சேரவேண்டுமென்கிறார். அதற்காக அவர் சொல்லும் காரணம்,"சித்தி ஜுனைதா பேகம் ஒரு பெண்." அவர் தமிழ் எழுத்தாளர் என்று தமிழிலக்கியக்களஞ்சியத்திலே தேடிக்கண்டுபிடித்தவர் சேர்க்கமுடியாது; அவர் பெண் என்பதுதான் முன்னிலையாகவேண்டும். இந்த "வந்தால் என் வழி; இல்லாவிட்டால், Disclosure Demi Moore Declaration" வகை வாதம் தனியாள் ஒளிவட்டத்துக்கு ஆட்சேர்க்க உதவலாம். அதற்குமேலே பொதுவாக, -பெண்களுக்கோ ஆண்களுக்கோ- சமூகத்துக்கோ என்ன பயனைத் தரப்போகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. பாலபாரதியின் பழைய பதிவிடுகை ஒன்று, &lt;a href="http://balabharathi.blogspot.com/2007/02/blog-post_17.html"&gt;"இது அன்னையர் தேசமா..."&lt;/a&gt; இஃது இன்னொரு வகையான வேலியிலே போகும் ஓணானைத் தன் மடியிலே போடும் பதிவு. பின்னூட்டங்கள் வருவது தொடர்பான அவருடைய கருத்துகளோடு ஒத்துக்கொள்ளமுடிகின்றது. ஆனால், "எனது "ஆதலினால்..." இடுகையில் ஏமாறாதவன் என்பவர் பெண்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்ற ரீதியில் கருத்து சொல்லி விட்டுப்போனார். ஆனால்.. ஆண்களின் உலகம் தான் சூழ்ச்சிகள் நிறைந்ததாக இருக்கிறது என்பதை வேதனையோடு இங்கு பதிவு செய்ய கடமை பட்டிருக்கிறேன்" என்பது ஒன்று அவர் தமிழ்மணத்தினைச் சரியாகக் கவனிப்பதில்லையா அல்லது கவனித்தும் கவனிக்காததுபோல இருக்கின்றாரா என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது. ஏமாறாதவன் என்பவர் 'இயிங்க்' என்றால், இவர் 'இயாங்' என்ற விதத்திலே பதில் எழுதியிருக்கின்றார். "ஏனெனில் ஆண்களின் சிந்தனை போலில்லாமல்.. பெண்களின் சிந்தனை பல புதிய கோணங்களை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. " என்றவர் சொல்கிறதிலே இன்னும் அறியாத இச்சூழ்ச்சிகள் பற்றிய கோணங்களும் இவருக்கு இருக்கின்றதோ தெரியவில்லை. இக்கோணங்களும் உத்திகளும் சொல்லப்பட்டிருந்தால், தமிழ்மணத்தினைக் கொஞ்சம் கவனித்திருந்தால், இந்த ஆண்சூழ்ச்சி - பெண்சூழ்ச்சி நிகழ்த்தப்படும் நுண்ணிய தளங்களும் நூலூடிப்பாவும் நுண்வழிமுறைகளும் இவருக்குப் பிடிபட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஏற்றுக்கொள்ளமுடியாத சொற்களோடு அநாமதேய பின்னூட்டங்களும் பெண்பதிவர்களுக்கு மட்டுமல்ல, ஆண்பதிவர்களுக்குமேதான் வருகின்றது. பெண் என்பதைத் தவிர, சாதி, மதம், மொழி எல்லாவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத தாக்குதலோடுதான் எல்லாத்திசைகளிருந்தும் வருகின்றன. "பள்ளனோடு உங்கம்மா படுத்தாளா?" என்றும் வருகின்றது; "பார்ப்பானோடு உங்கக்கா படுத்தாளா?" என்றும் வருகிறது; 'தீரா'விட'ன்' என்றும் வருகின்றது; 'ஆரியன்' என்றும் திட்டி வருகின்றது. அவற்றையெல்லாம், 'அம்மா' &amp; 'அக்கா' என்று பார்ப்பான் வீட்டுப்பெண்களையோ பள்ளன்வீட்டுப்பெண்களையோ திட்டுகின்றபோதிலுங்கூட, நாம் பெண்களெனக் கவனிப்பதில்லை. திட்டும் திசை நமதா எதிரியினதா என்றுமட்டும் பார்த்துவிட்டு, ஒதுங்கிக்கொள்கிறோம். ஆனால், அறிந்த பெண்பதிவர்களிலே தாக்கும்போதுமட்டும் எல்லாப்பதிவர்களும் அக்கறை கொள்கிறோம். நம் நண்பர்களைத் தாக்கும்போது, எதிர்வினை செய்வது வழக்கமே. அவசியமானதும் கட்டாயமானதுமானதுமே. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், எந்தவொரு பதிவரும் ஆண்-பெண் என்பதாக மட்டுமே அடையாளப்படுவதில்லை. வலைப்பதிவிலே சாதி, இனம், நாடு, மொழி, மதம் சேரவுமேதான் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். இவை எல்லாக்கூறுகளையும் முன்னிறுத்தியே தாக்குதல்கள் நிகழ்கின்றன. ஆண் பதிவர்கள் பெயர்களிலே எழுதிய அத்தனை வக்கரிப்புகளையேதான் பெண்களின் பெயர்களிலும் எல்லாப்பக்கத்து கோடாலிப்பாம்புகளும் போட்டுத்தள்ளுகின்றன. பிரபு ராஜதுரையின் &lt;a href="http://marchoflaw.blogspot.com/2007/05/blog-post.html"&gt;"சுஜாதா, சுப்பிரமணியசுவாமி, சூத்திரர்... "&lt;/a&gt; இடுகை சரியாகச் சுட்டியதுபோல நாம் கொஞ்சம் இப்படியான நிலைமையைப் பார்த்தால், இழிவு படுத்துதல் என்பது எல்லாவகைகளிலுமேதான் நடந்திருக்கின்றன. ஆனால், பெண்களின் பெயர்களிலே வரும்போதுமட்டும் பெண்களை இழிவு செய்துவிட்டார்கள் என்ற பாவனை வருகின்றது. இஃது எதனால்? [&lt;u&gt;நான் சொல்லவருவதை முழுவதும் தவறாகவே புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கின்றது. என்றாலும், முயற்சிக்கின்றேன்&lt;/u&gt;] ஆனால், இது பெண் என்பதாலே தாக்கப்பட்டுவிட்டார் என்பதாகவும் பெண்களைப் பாதுகாப்பது ஆண்களின் கடமை என்பது போன்ற (&lt;em&gt;ஒரு தனியுடைமைச்சொத்தினை, வீடு, வங்கிநிலுவை, வாகனம் இவற்றைக்&lt;/em&gt;) காக்கும் போக்கோடுதான் இருப்பதாக எனக்குப் படுகின்றது. இது பெண்களைச் சரிநிகராகக் கருதுவதாகாதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. நிவேதாவின் கட்டுரை, &lt;a href="http://rekupthi.blogspot.com/2007/04/blog-post_5237.html"&gt;"காலனித்துவ இலங்கை அரசியல் சமூகத்தில் தமிழ்ப் பெண்களும் பெண்களின் அரசியலும்"&lt;/a&gt; இலே ஒரு பகுதி;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"இது மிக விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமெனினும, சுருக்கமாகக் கூறுவதாயின்..., சமீபத்தில் நண்பரொருவருடனான உரையாடலின்போது, 'ஆண்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யும்போது சாடுகிறீர்களே.. சிறிமாவோ, சந்திரிக்கா, ஜெயலலிதா, ஏன் இந்திரா காந்தியென பெண்கள் பலரதும் ஆட்சியைப் பார்த்தவர்கள் நாம் .. இவர்கள் அதிகாரத்திலிருந்தபோது மட்டும் நிலைமை முன்னேற்றமடைந்திருந்ததா..?' எனக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் அரசியலென்ற கருத்தாக்கம் இவ்விடத்தே தான் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தக் குறிப்பிட்ட பெண் தலைவர்களனைவரும் ஆண்களின் பிரதிநிதிகளாய், ஆண் மேலாதிக்க சமூகம் உருவாக்கி வைத்திருந்த சமூக, அரசியல் சூழ்நிலைகளுக்குள் நின்றுகொண்டு ஆட்சி புரிந்தார்களேயொழிய எவரும் பெண்ணென்ற தமது சுய அடையாளத்தினை வலியுறுத்த முயன்றனரெனக் கூறமுடியாது. ஒருவகையில் தமது அத்தகைய அடையாளங் குறித்து வெட்கி ஆண் தலைவர்களை அப்படியே பிரதியெடுக்க முனைந்ததன் விளைவுதான் இதெனலாம். "&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோவியத்து உடைப்பின்பின்னால், நஷனல் ஜியோக்ரபிக் பத்திரிகையாளரொருவர் ஜோர்ஜியாவிலே செவ்வி கண்டுகொண்டிருக்கின்றார். ஜோர்ஜியர் பலர் ரஷிய, மற்றும் சோவியத்தின் பொதுவுடமைக்கட்சிக்கெதிராகக் கருத்துக் கூறுகின்றார்கள். ஆனால், எவருமே ஸ்டாலினைக் குறைத்துச் சொல்ல விரும்பவில்லை. பத்திரிகையாளர் இதனை மிகவும் அழகாகச் சொல்கிறார், "ஜோர்ஜிய மக்களின் கருத்தானது, 'ஸ்டாலின் ஒரு பயங்கரனாகவிருக்கலாம்; ஆனால், எங்களது பயங்கரன்" என்பதாகவே தோன்றுகின்றது." நிவேதாவின் சிறிமாவோ, சந்திரிகா, ஜெயலலிதா போன்றோரது நடத்தைகளுக்கான உள்ளார்ந்தநிலைவிளக்கமும் இதனை ஒப்பவேயிருக்கின்றது. இந்த வாதத்தின்படி பார்த்தால், சமூகத்தின் எந்த நிலையிலேயும் எந்தப்பெண்ணின் செயற்பாட்டினையும் ஆண்சமுதாயத்தின் அமைப்பின் விளைவென்றே சுட்டிவிட்டுத் தப்பித்துக்கொள்ளலாம். இந்த "சமுதாயம் அவளை வாழவிடவில்லை" வசனத்தை Aileen Wuornos இற்குமட்டுமல்ல, சந்திரிகா, ஜெயலலிதாவுக்கும் சொல்லலாம். இது ஒன்றில் சிறுபிள்ளைவாதம் அல்லது மிகவும் சாதுரியமான தப்பிப்புவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரிகாவின் காலத்திலேதான் (&lt;em&gt;சிறிமா அம்மையார் அந்நேரப்பகுதியிலே தலைமையமைச்சராகவும் இருந்தார்&lt;/em&gt;) கிருஷாந்தி, கோணேஸ்வரி, சாரதாம்பாள், ஹேமலதா இவர்கள் வன்புணரப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர். சந்திரிகா நிச்சயமாக தானறிந்து இவற்றினைச் செய்யவில்லை. ஆனால், இப்படியான செயற்பாடுகளுக்குப் பின்னான வேளையிலே, அவரது படையினரைத் தண்டிப்பிலிருந்து தப்பிக்க வைக்கும் செயற்பாடுகளை அறிந்தும் நடந்துகொண்டாரென்பதுதான் நடைமுறை. ஸ்ரீமாவின் காலத்திலேதான் மன்னம்பேரி வன்புணர்தலும் சேகுவேரா - 72 வன்னடக்குமுறையும் இந்திராகாந்தி ஆட்சியின் உதவியோடு நிகழ்ந்தன; இந்திராகாந்திதான் முன்னெப்போதுமில்லாதவாறு, இந்தியாவிலே மிஸா அரசியலடக்குமுறையைக் கொணர்ந்தார்; ஜெயலலிதா காலத்துக்கு முன்னால், வீட்டுக்கு முச்சில்லுவண்டி விட்டு காலையுடைக்கும் 'பண்பாடு' தமிழக அரசியலிலேயிருந்ததாகத் தெரியவில்லை. இவை எதுவுமே இங்கே "ஆண்மேலாதிக்க சமூகம், சூழல்" என்ற வாதத்தினைக் கொண்டு இப்பெண்ணாட்சியாளர்களை ஆண்சமூகச்சூழ்நிலைக்கைதியாக்கித் தப்பிக்கச் செய்யும் முடக்குவாதமொழிய வேறெதுவுமாகவிருக்கமுடியாது. இதன் மோசமான விளைவு என்னவென்றால், இப்படியான ஆண்கள் உருவாக்கிய சமூக, அரசியல் சூழ்நிலையைச் சுட்டிக்கொண்டு தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறையைக்கூட பெண் ஆட்சியாளர்கள் அதிகாரத்தின் பேரிலே அனுமதித்துக்கொண்டுபோவதாகவிருக்கும். இந்நிலையிலே சொல்லப்போனால், ஆண் ஆட்சியாளர்களைவிடப் பெண்ணாட்சியாளர்களுக்குப் பெண்ணியலை முன்னெடுக்கும் ஒரு பகுதியினர் வன்முறைக்கு வாய்ப்பும் தப்பிக்கும் வழியும் ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள் என்றே சொல்லலாம். ஒரு Countess Erzsébet Báthory இன் செயற்பாடுகளை Count Vlad Drăculea மீது போடுவதுபோலத்தான் ஆகும். அதிகாரத்துக்கு, பால், சாதி, மொழி, இனம், மதம் என்று ஐம்பொறிகளில்லை. அதிகாரம் தன் வசமானது; தன்னை நிறுத்திக்கொள்ள அத்தனை உத்திகளையும் பயன்படுத்தும். சந்திரிகா பெண் என்பதும் இவ்வகையிலே ஓருத்திதான். இப்படியான உத்திகளை அறிந்தும் அவர் பெண்ணென்பதாலே அவரை நியாயப்படுத்துகின்றவர்கள், இவ்வதிகாரத்தின் கீற்றுகளைத் தாமும் கவர்ந்துகொள்கின்றவர்களேயாவார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களைப் புனிதப்பாலிலே நீராட்டி வைத்துக்கொண்டு, ஆண்களைப் பீயுழலும் பன்றிகளாக நிறுத்தி வைத்துக்கொண்டுதான் பேரம் பேசுதலும் வாதம் பேசுதலும் நிகழ்கின்றதாகத் தோன்றுகின்றது. பெண்களின் செயற்பாடுகள் குறித்த விமர்சனத்தினை எழுப்ப எவருக்கும் விருப்பமிருப்பதில்லை; ஆண்களானால், முத்திரை குத்தப்படுவோமோ என்ற தயக்கமிருக்கின்றது. இதே விமர்சனத்தயக்கங்கள், ஈழவிடுதலைப்போர் குறித்தும் இந்தியத்தேசியம் குறித்தும் பலரும் இருக்கின்றது. தர்க்கத்துட்பட விமர்சனத்தினை முன்வைக்காத எந்தக்கொள்கையுமே நடைமுறையிலே வெற்றி பெற்றதாகவோ நிலைத்து முன்னோக்கி நகர்ந்ததாகவோ வரலாற்றுநிகழ்வுகள் காட்டவில்லை. ஒருவரைப் பற்றிய கருத்தினைத் தெரிவிக்கும்போது, அவரின் பொது அடையாளங்களுக்கான குணங்கள் (பால், மொழி, இனம், மதம், சாதி), தனியடையாளங்களுக்கான குணங்கள் (ஒவ்வொரு குழுவுள்ளும் தனித்தன்மை) இவற்றினைச் சேர்த்துப் பார்க்க ஏன் எம்மால் முடிவதில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான ஆணாதிக்கசமூகத்தின் சூழ்நிலைக்கைதித்தனமும் பிரேம்-ரமேஷ் கூறும் ஆண்மை-பெண்மை இரட்டைமொழி அழியும் நிலையும் எப்போது ஏற்படுகின்றதென ஒரு முடிவான நிலைக்கு எவருமே ஒருபோதும் வரப்போவதில்லை. இந்நிலையிலே, அவரவர் அவரவர் வசதிக்கும் தேவைக்குமேற்ப, தூக்குதலும் தூற்றுதலும் செய்துகொண்டிருக்கப்போவதுதான் நடக்கும்.பாலுக்கு எதிர்ப்பால் குறைந்தளவேனும் புரிதலும் நம்பிக்கையும் கொள்ளாதவரையிலே எல்லாம் சூழ்ச்சியாகவும் பெண்ணாட்சியிலே வன்முறை நிகழும்போது, ஆணாதிக்கசமுதாயத்திலே பழியைப் போடுவதும் எந்த இலக்கைக் கொண்டு ஒரு சமுதாயத்தை நடக்கவைக்குமென்று என்னால், சொல்லமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, விக்கிரமாதித்தனை வேதாளம் கேட்டதுபோல, தலைசுக்குநூறாகிப் போக ஒரு கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'யாரோ ஓர் ஔவை "தையல் சொல் கேளேல்" என்று சொல்லிவிட்டுப்போய்விட்டாள்.'&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;இவ்வரியை எப்படியாக விடுவித்துக் கருத்தைக் கொள்வது?&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. ஔவை சொன்னால் சரியாகத்தான் இருக்கும்; பெண்கள் சொல்வதைக் கேட்காதே.&lt;br /&gt;2. ஔவையே ஒரு பெண்; அவரே பெண்கள் சொல்வதைக் கேட்காதே என்று சொன்னால், அது கேளென்று அர்த்தப்படும். ஔவை பெண்களுக்குப் பூடகமாகத் தன் செய்தியை உணர்த்தியிருக்கின்றாள்&lt;br /&gt;3. ஔவை என்பது முதிர்ந்த பருவம்; தையல் என்பது அல்ல; ஆகவே, தையல்_பருவத்திலேயிருக்கும் பெண் சொல்வதைக் கேளாதே.&lt;br /&gt;4. ஔவை வாழ்ந்த காலம் ஆணாதிக்கம் பெண்களின் கழுத்தை இறுக்கிய காலம்; ஔவை அப்படியாகத்தான் சொல்ல வாய்ப்புண்டு.&lt;br /&gt;5. ஔவை சொன்னாளா? தெரியாது. யாராவது ஓர் ஆண் இடையிலே எழுதிச் செருகியதாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;6. இக்கேள்வியைக் கேட்டதால், நீ ஆணாதிக்கவாதி - உன் மனைவியைக் காலைச்சாப்பாட்டுக்கு முன்னால் இரண்டு தரமும் மாலைச்சாப்பாடுக்குப்பின்னால், நான்கு தரமும் கன்னத்தைப் பொத்தி அறைகின்றவன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;[இவ்விடுகையைக்கூட, ஓர் ஆணாதிக்கத்திசைதிருப்பலாகவோ கலைந்துளறும் கருத்துகளாகவோ எவரும் எடுத்துக்கொண்டு போகலாம். அதைப் பற்றி "நீ ஆண் - நான் பெண்" என்ற "ஆயுதமற்ற நீ - கேடயத்துடன் நான்" என்பதற்கு மேலே ஒழுங்கான வாதமென்று எதுவுமில்லையென்றால், எனக்கும் சொல்ல எதுவுமில்லை.&lt;br /&gt;ஆனால், &lt;/span&gt;&lt;a href="http://wandererwaves.blogspot.com/2005/08/5.html"&gt;&lt;span style="font-size:78%;"&gt;இங்கே&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; தூக்கிப்பிடித்த எத்தனை பேர் இங்கே தூக்கியடிக்கிறார்கள் என்று ஒரு கணக்கை மட்டும் வைத்துக்கொள்வேன் :-)]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:78%;color:#ff0000;"&gt;[நன்றி: அடியாள் (I mean, அடியான், What I mean is, அடியார்) இரவுக்கழுகுக்கு, என் வலைப்போதிக்கும் பூரணநிலவுக்குமாய்]&lt;/span&gt;&lt;/strong&gt; :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9576093-4306075695369164507?l=karaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaivu.blogspot.com/feeds/4306075695369164507/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9576093&amp;postID=4306075695369164507' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/4306075695369164507'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/4306075695369164507'/><link rel='alternate' type='text/html' href='http://karaivu.blogspot.com/2007/05/blog-post.html' title='உள்ளதும் உள்ளுவதும் உருப்பெருக்குவதும்'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_OBFBfYawg8g/RjlGGhndRnI/AAAAAAAAAMU/-ujz9OZueHo/s72-c/antichrist1a.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9576093.post-116567848141410365</id><published>2006-12-09T10:25:00.000-05:00</published><updated>2006-12-09T10:38:38.260-05:00</updated><title type='text'>சு. வில்வரத்தினம் மறைவு</title><content type='html'>&lt;p align="left"&gt;&lt;img src="http://photos1.blogger.com/hello/188/1529/1024/vilvarathinam.jpg" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;படம்: &lt;a href="http://groups.yahoo.com/group/eelam_litart_arch"&gt;ஈழத்துக்க்கலையிலக்கியச்சுவடி&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்துக்கவிஞர் சு. வில்வரத்தினம் இன்று கொழும்பிலே சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து காலமானார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுகள் ஈழச்சிறப்பிதழ் இதழுக்காக 2003 இலே எழுதிய &lt;a href="http://www.geotamil.com/pathivukal/pathivukal_pongal2003/poem_VILVARATHTHINAM.html"&gt;அறிமுகக்குறிப்பினை&lt;/a&gt; உள்ளடக்கி அவர் பற்றிய விபரம் &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;சு. வில்வரத்தினம் (1950-2006)&lt;/strong&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம் புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக்&lt;br /&gt;கொண்டவர், 1970 களிலே எழுத ஆரம்பித்து 1980 களில் முக்கியமான எழுத்தாளராகப்&lt;br /&gt;பரிணமித்தவர். இவரது முன்னைய கவிதைத்தொகுதிகளாவன, அகங்களும் முகங்களும் (1985),&lt;br /&gt;காற்றுவெளிக்கிராமம் (1995), காலத்துயர். நெற்றிமண், 2000 இலே வெளியானது. இவருடைய&lt;br /&gt;கவிதைகள் மொத்தமாக உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தொகுதியாக 2001 இலே வெளியானது.&lt;br /&gt;மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைகளையும்&lt;br /&gt;பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை பொருந்தியவரும்கூட. ‘Lutesong and Lament:&lt;br /&gt;Tamil Writing from Sri Lanka’ தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கிலவடிவிலே&lt;br /&gt;வெளிவந்துள்ளது. இறக்கும்வரை திருகோணமலையிலே தொழிலாற்றினார்.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;p&gt;&lt;br /&gt;இணையத்திலே கிடைக்கும் அவரது நூல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil.net/projectmadurai/pub/pm0065/pm0065.pdf"&gt;அகங்களும் முகங்களும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil.net/projectmadurai/pub/pm0099/kARRuvazi.pdf"&gt;காற்றுவழிக்கிராமம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil.net/projectmadurai/pub/pm0088/pm0088.pdf"&gt;மரணத்துள் வாழ்வோம் (சில கவிதைகள்)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் குறித்த விரிவான சந்திரமதி கந்தசாமியின் இடுகை &lt;a href="http://mathy.kandasamy.net/musings/2004/06/10/140"&gt;இங்கே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;தகவல்: பத்மநாப ஐயர்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9576093-116567848141410365?l=karaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaivu.blogspot.com/feeds/116567848141410365/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9576093&amp;postID=116567848141410365' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/116567848141410365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/116567848141410365'/><link rel='alternate' type='text/html' href='http://karaivu.blogspot.com/2006/12/blog-post.html' title='சு. வில்வரத்தினம் மறைவு'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9576093.post-112793182943669538</id><published>2005-09-28T12:59:00.000-05:00</published><updated>2005-09-28T14:18:42.956-05:00</updated><title type='text'>தக்கன பிழைக்கும்</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;a href="http://karaivu.blogspot.com/2005/09/blog-post.html"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;தக்கன பிழைக்கு/கட்டும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pathippuththozhil.blogspot.com/2005/09/blog-post_112756045819505755.html"&gt;ஈழத்துப் புலமை தமிழ் உலகில் புகழ்பூக்க...... &lt;/a&gt;&amp;&lt;br /&gt;&lt;a href="http://pathippuththozhil.blogspot.com/2005/09/blog-post_112791074512337703.html"&gt;கொழும்பில் மணிமேகலைப் பிரசுரப் புயல்&lt;/a&gt; பின்னான குறிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;திரு. மறவன்புலவு சச்சிதானந்தம் தமிழகத்திலே &lt;a href="http://www.tamilnool.com/"&gt;காந்தள&lt;/a&gt;கத்தினை வைத்திருக்கின்றபோதும், "&lt;em&gt;ஈழத்துப் படைப்பாளிகள் தமிழகப் பதிப்பகங்களை நம்பியிராமல் ஈழத்திலேயே வெளியிட அந்நூல்கள் தமிழக நூலகங்களையும் சென்றடையும்&lt;/em&gt;" என்று சொல்வது மிகவும் பெருந்தன்மையுள்ள கருத்து. இதை அடிக்கடி நாம் ஈழத்தவருக்கு ஞாபகப்படுத்தவேண்டியதாகவிருக்கின்றது. ஒவ்வொருவரும் தாம் விரும்புவதை எங்கே பதிப்பிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட சுதந்திரமென்பதை ஒத்துக்கொள்கின்றோம். ஆனால், பெரும்பாலான ஈழத்தமிழர்களின் நிலைமையைத் துணிந்து பதிப்பு, தொலைக்காட்சி, திரைப்படம் மூலம் வெளியிட மறுத்த மறுக்கின்ற திரித்த திரிக்கின்ற பெரும்பாலான தமிழகப்பதிப்பகங்களும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் தொலைக்காட்சிச்செய்திகளும் திரைப்படத்துறையாளர்களும் வெட்கமின்றி ஈழப்பதிப்புகளை வர்த்தக ரீதியிலே அணுகுவதும் அவ்வணுகுதலை பல ஈழ(ப்புலம்பெயர்ந்த)"படைப்பாளிகள்" சாதமாக்கிக்கொண்டு "ஈழப்படைப்பு, புடைப்பு, புடலங்காய்" என்று குறிசுட்டுக்கொண்டு பதிப்பதும் மிகவும் வேதனையளிக்கின்றது. தமிழ்நாட்டின் மிகச்சில படைப்பாளிகளும் பதிப்பகங்களும் மட்டுமே எக்காலத்திலும் ஈழத்தவர்களின் நலனிலே தம் நலன் கெடுகின்றபோதிலும் அக்கறை கொண்டு செயற்பட்டிருக்கின்றார்கள்; இன்னும் செயற்பட்டிருக்கின்றார்கள்; இனியும் செயற்படுவார்கள். ஆனால், இன்றைக்கு இணையத்திலும் தமிழ்வெகுசன ஊடக, பதிப்பக, பத்திரிகைத்துறையிலே ஈழத்தவர்களின் படைப்புகள் எமக்கூடாகவேயென்றும் நாமே அவர்களைத் தாங்குகின்றோமென்றும் பதாகைபிடிக்கும் பிரபல்யங்கள் இந்த மெய்யான நலன்விரும்பிகளுள்ளே அடக்கமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்திலே, சச்சிதானந்தத்தின் "&lt;em&gt;ஈழத்தவர் என்றாலே காமாலைக் கண்ணுடன் பார்க்கக் கூடிய தமிழகச் சூழ்நிலையிலும் (இராஜீவ் கொலை விசாரணை தொடர்பாகச் சைதாப்பேட்டைச் சிறையில் ஓராண்டைக் கழித்தவர் சிலோன் விஜயேந்திரன்) தரமான எழுத்துக்கும் படைப் புக்கும் அணுகு முறைக்கும் தமிழகப் பதிப்பாளர் தரும் ஆதரவு போற்றுதற்குரியது. மணிமேகலைப் பிரசுரத்தார் ஈழத்தவர் படைப்புகளை வெளிக் கொணரும் வேகத்தைப் பாராட்டுகிறேன்&lt;/em&gt;" என்ற கருத்தினை ஈழதேசிய அணுகுமுறையிலே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மணிமேகலைப்பிரசுரம் அடிப்படையிலே விற்பனையை முன்வைத்து எதையும் செய்யக்கூடியவர்கள். மணிமேகலைப்பதிப்பகத்தின் லெட்சுமணன் அவர்கள் ஒரு முறை திரு. நாராயணன் மாலன் என்ற இன்னொரு பத்திரிகையாளருடன் சேர்ந்து, வழக்கம்போல வாயை வைத்துக்கொள்ளமுடியாத, தற்போது இந்தியாவிலே பாதிநேரம் தஞ்சம் புகுந்து தானுமொரு பதிப்பாளராக உருவெடுத்துள்ள திரு. எஸ். பொன்னுத்துரை என்பவருக்கு, "புலம்பெயர்படைப்புகளே தமிழிலக்கியத்தினை நிமிர்த்தி நிறுத்தப்போக்கின்றன" என்ற மாதிரியான கருத்துக்கு, "சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் என்று பட்டம் கொடுத்தவர்கள் நாமே" என்ற விதத்திலே பதிலிறுத்ததை இப்பாராட்டினை மணிமேகலைப்பிரசுரத்துக்கு வழங்கும்நிலையிலே நினைவிலே கொள்கிறோம்; சுப்பிரமணியபாரதியையும் உ.வே.சாமிநாதரையும் ந. பிச்சமூர்த்தியையும் ரா. கிருஷ்ணமூர்த்தியினையும் மாதவையாவையும்மட்டுமே வைத்துத் தமிழிலக்கியவரலாறு கட்டப்படும் அவச்சூழலிலே அழுத்தி எதிர்காலவரலாற்றெழுதுதல் குறித்து நினைவூட்டவிரும்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதந்தாங்கு தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் முற்பட்ட காலமிருந்தே தமிழ்த்தேசியத்தினை முன்வைத்திருக்கும் திரு. சச்சிதானந்தம் இப்படியாக எத்தனையோ ஈழத்தமிழர் நலனையும் மெய்யாகவே பிணைத்துக்கொண்டு செயற்படுகின்ற நல்ல தமிழகப்பதிப்பகங்கள் (அவருடைய &lt;em&gt;காந்தளகம்&lt;/em&gt; உட்பட) இருக்கும்போது, &lt;em&gt;மணிமேகலைப்பிரசுரம்&lt;/em&gt; போன்ற சேற்றைக்கண்டால் பதித்து, ஆற்றைக்கண்டால் விற்கும் &lt;em&gt;பதிப்பப்ப&lt;/em&gt;ங்களின் செயற்பாடுகளைப் பாராட்டுக்குரியதாகச் சொல்வது முற்றான புரிதலை அவர் கொண்டிருக்கவில்லையோவென ஐயமேற்படுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இலெட்சுமணனின் தமையனாரான இரவி என்பவர் ஈழத்தின் திருகோணமலை தொடக்கம் இலண்டன், பெர்லின் வீதிகளூடாக அமெரிக்காவின் பொஸ்ரன் நகர்வரைக்கும் இப்படியான விற்பனை-பதிப்பக வர்த்தகராக எப்படியாக அலைகின்றார் ---- &lt;em&gt;மன்னிக்கவேண்டும், ஈழத்தவர்களிடையே ஊடுருவித்திரிகின்றார் &lt;/em&gt;- என்பதை நாம் தொடர்ந்து அவதானித்துக்கொண்டேயிருக்கின்றோமென்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அதற்கு, பதிப்பிலே தமது கோவணச்சலவைக்கணக்கும் சாம்பார்ச்சமையற்குறிப்பும் வந்தாலே போதுமென்ற வெறியிலே அலையும் புலம்பெயர்ந்த பெயராத ஈழத்தமிழர்களிலே பலரும் காவு போவது வெட்கத்துக்குரியது. ஆனால், இவர்களுக்கு தற்கால மணிமேகலையின் அண்மைக்காலவரலாறு தெரியாமலிருப்பதும் ஒரு காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தின்/ஈழத்தமிழர்களின் சுயமான சுயாதீனமான, சுதந்திரமான எதிர்காலத்துக்கு, இந்தியாவிலே முழுமையாகத் தங்கியிருக்கும் எந்த நிலையும் - அது பதிப்பகமாகட்டும், படைப்பாகட்டும், படமாகட்டும், எந்தப் பணியாரமாகட்டும் - நல்லது செய்யப்போவதில்லை. மிகச்சிறந்த உதாரணம், ஈழத்திலே தக்கிப்பிழைத்த விடுதலைப்புலிகள் இயக்கமும் தக்காது தேய்ந்த மாற்றியக்கங்களும். அதைவிட மிகவும் சிறப்பான கொள்கைகளும் ஆட்பலமும் மிக்க மீதி இயக்கங்கள் அழிந்தபோதும், விடுதலைப்புலிகள் இயக்கம் தக்கப்பிழைத்த முதன்மைக்காரணம், விடுதலைப்புலிகள் இயக்கம் தன் தளத்தினையும் உற்பத்தியினையும் முக்கிய நிலைகளையும் ஈழத்தினை மையமாக, ஈழத்திலே வைத்து செயற்பட்டதே.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், இன்றைக்கு இந்தியமேலாதிக்கவாதிகளின் கலாச்சார (&lt;em&gt;&lt;em&gt;'பண்பாடு'&lt;/em&gt; என்றால் அவர்களுக்குப் பிடிக்காது, &lt;em&gt;'கலாசார'&lt;/em&gt; என்றுகூட இயன்றவரை சரியாக எழுதாமலு மடம் பிடிப்பார்கள்&lt;/em&gt;) காவலர்கள் ஆடவும் பாடெனப் பாடவுமே நமது தக்கித்திருப்பதற்கான பண்பாட்டுக்கோவையும் எதிர்காலமுமில்லையென்று ஈழத்தவர்கள் உணர்த்தவேண்டிய தேவையும் வாழவேண்டிய அவசியமும் எமது எதிர்காலச்சந்ததியினையிட்டேனும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;திரு. சச்சிதானந்தத்தின் கருத்து, &lt;a href="http://newsarchives.indiainfo.com/2000/05/02/lanka10.html"&gt;&lt;em&gt;"I personally believe without India's effective intervention nothing can come to pass in Sri Lanka. And Indian intervention requires a good understanding of the ground situation in Sri Lanka" &lt;/em&gt;&lt;/a&gt;என்று இன்றுங்கூட இருக்கலாம்; ஆனால், எண்பதுகளிலே இராணுவரீதியாக ஊருடுவமுடியாது தோற்ற இந்திய மேலாதிக்கவாதிகள், ஈழத்திலே இன்றைக்கு வர்த்தக, பண்பாட்டுரீதியாக ஊடுருவ முயன்று ஓரளவுக்கு வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதை அவர் கவனிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சன் தொலைக்காட்சி, கல்கி, மணிரத்தினம், மணிமேகலைப்பிரசுரம் தொடக்கம் விடுமுறைக்காலங்களிலே இந்தியக்கோயிற்சுற்றுலா, உடுபுடவை வாங்குதலென்று இந்தியமேட்டுக்குடிகளின் கலாசாரத்தினைத் தம் பண்பாடு என்று எண்ணி மயங்கும் ஈழத்தவர்களை அடுத்த இந்தியமேட்டுக்குடிமயமாக்குதலின் அடுத்த கட்டமே, இந்தியமேலாதிக்கக்கூறுகளை மையங்கொண்டியங்கும் தமிழகக்காவலர்கள் ஈழத்தவர்களின் படைப்புகளை எடுத்து தம்விருப்புப்படி உடைப்பிலே போடும் இந்நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட அளவிலே எவரும் -&lt;em&gt;ஈழத்தவரானாலும் சரி, வேறெந்த மானிடக்குஞ்சானாலுஞ் சரி&lt;/em&gt;- தமக்கு விரும்பியபடி எங்கும் பதிப்பிக்கலாம் எதையும் பதிப்பிக்கலாம்; அதை மறுக்கவில்லை; ஆனால், ஈழத்தேசியத்திலே நம்பிக்கையும் கூடவே பதிப்புத்துறையிலே நெடுங்காலம் பணியாற்றுகின்றவருமான திரு. சச்சிதானந்தம், &lt;em&gt;மணிமேகலைப்பிரசுரம்&lt;/em&gt; ஈழப்படைப்புகளை "துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு" என்று வெளியிடுவதைப் பாராட்டுவதை சரியான பார்வையிலே வந்திருக்கக்கூடிய முடிவாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தேசியத்திலே நம்பிக்கை கொண்டவர்கள், இயன்றவரை பதிப்பகங்கள் தொடக்கம் படங்கள்வரைக்கும் கோயில் தொடக்கம் கோவணம்வரைக்கும் இந்தியமேலாதிக்கத்தினை முனைப்புடனோ அல்லது மூளையின் ஒரு மூலையிலேயேனுங்கூட மறைத்துவைத்தோ செயற்படும் கூட்டத்திற்கு ஒரு சதமேனும் மறைமுகமாகச் செல்லாமல் செயற்பட முயலவேண்டும். குறைந்தபட்சம், எக்காலத்திலும் இந்தியத்தேசியத்துக்குக் கெடுதல் விளையாத அதேநேரத்திலே, அதைக் கெடுக்காத ஈழநலனையும் முன்னெடுக்கும் எத்தனையோ பதிப்பகங்கள் தமிழ்நாட்டிலே உள்ளன. அவற்றினை ஆதரிக்க ஈழத்தமிழர்கள் முயலவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட முக்கியமாக, ஈழத்தின் பதிப்பகத்துறை தொழில்நுட்பவளவிலே இன்னும் முன்னேறவேண்டும்; இது குறித்து விரிவாக தன் பதிப்புத்துறை குறித்த பதிவுகளிலே எழுதியிருக்கும் திரு. சச்சிதானந்தனுக்கு நன்றி. இலங்கையின் கொழும்பினை மட்டுமே சார்ந்திருக்காமல், ஸ்ரீலங்கா அரசின், இந்தியாமேலாதிக்க அரசின் ஊடகக்கூலிகளின் கட்டுப்பாடு செல்லுபடியாகாத கைபடாத கைபடமுடியாத ஈழத்தின் முடுக்குகளிலே இப்பதிப்பகங்கள் தோன்றவேண்டும். வெளிச்சம் போன்ற இயக்கம் சார்ந்த பதிப்பகங்களும் இயக்கம் சாராத இன்னும் பல தமிழ் பதிப்பகங்களும் முகிழ்க்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தற்போதைய சூழலினைக் கவனிக்கும்போது, இதுவெல்லாம் நடக்குமென்று எனக்கு நம்பிக்கையில்லை; &lt;a href="http://www.tamilcanadian.com/pageview.php?ID=362&amp;SID=59"&gt;80 களிலே இராணுவ, அரசியல்ரீதியாக ஊடுருவ முனைந்து தோற்ற மேலாதிக்க இந்தியா&lt;/a&gt;, இன்றைக்கு பொருளாதார, ஊடக, கலை, பண்பாட்டுரீதியாக ஊடுவ முனைந்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதே சோகமான யதார்த்தமான நிலையாகும். :-(&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், இயன்றவரை இந்தியமேலாதிக்க/மேட்டுக்குடிகளின் ஈழ எடுபிடிகளை நாம் அடையாளம் கண்டுகொள்வதும் அவர்களின் பாதைகளை நமக்கேனும் நாம் தேர்ந்துகொள்ளாமல் மறுத்துக்கொள்வதும் மிகவும் அவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnation.org/asx/anthem.asx"&gt;வாழ்க ஈழம்! வளர்க தமிழ்த்தேசியம்!!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;பாடலுக்கு நன்றி: &lt;/span&gt;&lt;a href="http://www.tamilnation.org"&gt;&lt;span style="font-size:78%;"&gt;தமிழ்தேசியம். அமை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:78%;"&gt;'05 செப்ரெம்பர், 28 புதன் 14:45&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;பி.கு: இப்பதிவு, இப்பதிவினையும் இதுபோன்ற பதிவுகளையும் இப்பதிவுகளையிடுகின்ற எம்மைப் போன்றவர்களுக்கு இட முடியாதென தாம் நினைக்கும் விதத்திலே கிண்டலடித்துப் பதிவிட்டுப் பிழைக்க மட்டுமே பெருந்தன்மையும் பேரறிவும் கொண்ட அத்தனை மேலாதிக்க இந்தியச்சின்னக்குசுமூடிக்கழுதைப்புலிகளுக்கும் நம் பின்னூட்டத்தகுதியில்லாத உதிர்ந்த .யிர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. இவர்களுக்குத் தமிழ் அத்துணை பிடிக்காதென்பதால், Please serve yourself and go on living on what I pee(d) on my &lt;s&gt;ex&lt;/s&gt;dispense&lt;/span&gt; ;-) :-)&lt;br /&gt;_/\_&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://karaivu.blogspot.com"&gt;கரைவு&lt;/a&gt;&lt;strong&gt;~&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9576093-112793182943669538?l=karaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaivu.blogspot.com/feeds/112793182943669538/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9576093&amp;postID=112793182943669538' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/112793182943669538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/112793182943669538'/><link rel='alternate' type='text/html' href='http://karaivu.blogspot.com/2005/09/blog-post.html' title='தக்கன பிழைக்கும்'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9576093.post-112509570185852795</id><published>2005-08-26T17:32:00.000-05:00</published><updated>2005-08-28T14:03:38.836-05:00</updated><title type='text'>மதத்தில் மற/றைந்தது மாமதயானை</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;a href="http://karaivu.blogspot.com/2005/08/blog-post.html"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;மதத்தில் மற/றைந்தது மாமதயானை அல்லது critique of pure (t)reason&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாகூர் (உ)ரூமி &lt;a href="http://womankind.yarl.net/archives/2004/06/09/179"&gt;சல்மா&lt;/a&gt;வின் "இரண்டாம் ஜாமங்களின் கதை" ஐச் சாமியேறி உறுமிச் சாட்டையாற் சாத்தி வேப்பிலையால் உருவி எடுத்து &lt;a href="http://www.tamiloviam.com/rumi/page.asp?folderID=1&amp;ID=48"&gt;விமர்சித்திருக்கிறார் &lt;/a&gt;&lt;em&gt;(=விமர்சையாய்த் திருகியிருக்கிறார்&lt;/em&gt;). (&lt;em&gt;இங்கே, 'மைலாஞ்சி'க்கு அவரிடமிருந்து வந்த விமர்சனமெனக் கேள்விப்பட்டதையிட்டு "மீண்டுமொரு முறை" என்று சொல்வதா அல்லது அவரின் பதிவுகளை இட்டு "வழக்கம்போல" என்று சொல்வதா என்று எனக்குள்ளே குழப்பமேற்பட்டது; அதனாலே, அப்படியான இடைச்செருகற்கூற்றுகளை மேற்படி வசனத்திலே நான் நுழைக்கவிரும்பவில்லை&lt;/em&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;தட்டச்சுச்செருமலான ஆரம்பப்பந்திக்கு அடுத்த வரிகளாக இங்கே சொல்லிக்கொள்ளவேண்டியவை இரண்டு:&lt;br /&gt;&lt;br /&gt;1. 'இரண்டு ஜாமங்களின் கதை' இனை நான் இன்னும் வாசிக்கவில்லை; அதனாலே, நூல் குறித்து வாசகனாகச் சொந்தக்கருத்துச் சொல்ல எனக்கு இக்கணத்திலே ஏதுமில்லை. சொல்வதெல்லாம், ரூமியின் புத்தகப்பார்வை குறித்த என் கோணற்/ப்பார்வைவழிப்பட்டதே.&lt;br /&gt;&lt;br /&gt;2. இவரின் இஜாக விமர்சனத்தினை வாசிக்கமுன்னாலேயே, சல்மா குறித்தும் ரூமி குறித்தும் எனக்கு இன்னார் இப்படித்தான் எழுதுவார், எதிர்வினைப்பாரென்று அழுத்தி குத்திக் கொங்கிறீட் போட்டமாதிரியான நிலைப்படு பிம்பமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சல்மாவின் நூல் பற்றி ரூமியின் விமர்சனம் பார்த்த பின்னால், சல்மா பற்றிய பிம்பம் எனக்குள்ளே சற்று ஆடி நடுங்கித் தளும்பிப் போயிருக்கின்றது; ரூமியின் பிம்பம், இன்னும் உறுதியாய் உருக்காகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புதினம் பற்றிய ரூமியின் கருத்து, அண்மையிலே திவாகர் என்பவர் வெங்கடரமணனின் "குவாண்டம் கணிணி" நூல் பற்றி இந்திய ருடே இலே எழுதிய விமர்சனத்தை ஒத்ததாக இருக்கின்றது; புத்தகத்தை(&lt;em&gt;யும் எழுதியவரையும்&lt;/em&gt;) விமர்சகர் என்ற சுதந்திரத்தோடு ஒரு வாங்கு வாங்கிவிடலாமென்ற திட்டத்துடனேயே வரிந்து கட்டிக்கொண்டு எழுதியதாக ஒரு தோற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;புதினம் குறித்து ரூமியின் முடிவின் சாராம்சத்தினை அவரின் சொற்களிலேயே கேட்டால்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இந்த கதையினூடே இரண்டு விதமான பதிவுகளைப் பார்க்க முடிகிறது. அவற்றை சல்மா ஸ்பெஷல் என்று சொல்லலாம்: 1. போலித்தனமான பெண்ணியக் குரல். துணிச்சல் என்ற போர்வையில் வெளிப்படுத்தப்படும் வக்கிரங்களும் இதில் அடக்கம். 2. மதம் குறித்த சந்தேகங்களை, கேள்விகளாகவும், கிண்டலாகவும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம். 'இரண்டாம் ஜாமங்களின் கதை' என்பதால் இந்த இரண்டையும் ஜாமத்துக்கு ஒன்றாக வைத்துக்கொள்ளலாம&lt;/blockquote&gt;&lt;br /&gt;அவர் சாரம்சத்தினைத் தனது இந்தக்கதை குறித்த முடிவென்றே சொன்னாலும் இரண்டாங்கட்டக் கட்டுடைப்புக்கு நாங்கள் நகர்ந்துவிடலாம்; அவரோ ஒரு படி மேலே போய் குறித்த ஒரு புதினத்தின் முடிவிலே எழுத்தாளரின் எழுதுபண்புக்குறித்தொடையாக ஒரு பொதுக்கருத்தினைக் கட்டியெழுப்பி, "சல்மா ஸ்பெஷல்" என்று குருமா போட்டுவிடுகிறார். இதனாலே நமக்குத் தெரிவதென்னவென்றால், சல்மாவின் முன்னைய படைப்புகள் குறித்தும் இவர் இதே கருத்தினைத்தான் கொண்டிருக்கின்றார். மூடிய நம்பிக்கை கொண்டவரென்றும் தன்னைத் தானே சொல்லியிருப்பதாலே, இது குறித்து நாங்கள் ஆச்சரியப்படத்தேவையில்லை; ஆனாலும், இப்புதினத்தை வாசிக்கும்போது, மூடியைக் கொஞ்சம் திறந்து வைத்துக்கொண்டு, வாசித்திருக்கலாமே, விமர்சித்திருக்கலாமேயென்ற ஆதங்கம் தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது, இவர்கூறும், "போலித்தனமான பெண்ணியக் குரல். துணிச்சல் என்ற போர்வையில் வெளிப்படுத்தப்படும் வக்கிரங்களும் இதில் அடக்கம்" பற்றி;&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாகப் போலித்தனமான பெண்ணியக்குரல்கள் படைப்புலகத்திலே ஆண்கள், பெண்கள் இரு சாராரினாலும் பல காரணங்களுக்காக எழுதப்பட்டு வரவே செய்கின்றன; சல்மாவின் புதினத்தினை ரூமி எடுத்துச் சொல்வது தவிர்த்து நான் முழுமையாக வாசிக்கவில்லையாதலால், இப்புதினம் எப்படியானதென்பது எனக்குத் தெரியாது. ஆனால், அந்தப்போலித்தனமான பெண்ணியக்குரல் எழுவதிலே துணிச்சலென்ற போர்வையிலே வெளிப்படுத்தும் வக்கிரங்களும் அடங்குமென்கிறார்; ஜெயமோகனின் &lt;a href="http://djthamilan.blogspot.com/2004/12/blog-post_19.html"&gt;கன்னியாகுமரி&lt;/a&gt; சொல்லாத வக்கிரங்களை கதை பண்ணும் வக்கிரத்துக்காவே சல்மா சொல்லியிருக்கின்றாரா என்று யோசித்தால், கதையிலே சொல்லப்படும் வக்கிரங்கள் குறித்து, ரூமி தெரிந்தெடுத்து ஒரு பட்டியல் போட்டிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப்பட்டியலைப் பார்க்கும்போது, கே. டானியலின் 'பஞ்சமர்' புதினத்துக்கு வெளிவந்ததாக வாசித்த எதிர்மறைக்கருத்து ஒன்றுதான் ஞாபகத்துக்கு வருகின்றது; "சாதிமான்களின் பெண்களெல்லாம் பஞ்சம ஆண்களுக்காகத் துடிக்கின்றார்கள்; கள்ளமாக உறவு கொள்கின்றார்கள் என்பது போல டானியல் கதை எழுதியிருக்கின்றார்." ஒரு விதத்திலே பார்த்தால், புதினம் என்பது குறித்த சம்பவங்களைத் தேர்ந்து தம்முள்ளுள்ளே உள்ளிழையத் தொடர்போடு தொகுத்துத் தருவதுதான்; சம்பங்களைத் தேர்ந்தெடுப்பதென்னும்போது, வெள்ளைத்தளத்திலே கறுப்புப்புள்ளிகளைத் தேரும் விகாரப்படுத்தலுடனான தேர்வாகத்தான் முடியும். சமூகத்தின் முழுக்குறுக்குவெட்டினையும் பிரதிபலிக்கும் மாந்தர்களை, நிகழ்வுகளை, கதையிலே சொல்வது எப்போதும் சாத்தியமாகாது. ஒரு மனிதனின் இயல்பிலே நல்லதும் கெட்டதும் கலந்திருக்குமென்பதைக்கூட அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து, இஸ்லாமிய ராமராஜ்யம் (sic) ஒன்றிலே சல்மா கதை படைக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றாரோ என்பதாகவும் ஐயமெழுகின்றது. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசத்தாயினைமட்டுமே சாத்தியமானவளென எண்ணிப் பரவசமடையும் அவருக்கு, தென்னாசியாவிலே நிகழுவதாக நாம் அடிக்கடி வாசிக்கும் "கௌரவத்துக்கான (&lt;em&gt;பெண்&lt;/em&gt;)கொலை"களை ஞாபகப்படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன். மனிதர்களெல்லோரும் ஒரு வகைப்பட்டவர்களில்லை. அக்கினிப்பிரவேசத்தாய்க்கிருக்கும் சாத்தியம் கௌரவகொலை செய்யும் தாய்க்குமுண்டு. சல்மாவினை கருத்தினை மறுத்து, ரூமி சொல்ல/செய்ய முயல்வது தாய்மை (&lt;em&gt;பேசப்படும் பெண்மாந்தர்கள் எல்லோரும் தாய்களில்லாதபோதிலே திரைப்படங்களிலே எதுகைமோனைக்குப் பயன்படும் "பெண்மை" என்ற பதத்தை இங்கே கொள்வதிலே தவறில்லை&lt;/em&gt;) என்ற திரு(&lt;em&gt;கு&lt;/em&gt;)நிலைப்படுத்தலூடாக, பெண் என்பவளின் இயல்புகளை, அவர் விழையும் விதத்திலே தன் நம்பிக்கைக்கட்டுக்குள்ளே அடக்கமுயல்வதுதான். மறுபுறத்தில், இவற்றுக்கு மாற்றான பாத்திரங்களை விதந்தோத்தக்கூடிய சம்பவங்களையும் மாந்தர்களின் சமூக நெறிக்கோவையின்படி நல்லதென வரையறுக்கப்பட்ட இயல்புகளையும் ஓரிரண்டு முன்வைக்கும்போது, அவை சப்பைக்கட்டுகளாக ரூமிக்குத் தோன்றுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சாத்தியமில்லாத சில சம்பவங்கள் கதையிலே சொல்லப்படுவது குறித்து ரூமி சுட்டியிருப்பதிலே உண்மைகூட இருக்கலாம்; முற்றாக மறுக்கமுடியாது; முஸ்லீம் வாசகர்களுக்குமப்பாலான வாசகவட்டத்தின் விரிவு கருதி, சல்மா தானறிய நடந்திருக்கமுடியாத, அல்லது நடந்தவற்றினை உருப்பெருக்கி ("&lt;em&gt;பலான திரைப்படம்" குறித்த சம்பவம்&lt;/em&gt;) சிலவற்றினையும் சேர்த்துப் பொய்யான தன்மையைக் கொடுத்திருக்கலாம். இவ்வகைப்பட்டு இந்திய வாசகர்களைக் கருத்திலே கொண்டெழுதும் ஈழத்து எழுத்தாளர் தொடக்கம் புலம்பெயர்ந்தாரைக் கருத்திலே கொண்டு படம் சமைக்கும் கோடம்பாக்கக்காரர்கள்வரை நாம் கண்டிருக்கின்றோம். ஆனால், அந்நிலையிலேகூட, சல்மாவின் புதினத்தின் மீதிச்சம்பவங்களை நிராகரிக்க முடியாதென்றே படுகின்றது; தமிழக முஸ்லீங்கள் குறித்து கடந்த பத்திருபதாண்டுகளிலே வந்த புதினங்களிலே, தோப்பில் மீரானின் 'கூனந்தோப்பு', 'துறைமுகம்' என்பன குறிப்பிடத்தக்கன. அவற்றினை எடுத்தாற்கூட, அவற்றிலும் சல்மா புனைந்த களத்துக்கும் சம்பவங்களுக்கும் மாந்தருக்கும் சமனான கூறுகளைக் காணலாம். அந்நிலையிலே, சொல்லப்படும் கருத்தினையும் சொல்கின்றவரையும் குறித்து, போலித்தனமான பெண்ணியக்குரலென்றோ, வக்கிரமென்றோ அல்லது 'சல்மா ஸ்பெஷல்' என்றோ ரூமி தட்டிவிட்டுப்போவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக இவர் வந்த முடிவு, "மதம் குறித்த சந்தேகங்களை, கேள்விகளாகவும், கிண்டலாகவும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம்." இந்த முடிவினை வாசித்தபோது, Eco இன் "Der Name der Rose" இலே சிரிப்பதனை இறைக்கெதிரான பண்பென மறுதலித்துக் குற்றமாகக் கருதி குருமடத்து நூலக நூல்களிலே விஷம் தடவி வாசிப்பாரைக் கொலை செய்யும் மடப்பாதிரிதான் ஞாபகம் வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;Jorge de Burgos&lt;/strong&gt;: Laughter is a devilish whim which deforms, uh, the lineaments of the face and makes men look like monkeys.&lt;br /&gt;&lt;strong&gt;William of Baskerville&lt;/strong&gt;: Monkeys do not laugh. Laughter is particular to men.&lt;br /&gt;&lt;strong&gt;Jorge de Burgos&lt;/strong&gt;: As is sin. Christ never laughed.&lt;br /&gt;&lt;strong&gt;William of Baskerville&lt;/strong&gt;: Can we be so sure?&lt;br /&gt;&lt;strong&gt;Jorge de Burgos&lt;/strong&gt;: There is nothing in the Scriptures to say that he did.&lt;br /&gt;&lt;strong&gt;William of Baskerville&lt;/strong&gt;: And there's nothing in the Scriptures to say that he did not. Why, even the saints have been known to employ comedy, to ridicule the enemies of the Faith. For example, when the pagans plunged St. Maurice into the boiling water, he complained that his bath was too cold. The Sultan put his hand in... scalded himself. &lt;/blockquote&gt;&lt;br /&gt;ஒரு படைப்பாளி தன் சூழல் குறித்துத் தன் கருத்துச்சுதந்திரத்தோடு எந்தவித எழுத்து(ச்சு)த்தியோடும் தன் கருத்தினை வெளிப்படுத்தலாம். சல்மா இப்படியாக வெளிப்படுத்தியிருக்கின்றார்; இதிலே ரூமிக்கு எழுத்து உத்திதான் முக்கியமாகியிருக்கின்றதென்றால், அவர் கிறீஸ்துவுக்கு முன்னால், ஐந்தாம் நூற்றாண்டிலே &lt;a href="http://www.imagi-nation.com/moonstruck/clsc13.htm"&gt;Aristophanes&lt;/a&gt; இலிருந்து தனது அவதானத்தினை ஆரம்பிக்கவேண்டும். அரசியல்வாதிகளை விரும்பியவாறு பகிடி செய்கிறோம்; திரைப்படநடிகநடிகைகளை விரும்பியவாறு பகிடி செய்கிறோம்; மாற்றுச்சமூகத்தினரை இப்படியானவர்களென வரிச்சுக்கட்டி அடைத்துப் பகிடி பண்ணுகிறோம். அடுத்துப்படுத்திருக்கும் மனைவி பற்றியே "ஜோக்" அடிக்கின்றோம்; மதக்கருத்துகளுக்கும் மாதாக்களுக்கும்மட்டும் புனிதம் போட்டு பகிடிக்கு விலத்தப்பட்டதென வைக்கவேண்டுமென்பதென்ன நியாயம்?&lt;br /&gt;&lt;br /&gt;இடையிலே ரூமி தன் விமர்சனத்திலே தனக்கு வரக்கூடிய எதிர்ப்புகளை எண்ணி எச்சரிக்கையாக ஒரு குண்டு துளைக்காக்கவசத்தினை மாட்டிக்கொள்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இத்தகையை கேள்விகளும் இதற்கான பதில்களும் பல முறை கேட்கப்பட்டு பதில்களும் சொல்லப்பட்டு நீர்த்துப் போயாச்சு. ஒரு மதத்தைப் பின்பற்றும் ஒருவர் அதன் சட்டதிட்டங்கள் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்துகொள்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அப்படிக் கேள்வி கேட்பதே முற்போக்கு என்றும் ஆதிக்கத்துக்கு எதிரான நியாயமான குரலென்றும் எழுத்தில் பதிவு செய்வது, அதுவும் சீரியஸாக அல்ல, ஒரு ஓரமாக, எந்த வகையில் சரி என்று எனக்கு விளங்கவில்லை. திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லி ஈரான் போன்ற நாடுகளில் விபச்சாரம் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி ஏழைப் பெண்களை பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்துக் கொலை செய்கிறார்கள். இதை எதிர்த்து என்றைக்காவது சல்மா போன்றவர்கள் குரல் கொடுத்துள்ளார்களா? (பார்க்க எனது கட்டுரை கற்காலம்).&lt;/blockquote&gt;&lt;br /&gt;கேள்விகளை எழுப்புதலுக்குப் பதில்கள் சொல்லப்பட்டு நீர்த்துப்போய்விட்டதென்கிறார்; (&lt;em&gt;கேள்வி நீர்த்ததா, அல்லது, பதில் நீர்த்ததா என்பது இவரது வசனத்திலிருந்து தெளிவாகவில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும்&lt;/em&gt;) ஆனால், கேள்விகள் ஏன் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லையா? பதில்கள் மட்டுமே நடைமுறையிலே தீர்வாகாது; நாளாந்த வாழ்க்கையிலே தீர்வு ஏற்படும்வரை கேள்விகள் ஒரேதன்மையானவை என்றாலுங்கூட எழுப்பப்பட்டுக்கொண்டேயிருக்கும். இதேபோல படைப்புகளிலே கேள்விகளெழுப்புவதை "முற்போக்கென்றோ ஆதிக்கத்துக்கு எதிரான குரலென்றோ எழுத்திலே பதிவு செய்வதைச் சிலாகிப்பது" ஓர் ஆர்ப்பாட்டமும் அதீத வேஷமும் கொண்ட ஆடம்பர அவலமாகத் தமிழ்ப்படைப்புலகிலே காணக்கூடியதாகவிருக்கின்றது என்பதை பெருமளவுக்கு நாம் ஒத்துக்கொள்ளலாம் (&lt;em&gt;இத்தருணத்திலே, தமிழ்ப்படைப்புலகின் நூல்களின் அறிமுகவுரைகளிலே, தன் நண்பர்களின் நூல்களுக்கான விமர்சனங்களிலே புத்தகவெளியீட்டுவிழாக்களிலே, எழுத்தாளர்களைப் பாராட்டி இதேவகையான முற்போக்குப்பதங்களை, அமெரிக்காவிலே, "Great" என்று பயன்படுத்துவதற்கீடான சொற்களை, "&lt;em&gt;சல்லிக்கு ரெண்டு சொல்லு&lt;/em&gt;" என ரூமி அள்ளி வழங்குகின்ற பொய்மை கொண்டவரில்லை என்றே நம்புவோம்&lt;/em&gt;). தனிப்பட சல்மா குறித்தும் அப்படியாகவே உயர்வுநவிற்சியாய் விதந்தோத்தி, ரவிக்குமார் சொல்லியிருப்பதாகவும் வைத்துக்கொள்வோம்; ஆனால், அதற்காகமட்டும் ரூமி, "அதெல்லாம் இவர்களுக்கு முக்கியம் அல்ல. பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும். மிக அவசியமான தேவை அதுதான். அதற்காக ஒரு நாவல் எழுதவும் அவர்கள் தயார்" என்றெழுதுவது இவரின் கற்பனை வளர்ச்சியையோ வரட்சியையோ காட்டுவதாக மட்டுமல்ல, அவர் சுட்ட விழைவதுபோல, பெண்களை மதிக்கின்ற முன்மாதிரியாகவும் ("&lt;em&gt;மோகமுள்" அதைச் செய்ததா என்பதை அம்பை, கோ. ராஜாராம், வாசித்தவர்கள் கருத்துக்கு விட்டுவிடுவோம்&lt;/em&gt;) தெரியவில்லை. அப்பாவி ஏழைப்பெண்ணைக விபசாரியெனக் கல்லாலடிப்பதற்கும் "பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும். மிக அவசியமான தேவை அதுதான்" என்றெழுதித் தன் நம்பிக்கைக்கு மாறான கருத்துள்ள பெண்ணெழுத்தாளரைச் சொல்லாலடிப்பதற்கும் பெரிய வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சல்மா வேண்டுமென்றே எழுதியிருக்கின்றாரா என்று ரூமியின் விமர்சனத்தினை மட்டும் வைத்துக்கொண்டு எனக்கேதும் சொல்லமுடியாது; சல்மா குறித்து மட்டுமல்ல, பெரும்பாலான பெண் கவிஞர்கள் குறித்து எனக்கும் ஓர் ஆதங்கம் ஓரமாகவிருந்தது (&lt;em&gt;சிலர் குறித்து இன்னமுமிருக்கின்றது&lt;/em&gt;); பெண்களின் துயரங்களைக் குறித்து - குறிப்பாக, ஆண்களைச் சாடி- எழுதுகிற இவர்களிலே எத்தனை பேர் மெய்யாகவே தமக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டோ அல்லது தமக்கு வாய்ப்பிருக்கும் சந்தர்ப்பங்களிலோ அத்துயரங்கள் குறித்து எதிர்நடவடிக்கைகளாக எதனையேனும் நடைமுறையிலே செயற்படுத்தியிருக்கின்றார்கள் என்பதே அதுவாகும். அச்சிலும் இணையத்திலும் உற்பத்தியாகும் வெறும் கவிதையும் கதையும் கட்டுரையும் மட்டுமே எதையும் சாதித்துவிடமுடியுமென நான் நம்பவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஒரு படைப்பினை விமர்சிக்கும்போது, இரண்டு வழிமுறைகளிலே வாசிக்க/விமர்சிக்க வாய்ப்புண்டு; ஒன்று, எழுத்தாளரினையும் படைப்பு சம்பந்தமான எழுதப்பட்ட காலம், சூழல் போன்ற புறச்சூழல்களை முழுக்க எண்ணத்திலிருந்து உரித்து ஒதுக்கிவைத்து, படைப்பினை மட்டுமே முன்னெடுத்துக்கொண்டு, அதன் ஆழம் அகலத்தினை வெளிப்படையான கருத்து, சூட்சுமசொற்பயன்பாடுகளினை வைத்துப் பார்ப்பது; மற்றது, படைப்பாளியின் தனியாள் பண்புகளையும் ஆளுமையையும் படைப்பின் புறச்சூழல்களையும் உள்வாங்கிப் படைப்பினை வாசித்தல். இரண்டு நிலைகளிலுமே வாசகர் தன் நிறுவப்பட்ட நம்பிக்கைக்கோவையை விலத்தி வைத்துவிட்டு வாசிக்கமுடியாதுபோனாலுங்கூட, நிச்சயமாக, ஒரு படைப்புக்கு இந்த இரு விதமான விமர்சகர்களும் (&lt;em&gt;அதாவது, வாசகர்களும்&lt;/em&gt;) இருக்கவே செய்வார்கள். பல சந்தர்ப்பங்களிலே இந்த இரண்டு பார்வைகளூடாகவும் காணப்படுகின்றவை ஒத்திருக்க வாய்ப்பிருக்காது; ஒன்றுக்கொன்று முரணான முடிவுகளுக்கும் படைப்பாளிகள் குறித்து மாறுபட்ட கருத்துகளுக்கும் வர வாய்ப்பிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையிலே, படைப்பையும் படைப்பாளியையும் சேர்த்துப்படிக்கும் இரண்டாம்வகை விமர்சகராக, சல்மா குறித்தும் அவரது சகோதரர் மனுஷ்யபுத்திரன் குறித்தும் அறிந்திருக்கும் ரூமிக்கு சல்மா குறித்து அவருடைய சொந்தவாழ்க்கை குறித்தும் சொல்லக் எதிர்மறையான கருத்திருக்கலாம்; (&lt;em&gt;சல்மா மனுஷ்யபுத்திரன் சகோதரி என்பது காரணமாகவும் கனிமொழி கருணாநிதி புதல்வி என்பது காரணமாகவுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றார்களென்ற கருத்து என்னிடமும் இருந்ததென்பதை இங்கே சுட்டிவிடுகிறேன்; சல்மா சில ஆண்டுகளுக்கு முன்னால், இலங்கைக்கு முஸ்லீம் பெண்கள் மகாநாடு ஒன்றுக்குப் போனபோது சேரன் தனக்குச் சொன்னதை வைத்தே இலங்கைநிலை குறித்துப் பார்த்தவிதத்திலும் எனக்கு முரணுண்டு; ஆனால், அவை இப்படைப்புக்கு அப்பாற்பட்ட புறக்காரணிகள்; அதனால், அவர் இலங்கை குறித்துக் கவிதையோ கதையோ எழுதாதவரை அவருடைய படைப்பினைக் குறித்து என் பார்வை இப்புறக்காரணிகளை உள்வாங்கி இருக்க வாய்ப்பில்லை&lt;/em&gt;.) ரூமியின் இவ்வெதிர்க்கருத்தினை நியாயமென்றே கொள்வோம். ஆனால், சல்மாவின் படைப்பினை அத்தியாவசியமற்ற தோல்வியான அழுகிய முட்டை என்று சொல்லுமளவுக்கு இப்புறக்காரணி மட்டும் போதாது; அதைத் தீர்மானிப்பவை இரண்டு: ஒன்று, நடைமுறையிலே, சல்மா சொன்ன பிரச்சனைகள் (&lt;em&gt;கேள்விகள்&lt;/em&gt;) இன்னும் எதிர்நோக்கப்படுகின்றதா என்பதும் அவற்றுக்கான தீர்வுகள் (&lt;em&gt;நடைமுறைப்படுத்தப்படும் பதில்கள்&lt;/em&gt;) எந்நிலையிலே சாத்தியப்பட்டிருக்கின்றன என்பதும்; இரண்டாவது, இந்தப்பிரச்சனைகள் குறித்த பின்புலத்திலே எழுதப்பட்ட முன்னைய படைப்புகளிலும்விட, சல்மா எந்தவளவுக்கு தன்னைத் தனித்துக்காட்டும்விதமாகப் படைப்பினைத் தந்திருக்கின்றாரென்பது.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்களின் தோற்றம் குறித்து, அறிவியலாளர் "குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன்" என அணுகும் விதத்துக்கும் சமயவாதி "ஆண்டவன் படைத்தான் எங்கிட்டே கொடுத்தான்" என்று அணுகும் விதத்துக்கும் வித்தியாசமுண்டு. எது சரி பிழையென்பது இருக்கட்டும்; ஆனால், அவை குறித்து புதிய சிந்தனைகளும் கருத்துவிரிவாக்கத்துடனும் விவாதிக்கப்படக்கூடாதெனச் சொல்லமுடியுமா? அப்படியாகவிருந்திருந்தால், இன்றைக்குச் சமயவாதிகள் இன்னொரு புதுக்கருத்தோடு வந்திருக்கமுடியாது. இது போலத்தான் ரூமி கேட்கப்பட்ட கேள்விகள்- சொல்லப்பட்ட தீர்வுகள் பற்றிச் சொல்வதற்கும் பதில் சொல்ல முடியும். சரி, ரூமி சுட்டிச்சொல்லும் கேள்விகள் தீர்வுகள் சொல்லப்பட்டவைதானென்றே வைத்துக்கொள்ளலாம்; ஆனால், தீர்வினை யாரோ எந்த மதநூலிலேயோ கட்டுரையிலேயோ சொல்லியிருக்கின்றாரென்பதற்காக மட்டும், ஒரு கதையின் பாத்திரங்கள் இயல்பாகப் பேசாமல், வெட்டிவைத்துவிட்டுப் பேசாமற் போக எல்லா நிலைகளிலும் முடியுமா? வேண்டுமானால், அதைத் தவிர்க்கும் விதத்திலும் சொல்லும் உத்தியிலும் படைப்பாளி தோற்றிருக்கின்றார் வென்றிருக்கின்றாரென்று நாம் பேசலாம்; அதை விட்டுவிட்டு, இந்தக்கேள்விகளுக்குப் பதில் ஏற்கனவேயுண்டு என்ற விதத்திலே, ஒரு மார்க்க அறிஞர் பேசலாம், ஆனால், ஓர் இலக்கியத்திறனாய்வாளர் பேசலாமா? அப்படியாக பதில் சொல்லப்பட்டது குறித்துப் பேசக்கூடாதென்றால், இத்தனை மதங்கள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை; செமித்தியமதம் ஒன்றேயொன்றாகவே இருந்திருக்கும்; 'ஆலம் ஆரா" இன் பிறகு காதல் குறித்து ஓர் இந்தியப்படமுமே வந்திருக்கவாய்ப்பில்லை. இலக்கியத்திறனாய்வாளர் இந்த வகையிலே அணுகுதல் எவ்விதத்திலும் நேர்மையாகத் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நிறையப்பேர், பின் - நவீனத்துவமென்பது, ஒரு குறித்த ஆண்டிலே குறித்த மனிதரூடாகத் தோன்றிய ஒற்றைக்கூறான கொள்கை வடிவமென்ற தோரணையிலே பேசிக்கொண்டிருக்கின்றார்களென்றால், மீதிப்பேருக்கு, இப்போதெல்லாம் அதை வரையறை செய்வது, தொடரங்காடியிலே தள்ளுவண்டியிலே அள்ளிப்போடும் அனைத்துப் பண்டங்களினதும் தொகுப்பாகிவிட்டது; அவரவர் வண்டிக்கு அவரவர் பட்டியலும் பண்டங்களும். ஆனால், "இது(மட்டுந்)தாண்டா பின் - நவீனத்துவம்" என்று தன் இரவுக்கனாப்பட்டியலை மட்டும் அச்சடித்துக் கடைவாசலிலே நின்று உள்ளே போகும் அத்தனை பேரிடமும் கொடுப்பது, தமிழிலக்கிய உலகத்திலே கொஞ்சக்காலமாக தொண்ணூறுகளின் பின்னரையிலே நடந்த விடயம் (&lt;em&gt;காண்க: நடந்த விடயமென்றுதான் நினைத்திருந்தேன்; இப்போதும் நடக்கின்றதென்பதை, ரூமி ரவிக்குமார் சொல்வதாகக் குறித்திருப்பதிலிருந்து அறிந்து கொண்டேன்&lt;/em&gt;). வெறும் சொற்களை வைத்துக்கொண்டு வெருட்டுவதெல்லாம் ஆயதமிழ்க்கலைகளிலே அறுபத்தைந்தாவதான, சமகாலப்படைப்பிலக்கியக்கலையின் சாப்பாட்டிலையிலே அடக்கம். ஒளித்து மறைத்து வாசிக்காத சஞ்சிகை, பத்திரிகைகளிலே, படங்களிலே கழிவுறுப்புகளையும், பாலுறுப்புகளையும் அதுசார் உணர்வுகளையும் வெளிப்பாடுகளையும் சொட்டிவிட்டால், இடக்கரடக்கல் இல்லாத எதையுமே பின் - நவீனத்துவம் என்று வகைப்படுத்துதலும் அதை படைப்புத்துறைமுன்னெடுப்பென்றும் இலக்கியக்கெடுதலென்றும் ஆளாளின் விருப்புவெறுப்புக்கேற்ப தூக்கியும் தாழ்த்தியும் பிடித்துக்கொள்வது அநியாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்க இலக்கியங்களிலே அல்குல், கொங்கை என்று சொல்லப்படுவது அக்காலத்திலே வெட்கக்கேடாக இருந்திருக்குமா? (&lt;em&gt;நான் வாசித்த அளவிலே ஆணுறுப்பினைப் பற்றி எங்கும் பேசப்பட்டதாது பண்டைத்தமிழ்க்குமுகாயம் ஆணாதிக்கம் மிக்கதாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதாக உறுத்தவே செய்கிறது&lt;/em&gt;) பின்-நவீனத்துவம் தமிழிலே விரியப் பேசப்படாத காலத்துக்கு முன்னரே, 'குருதிமலை' புதினத்திலே வேலைசெய்யாப்போராட்டம் நடத்துவதை எதிர்க்கும் ஒரு பாத்திரம் பேசும், "(&lt;em&gt;தேயிலை கிள்ளும்&lt;/em&gt;) தொழிலுக்குப் போகாமலிருந்தால், நாளைக்கு யாருக்குக் குண்டி காயும்?" கோமல் சுவாமிநாதனின் (&lt;em&gt;பாலசந்தர் திரைப்படமாக இயக்கிய&lt;/em&gt;) "தண்ணீர் தண்ணீர் தண்ணீர்" இலே ஒரு பாத்திரம் கேட்கும், "குண்டி கழுவவே தண்ணீரில்லை." பாலுமகேந்திராவின் வீடு படத்திலே அர்ச்சனாவிடம் ஏமாற்றிய கட்டிடக்காரர் குறித்து ஒரு பாத்திரம் ஆத்திரத்தோடு பேசும், "விட்டுத்தள்ளும்மா; அவன் உன்னோட ஒரு பீக்கட்டிக்குச் சமனாவானா?" அல்லது, ஆதவனின் காகிதமலர்கள் தொட்டிருக்கும் சில பிரச்சனைகளின் (&lt;em&gt;தாய்-மகன் இடையான உணர்வு&lt;/em&gt;) தன்மை; இந்தப்படைப்புகளிலே வாசகர், பார்வையாளர் எவருமே இது குறித்து இடக்கரடக்கலில்லாத படைப்பென முறையிட்டுக்கொண்டிருக்கவில்லை; சொல்லப்போனால், இந்தப்பதங்களில்லாவிட்டிருந்தால், அந்தப்படைப்புகளின் வீரியம் வெளிப்படாமல் ஸ்கலிதமாகியிருக்கும் ;-) மிகவும் சிறப்பாக, இப்படியான சொற்களைப் பயன்படுத்திய படைப்புகளாக, ஷோபா சக்தியின் "கொரில்லா", ராஜ்கௌதமனின் "சிலுவைராஜ் சரித்திரம்", பாமாவின் "கருக்கு", "சங்கதி" ஆகியவறினைச் சொல்லலாம். அவர்கள் இடக்கரடக்கல் இல்லாமலே நடைமுறையிலே புழங்கு சொற்களைப் பயன்படுத்திய விதமும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களும் மிகவும் கச்சிதமாகவுமிருந்தன; அங்கே ஆபாசமும் அசிங்கமும் உதட்டைத் துருத்தி எட்டிப்பாக்கும் தெத்திப்பற்களாகத் தோன்றவில்லை; வெறுமனே கதையை வலுப்படுத்தும் அவசியமே தெரிந்தது. (&lt;em&gt;அமெரிக்காவிலும் இதே நிலைதான் இருந்திருக்கின்றது. "&lt;a href="http://www.imdb.com/title/tt0066626/"&gt;All in the Family&lt;/a&gt;" வரும் காலம் வரைக்கும் தொலைக்காட்சியிலே கழிப்பறை என்பது குறித்துப் பேசுவதென்பதே நினைத்துப் பார்க்கமுடியாததாம்; ஆனால், இந்தத்தொலைக்காட்சித்தொடரிலே கழிப்பறையிலே ஆணும் பெண்ணும் நடந்து கொள்ளும் விதத்தினைச் சுட்டிப் பேசுவதினை வைத்தே சில பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். "அந்நேரத்திலே பார்வையாளர்களும் அதனைப் பெரிது படுத்திச் சுட்டவில்லை; இயல்பான பிரச்சனையின் விவாதமென்றே கொண்டு போனார்கள்" என்று தயாரிப்பாளர் ஒரு நிகழ்ச்சியிலே சொன்னார்&lt;/em&gt;).&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தவென்றே வரும் படைப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை; சில சாருநிவேதிதாவின் படைப்புகள், ஷோபா சக்தியின் 'ம்', இருள்வெளியிலே வந்த ஐந்துபேர் கூட்டுப்புணர்தல் பற்றிய கதை (&lt;em&gt;மகாபாரதக்கதை அல்ல&lt;/em&gt;) போன்றவற்றினை அவற்றுக்குள்ளே அடக்குவேன். பொருத்தமாக ஒரு படைப்பிலே/விமர்சனத்திலே ஒரு பதம் வருவதற்கும் அதிர்ச்சிக்காகத் திணிப்பதற்குமுள்ள வித்தியாசத்தினை இலகுவிலே கண்டுகொள்ளலாம்; உதாரணத்துக்கு, 'மன்மதன்' படத்துக்காக, "சிம்புவின் ஆண்குறியை அறுக்கவேண்டும்" என எழுதினால், அது பக்கப்பக்கமான விமர்சனம் எழுதி அந்தப்படத்தினைக் கிழிப்பதிற்கும் மேலான விளக்கத்தினைத் தருகின்றது; அதே நேரத்திலே, "சிம்புவின் ஆண்குறியை அறுக்கவேண்டும்" என ஐம்பது பதிவுகளின் பின்னூட்டங்களிலே 'மன்மதன்' ஐம்பதாவது நாளுக்காக போட்டுக்கொண்டு திரிவது அதிர்ச்சிக்காகவும் விளம்பரத்துக்காகவும் திணிப்பதாக மாறுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே கேள்வி, "சல்மாவின் கதையிலே பேசப்படவேண்டிய பிரச்சனைகளை, அதற்குரிய தொனியிலே, அதீதமின்றி, தேவையான பதங்களைப் பொருத்தமாகப் பயன்படுத்திப் பேசியிருக்கவில்லையா?" என்பதே? ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரமோ, &lt;a href="http://manaosai.blogspot.com/2005/08/3.html"&gt;பாமா&lt;/a&gt;வின் 'சங்கதி', 'கருக்கு' ஆகியன பயன்படுத்தாத விதத்திலே சல்மா பயன்படுத்தியிருக்கின்றாரா? இன்னும், இரா. முருகனின் அரசூர் வம்சம் குறித்துச் சிலாகித்து ரூமி எழுதியிருக்கின்றார்; அதிலே இராமு பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் / சம்பவங்கள் / செயற்பாடுகள் குறித்துச் &lt;a href="http://www.tamiloviam.com/rumi/page.asp?ID=40&amp;fldrID=1"&gt;சமாதானம் கொள்கிறார்/ சொல்கிறார்&lt;/a&gt; இவர்களைப்போலத்தான் பெருமளவில் சல்மாவும் பயன்படுத்தியிருக்கின்றாரென்றால், இராமுவுக்கு எதிராகவும் சல்மாவுக்கெதிராக வைத்த குற்றச்சாட்டுகளையொத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கவேண்டும், ராஜ்கௌதமன், பாமாவுக்குமெதிராகவும் அதேபோன்ற விமர்சனத்தினை முன்வைப்பாரா? (&lt;em&gt;ரவிக்குமாரும் ராஜ்கௌதமனும் ஒரேமடத்திலேதான் வாயிற்காப்போராக இருக்கின்றார்களென்ற அபூர்வமான காரணமேதுமில்லாவிட்டால்&lt;/em&gt;). சல்மாவின் தொனி கதைக்கு ஆகாததெனில், அதைச் சுட்டும் விதம் வேறு; சாருநிவேதிதா குறித்த ரூமியின் ஆதங்கத்தோடு, "ஆனால் பைத்தியக்காரன் வழித்துக் காட்டுகிறான் என்றால் அதே போல செய்துகாட்டித்தான் அடுத்தவருக்குப் புரியவைக்க வேண்டும் என்ற நினைப்பை என்னவென்று சொல்வது? இதுதான் பின் நவீனத்துவமோ!" என்பது வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவிலே, முஸ்லீம் பெண்கள் எதைக் குறித்து (&lt;em&gt;குறிப்பாக, இஸ்லாம் &amp; முஸ்லீங்கள் சம்பந்தப்பட்டு&lt;/em&gt;) எப்படி எழுதவேண்டுமென்று தன் நம்பிக்கைகளை நியாயப்படுத்துவதாகவே (&lt;em&gt;அல்லது நிர்ப்பந்தப்படுத்துவதாகவெனச் சொல்வோமா?&lt;/em&gt;) ரூமியின் சொற்கள் அறுத்துத் தெறித்து விழுந்திருக்கிறதாகத்தான் தோன்றுகிறது; அதிலுங்கூட, முஸ்லீம் பெண்ணாக இல்லாமல், தோப்பில் மீரான் போன்ற முஸ்லீம் ஆணாகவிருந்திருந்தால், சல்மாவுக்கெதிரான/ அவர் நூலுக்கெதிரான விமர்சனம் காட்டமாக வைக்கப்பட்டிருக்காதோ எனவும் ஐயமெழுகிறது (&lt;em&gt;ரசூலுக்கு நிகழ்ந்தது வேறு; "ஏனொரு பெண்நபியில்லை வாப்பா?" என்று கேட்டது போலித்தனமான பெண்ணியக்கருத்தின் வழிப்பட்டிருக்கலாம்&lt;/em&gt;) . ஆங்கிலப்பேராசிரியரான ரூமி, பிறப்பாலேயோ வளர்ப்பாலேயோ முஸ்லீங்கள் அல்லாத காமம் குறித்துப் புனைகதை பதிந்த &lt;a href="http://www.beilharz.com/autores/markandaya/"&gt;கமலா மார்க்கண்டேயா&lt;/a&gt; தொட்டு அண்மைய &lt;a href="http://www.mamohanraj.com/"&gt;மேரி ஆன் மோஹன்ராஜ் &lt;/a&gt;வரையான பெண்பதிவுகள் குறித்து என்ன கருத்தினைக் கொண்டிருக்கின்றார் என்பதை அறிந்தால், சல்மாவின் படைப்பினைக் குறித்து இவருடைய பார்வை இன்னும் எமக்குத் தெளிவாகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரவிக்குமார் குறித்த என்னிடமிருந்த பிம்பம் (&lt;em&gt;சில நண்பர்களினது கருத்துகளுங்கூட&lt;/em&gt;) கலங்கிப்போய்விட்டது; நாற்சார்மடத்திலே சில சீடர்கள் அகல புதுச்சீடர்கள் சேர்ந்திருக்கின்றார்கள்; பீடத்துக்கு அருகாமையிலும் சேய்மையும் வந்தும் போய்க்கொண்டிருமிருக்கின்றார்கள்; ரவிக்குமார் சிறந்த துவாரபாலகராயிருக்கின்றதாகவே தோன்றுகின்றது; &lt;em&gt;("பிள்ளைகெடுத்தான் விளை" குற்றக்குறளிகள் நுழையாமற் காத்ததினைப் பார்க்கவேண்டுமே&lt;/em&gt;). ஆனால், சல்மாவின் விமர்சனத்துக்கு "நல்லது. எனது நோக்கம் இலக்கியம் மட்டுமே. இப்படி இமயமலையில் உச்சியின் சல்மாவை வைப்பதற்கு ரவிக்குமாரின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை" என்று ரூமி எழுதுவாரென்றால், இதேபோல, மனுஷ்யபுத்திரனுக்காக இத்துணை ரூமி கவலைப்படக்காரணமென்னவென இன்னொரு விதண்டாவாத ஆராய்ச்சியின் முடிவு, "நல்லது. எனது நோக்கம் இலக்கியம் மட்டுமே. இப்படி மரியானா அகழியின் ஆழத்தில் சல்மாவை வைப்பதற்கு ரூமியின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை" என சல்மாவின் புதினம் குறித்த ரூமியின் இவ்விமர்சனத்தினை வாசிப்பவர் எழுதுவதிலே முடிவடையும். ஆனால், இவையெல்லாம் தேவையில்லாத கேள்விகளெனத் தோன்றுகின்றன; தமிழ்ப்படைப்புலக விமர்சனங்களிலே, வெளியீட்டுவிழாக்களிலே, அணிந்துரை, முகவுரை ஆகியவற்றிலே இருக்கும் கோளாறெல்லாம், படைப்பை விட்டுவிட்டு, படைத்தவனையும் படைப்புக்குப் பங்களித்தாரையும் அதீதமாகத் தூக்கிப்பிடித்துக்கொள்ளும் நோயின் குணம்வழிப்பட்டதெனவே தோன்றுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"காலியிடத்தில் ஒரு அழுகின கோழி முட்டை" என்பது சரிதான்; யார்/எங்கே 'காலி' என்பதுதான் குழப்பமாகிறது :-(&lt;br /&gt;&lt;br /&gt;"Facts are stubborn things, and whatever may be our wishes, our inclinations, or the dictates of our passions, they cannot alter the state of facts and evidences." - John Adams&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:78%;"&gt;'05 ஓகஸ்ற், 26 வெள்ளி&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;பி.கு.; எழுதியதை, வாசிப்பின் இலகு எண்ணிப் பிரித்தது கழித்துக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்து சீர்படுத்த முயன்றாலும், அஃது ஆகிற காரியமாகத் தெரியவில்லையாதலால், அப்படியே தொக்கவிட்டிருப்பதற்கு மன்னிக்கவும். "புரிகிறமாதிரி எழுதவும்",, "அகராதி தரவும்" போன்ற புண்ணிய பின்னூட்டங்களை எழுதத் தனியே ஒரு பின்னூட்டப்புத்தகம் வருங்காலத்திலே சேர்ப்பேனென இத்தால் உறுதிப்படுத்துகிறேன். :)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9576093-112509570185852795?l=karaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaivu.blogspot.com/feeds/112509570185852795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9576093&amp;postID=112509570185852795' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/112509570185852795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/112509570185852795'/><link rel='alternate' type='text/html' href='http://karaivu.blogspot.com/2005/08/blog-post.html' title='மதத்தில் மற/றைந்தது மாமதயானை'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9576093.post-111618536375536882</id><published>2005-05-15T14:20:00.000-05:00</published><updated>2005-05-15T14:30:35.783-05:00</updated><title type='text'>உறுத்தல் - 1</title><content type='html'>இந்தக்குறிப்பினை, மீள வாசித்துத் திருத்திக்கொண்டு போடலாமென்று எண்ணி, இரண்டு நாட்கள்; சனி-ஞாயிறுகளே மிகவும் வேலை நிறைந்த நாட்களாகிப் போனதிலே, திருத்துவது சாத்தியமாகத் தெரியவில்லை. பிந்திப்போடினும், வழக்கம்போல, படம்போடவும் மற்றவர் பதிவுகளிலே பின்னூட்டத்துக்கும் மட்டுமே சிற்றிடைப்பொழுதுகளே கிடைக்குமென்பதாலே, அப்படியே இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'05 மே, 15 ஞாயி. 15:15 கிநிநே.&lt;/em&gt;&lt;br /&gt;=========================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://photos1.blogger.com/img/83/1568/0/IYER-A.jpg" /&gt;&lt;br /&gt;[படம் நன்றி: சாந்தகுணம்]&lt;br /&gt;&lt;br /&gt;மே 2005 காலச்சுவடு; காலச்சுவட்டின் ஆசிரியர் கண்ணன், தன் வழக்கமான 'மௌனத்தின் சிறகடிப்பு' பத்தியின்கீழ் &lt;a href="http://tamil.sify.com/kalachuvadu/may05/fullstory.php?id=13734179"&gt;"குகுதம் தீராநதியின் இதழியல் திருட்டு"&lt;/a&gt;என்ற குறிப்பினை எழுதியிருக்கின்றார். கட்டுரையின் அடிக்கருத்தைப் பத்தித்தலைப்பே சொல்லிவிடுகின்றது. கொஞ்சம் விரித்துச் சொன்னால், ஐங்கரநேசன் என்பவர் இலங்கையிலிருந்து வெளிவரும் தினக்குரல் என்ற பத்திரிகைக்காக இலண்டன் பத்மநாபஐயரினைச் செவ்வி கண்டிருக்கின்றார். 2003 ஓகஸ்ற்-செப்ரம்பரிலே இச்செவ்வி &lt;a href="http://www.geocities.com/senthurann/PathmanabaIyer.htm"&gt;வெளிவந்தது&lt;/a&gt;. இதனை குமுதம்-தீராநதி அண்மையிலே (மார்ச் 2005) எடுத்துப்போட்டிருக்கின்றது. அது எப்படியாக, ஐங்கரநேசன்&amp; தினக்குரல் இலிருந்து தளவாய் சுந்தரம் &amp;amp;amp;amp; &lt;a href="http://www.kumudam.com/theeranadhi/mainpage.php"&gt;தீராநதி&lt;/a&gt;க்கு வந்தடைந்தது என்பது பற்றியும் அதிலே சம்பந்தப்பட்டவர்கள் பற்றியதுமான கண்ணனின் 2005 - மே காலச்சுவடு பத்தி. ஏற்கனவே பத்திரிகைசார்ந்தும் தனிப்பட்ட ஆட்கள் சார்ந்ததுமாக இருந்துவரும் நிலைகளையும் கண்ணனின் விருப்புவெறுப்புகளையும் வெளிக்காட்டியிருக்கிறது. அவற்றினைப் பற்றிக் கருத்தினைச் சொல்ல, எனக்கு விபரம் போதாது; ஈடுபாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டுமானால், எனக்கு உறுத்தியதைத் தவிர்த்து ஒரு விடயத்தினை மட்டும் இது குறித்துச் சொல்லலாம்; ஆக, குமுதம் குடும்பத்திலிருந்து வரும் சஞ்சிகைகளின் விற்பனை குறித்த வேட்கையிலே சட்டமீறலாகவும் நெறிமீறலாகவும் நிகழ்கின்றவற்றின் தடயங்கள் கவனிக்காமல் விடப்பட்டும் மறைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் போவது வழமை. பொதுவிலே, குமுதத்தின் இவ்வகைச்செயற்பாடு, பெரும்பாலான பெருவிற்பனை, இடைநிலைப்பத்திரிகைகளிலே அளவிலே பெரிதாகவோ சிறிதாகவோ நிகழ்கின்றனவையே. அதனாலேயே, இப்படியான எல்லைமீறல்கள்தான் நடைமுறை என்ற அளவிலே எந்த இவ்வகையான பதிப்பூடகங்களினாலும் பேசப்படுவதில்லை. ஆனால், இப்போது, பெருவிற்பனைப்பத்திரிகைகளினை எதிர்த்து ஓரளவுக்குச் செயற்படவும் அவற்றின் வாசகர்களிலே ஒரு சிறுபங்கினையேனும் தன்பக்கம் இழுத்துக்கொள்ளவுங்கூடிய பொருட்பலம், விசுவாசகர்களை இடைநிலைப்பத்திரிகைகள் கொண்டிருக்கின்றன. இந்த வகையிலேயே காலச்சுவட்டின் குமுதம் மீதான தீராக்கருத்துமோதல் படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எதேச்சையான சமகாலப்பதிவாக, உயிர்மை மே-2005 இலே குமுதத்தின் தான்தோன்றித்தனமான போக்கினை சுகுமாரன் குறிப்பிட்டிருக்கின்றார். ஓ.வி. விஜயனின் "காஸாக்கின் இதிகாசம்" கட்டுரையைத் தான் குமுதத்துக்காக மொழிபெயர்க்கப்போய், இடையிலே அனுமதி முதலிலே கொடுத்த ஓ. வி. விஜயன் வேண்டாமென்றபின், தான் குமுதத்திடம் அதுபற்றிக்கூறி நிறுத்தும்படி சொன்னதாகவும், ஆனால், குமுதம் தொடர்ந்து அடுத்த பகுதியினை வெளியிட்டதாகவும், பின்னர், ஓ.வி.விஜயன் தன்மீது சட்டரீதியாக வழக்குத் தொடர, குமுதம், அதற்கு அடுத்த வெளியீட்டிலே, பழியினைத் தன்மீது போட்டுவிட்டதாகவும் தன் "குற்றமும் விடுதலையும்" கட்டுரையிலே சுட்டியிருக்கின்றார். குமுதத்தின் &lt;a href="http://www.kumudam.com/eelam/mainpage.php"&gt;யாழ்மணம்&lt;/a&gt; முன்னர் இலங்கையிலிருந்து வெளிவந்த மூன்றாவது மனிதன் இதழ்களிலிருந்தும் நேர்காணல்களை அள்ளியெடுத்துப்போட்டிருக்கின்றது. அதுபோன்றும் புலம்பெயர்ந்தார்தமிழ்ச்சஞ்சிகைகளிருந்தும் எடுத்துப்போட்டுமே, யாழ்மணம் நடந்திருக்கின்றதாக, அவற்றினைத் தொடந்து வாசிக்கின்ற பலர் உணர்ந்திருப்பார்கள். ஆனால், யாழ்மணம் என்ற இணையத்தூண்டிலினைக் குமுதம் எதிர்பார்த்த மீன்கள் கௌவாததால், பின்னொரு முறை அஃது அச்சுப்பதிப்பாக வரும் நோக்கிலே போடப்பட்டிருப்பின், அந்தத்திட்டம் கைவிடப்பட்டிருக்கலாம் (&lt;em&gt;ஆனால், இதேநோக்கினை ஓரளவுக்குக் கொண்டிருந்த் கோடம்பாக்கச்சமாந்திரங்களான தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால், நளதமயந்தி வெற்றி பெற்றது வேதனைக்குரிய விடயம்&lt;/em&gt;); யாழ்மணம் இணையத்திலேகூட, யாழ் மணப்பதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதேநேரத்திலே, இங்கே இன்னொன்றையும் நாங்கள் பார்க்கவேண்டும் - குறிப்பாக, கண்ணன்; இடைநிலைப்பத்திரிகைகள் தொடக்கம், சிறுபத்திரிகைகள் வரைக்கும் நிறைய பிறமொழி ஆக்கங்களை மொழிபெயர்த்துப்போடுகின்றன - சில, மூலமொழி, இடைமொழியாளர்களுக்கு நன்றியுடன், சில அதுவுமேயில்லாமல். ஆனால், இப்படைப்புகளிலே எத்தனை இந்த மூலமொழி, இடைமொழிப்படைப்பாளி-மொழிபெயர்ப்பாளர்களின் அனுமதி பெற்று வருகின்றன என்பது எனக்குத் தெரியாது. தமிழிலே ஒரு பத்திரிகையிலிருந்து இன்னொரு சஞ்சிகை அள்ளிப்போடுவதோ, அல்லது சரியான அங்கீகாரத்தைக் கொடுக்காமலோ, அல்லது தனக்குத் தேவையானதை மட்டும் அள்ளிப்போடுவதோமட்டுமே தவறானது, மற்றைய மொழிப்படைப்புகளினை எப்போதும் நாங்கள் எடுத்துப் பெயர்த்து, விற்பனைக்காகப் போட உரித்துடையோம் என்ற ஒரு சிந்தைப்போக்கு இருப்பதாக எண்ணுகிறேன். பிடித்த மூலப்படைப்பாளி, பதிப்பாளர், பத்திரிகை தொடங்கி, அதைத் தமிழிலே கொண்டு வந்து அச்சடிக்கும்வரைக்குமுள்ள, ஆள் அணுகுதல், உரித்துப்பெறுதல், கொடுக்கவேண்டிய சன்மானம், இதற்கான காலத்தேவை, ஆள்வேலைச்செலவு என்பன (இடைநிலை &amp;) சிறுபத்திரிகைகளுக்குக் கட்டுப்படியாகாதென்பதையும் நிச்சயமாக ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அப்படியாக இருக்கும்போது, தீராநதி திரும்ப காலச்சுவட்டினைப் பார்த்து, தகுந்த ஆதாரங்களுடன் "கேட்டா எடுத்துப்போட்டாய்?" என்றொரு கேள்வியினை ஏதாவதொரு காலச்சுவட்டின் கவிதை, கதை, கட்டுரை குறித்துக் கேட்குமானால், மறுபேச்சுப் பேசமுடியாத நிலை காலச்சுவட்டுக்கு வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தீராநதியின் காலச்சுவடு குறித்த கண்ணனின் கவலை பின்வருவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது; "ஈழத்தமிழர்தேசியம் குறித்து காலச்சுவடு போன்ற சஞ்சிகைகளும் எதிர்நிலையான கருத்தை வெளியிடுகின்றது" என்று பத்மநாப ஐயர் சொன்ன கருத்தினைப் பெருப்பித்து, தீராநதி போட்டுவிட்டதைச் சுட்டி, காலச்சுவடோ தானோ அப்படியாக இல்லை என்பதை நிரூபிக்கும்விதமாக சில நிகழ்வுகளை ஆதாரங்களாக முன் வைத்திருந்தார் - அண்மையிலே ஈழநாதன் குறிப்பிட்ட, சிங்கப்பூரிலே கண்ணன் வந்தபோது நிகழ்ந்த நிகழ்வு உட்பட; ஆனால், இதுமட்டும், காலச்சுவட்டினை ஈழத்தேசியத்துக்கு எதிரான சஞ்சிகையாக தீராநதி இந்தச்செவ்வியினை வைத்துக்கொண்டு நிறுத்த முயலாதிருந்தால், கண்ணன் இந்தக்கட்டுரை தீராநதியிலே வந்திருப்பது குறித்துப் பத்தியெழுதியிருப்பாரா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இனி நான் எனக்கு உறுத்தியதைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். இரு குழுவினரின் இந்த உதைபந்தாட்டத்துக்குப் பத்மநாப ஐயரின் தலை பந்தாக உருண்டது எனக்குக் கவலை; ஏற்கனவே, ஐயர் என்ற பின்னொட்டினைக் கொண்டிருப்பதற்காக, தமிழகத்தின் பிராமணர்-அல்லார் சிக்கலினை இலங்கைக்கு அப்படியே களம், காலம், "ஆதிக்கம் ஆர் கையில்" என்பன பார்க்காது பெயர்க்கமுயல்கையிலே பிராமணர் என்ற முகம் தேடுகின்றவர்களுக்கு அவர் சில இடங்களிலே அநியாயத்துக்கு இலக்காகியிருக்கின்றார் என்பதைக் கண்டபோது, ஏற்பட்டதுபோன்ற கவலை. அவர் என் மிக மரியாதைக்குரியவர் என்பதற்காக பின்வரும் கருத்தினை எழுதவில்லை; கண்ணனின் பத்தி, காலச்சுவடு-ஈழத்தேசியம்-தீராநதி என்பவற்றின் நிலைப்பாட்டினை விளக்குவதாகப் போய், பொதுவிலே தன் அரசியல் சார்ந்த கருத்தினை எங்கும் திணிக்காத, தானும் தன் ஈழ இலக்கியப்பதிப்பும் என்று செயற்பட்டிருக்கின்ற பத்மநாப ஐயருக்கு வீணே நண்பர்கள் முறித்துக்கொள்ளும் + விரோதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நிலையைமட்டுமே உருவாக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தீராநதியின் காலச்சுவடு மேலான குறிப்பு அடங்கிய கட்டுரையை முன்னிட்டு, கண்ணனுக்கு தன் பத்தியிலே எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமிருப்பதை மறுக்கவில்லை. ஆனால், அந்தக்குறிப்பினை, தீராநதி எப்படியாகத் தினக்குரல் செவ்வியைப் போட்டது என்பதோடு சேர்த்து, ஒரே பத்தியிலே, இரண்டு விடயங்களையும் வேறாகப் பிரிக்காது போட்டிருப்பது, ஒரு விதத்திலே அநீதியானது; குறிப்பாக, தினக்குரல் முதல் தீராநதிவரையான கட்டுரைப்பயணத்திலே குறிப்பிட்ட சம்பவங்கள் தனிப்பட்டவர்களிடையே நிகழ்ந்த சம்பவங்கள்; அவை அச்சிலே பொதுவிலே வரமுன்னாலே, சம்பந்தப்பட்டவர்களின் சம்பந்தம் கேட்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியாகக் கேட்கப்படாதபோது, தனிப்படக்கூறியதை அச்சிலே போடுவது முறையான செய்கையல்ல; வெறும் நம்பிக்கைக்கேடாக மட்டுமே முடிவடையும். இதைக் குறித்து ஐயரோடு பேச இதை எழுதும்வரைக்கும் எனக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிய விருப்பம்; என்னவென்று விடுப்பு கேட்காமல், அவராகச் சொல்லபோகிறவர் இல்லை. ஆனால், அவர் என்ன சொல்கிறார் என்பதை மீளப் பதிந்து, இன்னும் இந்த உதைபந்து விளையாட்டினை மேலதிக நேரத்திலே, அவர் தலைக்குத் தண்ட உதை கொடுத்து வெற்றி பெற்றாரைத் தீர்மானிக்க விருப்பமில்லை. இவர் பேசாமல், இயல் விருது பெறாமலே இருந்திருக்கலாம். தனிப்பட்ட அளவிலேனும் வேண்டாத பிரச்சனைகள் உருவாகாமலிருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'05 மே 13 வெள். 18:10 கிநிநே.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9576093-111618536375536882?l=karaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaivu.blogspot.com/feeds/111618536375536882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9576093&amp;postID=111618536375536882' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/111618536375536882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/111618536375536882'/><link rel='alternate' type='text/html' href='http://karaivu.blogspot.com/2005/05/1.html' title='உறுத்தல் - 1'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9576093.post-111050092113562723</id><published>2005-03-10T19:22:00.000-05:00</published><updated>2005-03-20T23:18:49.343-05:00</updated><title type='text'>ஜே. ஜே. சில குறிப்புகள்</title><content type='html'>&lt;p align="left"&gt;&lt;img height="204" src="http://photos1.blogger.com/img/83/1568/0/scan0002.jpg" width="128" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;2001 மே, 11&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வெளிவந்து ஏழு வருடங்களின் பின்னர் கேள்வியுற்று, கைக்கிட்டாது, இருபது வருடங்களின் பின்னர் தற்செயலாகக் கிடைக்க வாசித்த குறிப்புக்கள். இந்தக்காலதாமதத்தினால் குறிப்புகளை எழுத்தாளரின் எழுத்தூடான நேரடிச்சாட்சியாக உணரமுன்னர் திறனாய்வு, விமர்சகத்தரகர்களின் பார்வைப்பூச்சுக்கூடாய்ப் பார்க்கவேண்டி ஏற்பட்ட (அவ)நிர்ப்பந்தம் (இன்னும் வாசிக்காது விலத்திக்கொண்ட சில குறிப்புகளின் பின்னான ஃபிரான்ஸ்வா க்ரோவின் உரை தவிர) அவ்வப்போது ஏற்பட்டதனைத் தவிர்க்கமுடியவில்லை. அதே நேரத்திலே இதே காலவிடைவெளி இந்நூல் மேலான விமர்சனங்களுக்குக் கதாசிரியரின் தன் விளக்கங்களையும் வாசிக்க வழிவகை செய்தது. இத்தனைக்குப்பின்னரும் ஆசிரியர் 99ம் ஆண்டு குமுதம் இதழிலே “‘ஜே:ஜே: சில குறிப்புகள் ’ மீதான முழுமையான விமர்சனம் இதுவரை வரவில்லை” என்பதாகக் குறிப்பிடுகின்றார். எந்தவொரு ஆசிரியரினதும் கருத்துக்களும் குறியீடுகளும் அதன்மீதான எதிர்பார்ப்புகளும் முழுக்க முழுக்க சக எழுத்தாளர்களாலும் விமர்சகர்களாலும் வாசகர்களாலும் அவர் அமைத்த வியூகத்தின் மர்மஸ்தானங்களைப் பிளந்துமட்டுமே புரிந்து உள்வாங்கப்படும் என்று எதிர்பார்க்கமுடியாது. அப்படி நிகழாத அதேநேரத்திலே தனது முடிச்சுகள் தான் எதிர்பார்த்த கோணத்திலோ வேறேதோ மாற்றுச்செயலாலோ முற்றாக அவிழ்க்கப்படும்வரை ஆசிரியன் தன் படைப்பு முழுக்க வெற்றியடைந்ததாகக் கருதிக்கொள்கின்றதில்லை. இங்கே அப்படி நிரப்பப்படாத வெளியின் ஓரிரு துவாரத்தை - கதைக்குறிப்பானவனையோ குறிப்பிட்டவரையோ சாராத வாசகர் களமும் பேசப்படு காலமும் அமைந்துபோய், ‘குழுக்கருந்துவாரங்கள்’ உள்ளிழுத்துக்கொள்ளாத விமர்சனத்தினைச் சாக்கிட்டு, மறுவாசிப்பு~உடற்பகுப்பாய்வு செய்துகொள்ளாத ஒரு வாசகனுக்குச் சொல்ல என்ன மிஞ்சியிருக்கக்கூடுமா என்ற தயக்கத்தோடு- எழுந்தவாக்கிலே நிரப்ப எண்ணுகிறேன். அதனால் சொல்லப்பட்டவை மீண்டு இந்தச்சிறுகுறிப்புகளுள்ளே சொல்லப்பட்டால் குறை தவிர்க்கவேண்டுமென விழைவு.&lt;br /&gt;&lt;br /&gt;புதினத்துக்கு இலக்கணம் வலிந்து அதன்படி ‘தமிழின் சென்ற நூற்றாண்டின் சிறப்பான பத்து பட்டியல்’ வகுத்து தனது இரண்டு புதினங்களை முன்னுக்கு வைக்கின்ற எழுத்தாளத்திறனாய்வுக்குழவிகள் தொடங்கி, தாள் தேர்ந்து நூல் வாசித்து பிடித்த பத்து பொறுக்கும் பெரும்பாலான ‘சாதாரண வாசகர்’வரைக்கும் பலரும் தமது முன் பத்துக்குள் ஜேஜேயின் குறிப்புகளைத் தவிர்க்கமுடியாமற்போனதற்கு குறிப்புகளின் கருவும் பாத்திரப்படைப்பும் சொற்செதுக்கலும் இழை மேவிச் சீராய் ஊடுபாவி அமைந்துகொண்ட விதமே காரணமாக இருக்கின்றது என்று தோன்றுகின்றது. எழுத்தாளர்-திறனாய்வாளர்-வாசகர் என்ற முக்கோணமுடுக்கிலே கதையின் பாத்திரங்கள் மாற்றி மாற்றி தம்மை இடம் பெயர்த்துக்கொள்கின்றன. அதே நேரத்திலே குறிப்புகளை வாசிக்கின்றவர்களும்கூட தெளிவாக விளக்கமுடியாத காரணங்களின் உந்தலால் தம்மை ஏதோவொரு பாத்திரத்தால் ஆரம்பத்திலே அடையாளம் கண்டுகொண்டு, தாமும் கதையோட்டத்துடன் ஜேஜேயின் குறிப்புகள் மேலான பாலுவின் குறிப்புத்தளத்துக்குச் சமாந்திரமான இன்னொரு தளத்திலே வேறொரு கோணத்திலே அதே பாத்திரங்களோடு தமக்கான சொந்தக்கதையைக் கோலாட்டி வழிநடத்திச் செல்ல நேரிடுவதாகின்றது. இந்தவிதத்திலே பதிவாளன் பாலுவூடாக ஆசிரியர் என்ன சொல்லவந்தார் என்பதிலும்விட வாசகனின் பிறிதான பதிவாடியிலான தெறிப்புகளும் முக்கியமாகின்றன. இதன் காரணமாக ஆசிரியரின் காலடியொற்றிப் பாதம் பதித்தாடும் கட்டாயத்திலிருந்து வாசகன் தளர்த்தப்படுகின்றான்; விடுவிக்கப்படுகின்றான். இஃது இந்தப்புதினத்துக்கு மட்டுமேயான சிறப்பில்லையெல்லையென்றாலுங்கூட எல்லாப்புதினங்களுக்கும் இச்சாத்தியம் ஏற்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச்சாத்தியம் நிகழ்வதற்கு பாத்திரப்படைப்புகளின் முளைப்பும் அமைப்பும் செதுக்கலும் விவரிப்பும் ஆசிரியனாலே முழுமையாக வரையறுக்கப்படாது வாசகனுக்கு வேண்டியபோதிலே கைகொடுத்து விழையாப்பொழுதிலே விலகி நின்று கவனித்து இன்னொரு பொழுது படைப்பும் தெறிப்பும் மீள ஒட்டிக் கொள்ளும் வண்ணம் நிகழ்த்தல் வேண்டும். இது மண்டையோடு பிளந்து மூளை அறுவைச்சிகிச்சை செய்யும் கலை; சற்றே நெருங்கினால், வாசகனின்மீது பாத்திரத்தின் செறிவின்மீதான திணிப்பும் சற்றே விலகினால் கதைமீதான ஈடுபாட்டு விலகலும் நிகழும் என்ற கம்பியிலே எம்பிக்குதித்துக் கால் தந்தியாடும் நிலை. ஜேஜேயின் பதிவு மட்டுமல்ல, அரவிந்தாட்சமேனன், எம்.கே.ஐயப்பன், முல்லைக்கல் மாதவன் நாயர், திருச்சூர் கோபாலன் நாயர் என்று மட்டுமின்றி சாராம்மா வரைக்கும் இதே காட்டியும் காட்டாமலும் வாசிப்பவர் கற்பனைக்கும் இடங்கொடுத்து கவர்ச்சி தரும் செயல் நிகழ்கின்றது. தமிழ் எழுத்துமட்டத்தின் முந்தநாளையும் நேற்றினையும் இன்றினையும் வாசிப்பாகப் பாதி ஊர்வம்பூசியேறிய செய்தியாக மீதி கண்டு நடக்கும் தினசரி வாசகன் மட்டுமேயானவனுக்கு ஆசிரியரின் பாத்திரங்கள்மீதான அறிமுக விவரணங்கள் - இது மலையாள இலக்கிய உலகத்தின்மீதான பார்வையா தமிழ் இலக்கிய உலகத்தின் மீதான பார்வையா என்பதற்கு ஆசிரியர் ஆங்காங்கே கொடுக்கமுயற்சித்த விளக்கங்களை அவரின் ‘விரிவும் ஆழமும் தேடி’யிலே அங்கும் இங்கும் காணமுடிந்தபோதும்- “யாரோ இவர் யாரோ? இவரோ? அவரோ?” என்ற உருவகிப்பினை ஏற்படுத்தினாலுங்கூட கதை விரியுமிடத்திலே ‘அந்தத்’ தனியாளை ‘இந்தப்’ பாத்திரமாய் ஒட்டிவைக்கும் சுதை கழன்று அரூபம் மட்டும் வாசகனோடு நேரத்துக்கேற்ப இரசத்துளி உருளலும் வடிவமுமாய் -ஆனால் தானானது உள்ளே மாறாமற் போகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைக்கு வித்திட்டுப் பெற்றுக்கொள்ளும் செயல் தவிர்ந்த வேறெதிலுமே கற்பனையும் உண்மையும் கலக்காத படைப்பு இருக்கமுடியாது; இதற்கு ஒரு தோட்டக்காரனோ ஒரு கதைசொல்லியோ வேறெந்த வகைப்படைப்பாளியோ விதிவிலக்காகிவிடமுடியாது. ஜேஜேயும் பாலுவும் இரண்டான பேர்வழிகள் என்று கொள்கின்றது என்பதிலும் இடையினிலே ஊடாடி தன்கரைகளிலே வேறான ஒன்றின் இரண்டு பகுதிகளாகப்படுகின்றன..... (முற்றாகி நிறைவேறாத) இலட்சியமும் அதன்மீதான ஈர்ப்புச் சுவறாதபோதும் அதனுள் முழுதாக மூழ்கிச்செத்துப்போகாமல் தன் வாழ்தலை நிச்சயப்படுத்துக்கொள்ளும் நடைமுறையும். ஜேஜேயின் இறப்பு என்பது ‘பாலு’வின் ‘புதிய பார்வையும் பாதையும்’ பிறப்பதற்கான அசைபோடும் அஞ்ஞாதவாசத்தின் பிறப்பான குறியீடாகக் கண்டுகொள்ளத்தான் இங்கே இந்த வாசகனுக்கு முடிந்திருக்கின்றது. தேடலுடனான பிடிவாதத்தையும் அதன்பின்னான சோர்வு தந்த இடைவெளியிலே முன்னைய இருப்பு எதற்காக எண்ணியதற்கு மாற்றான முனைகளிலே வந்து நின்றதென்கின்றதை ஆய்தலையும் நீரும் நெய்யுமாகப் பிரித்தடுக்கும் முயற்சியே ஜேஜேயின் குறிப்புகளும் பாலுவின் கருத்துக்களும் என்ற எண்ணம் வாசித்துமுடிக்கும்போது தோன்றுகின்றது. மனித இருப்பின் தேவையினை இலக்கியத்தின் அவசியத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் கேள்விகள் எழுதல் தவிர்க்கமுடியாதாயினும் தான் சூழ்ந்த உலகம் (குறிப்பாகப் படைப்புலகம்) சம்பந்தமாக ஜேஜேயின் வினாக்கள் ஜேஜேயின் காலத்துக்கு முன்னாலும் சமகாலத்திலும் வருங்காலத்திலும் இருந்தன; இருக்கின்றன; இருக்கும் என்கின்றதை அறியாதானாக இத்தனை வாசிப்புக்கும் அனுபவங்களுக்கும் தன்னை உட்படுத்திக்கொண்ட ஜேஜே இருந்திருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் எழுகின்றது. அவ்வப்பொழுதுக்குத் தகுந்த தீர்வுகளைக் கிஞ்சித்தேனும் ஏற்றுக் கொள்ளாமல் அந்தவினாக்களை அவிழ்த்தல் மட்டுமே தன் வாழ்வுக்கான விதி என்று அவன் வாழ்ந்திருக்கின்றான் என்று (ஜேஜே பற்றி எனக்குப் பிடிபடுகின்றது சரி என்று கொண்டால்) சொல்லப்பட்ட அவனது அகண்ட வாசிப்பினதும் ஆழத்தேடலுக்கும் பலன் என்னவென்கிற கேள்விவும் அவநம்பிக்கையுமே வாசகன் மீது கவிகின்றதாகப் படுகின்றது. பாலுவினை உன்னதத்தினை நோக்கி வியப்போடு பார்க்கும் அதே நேரத்திலே நடைமுறையிலும் தன் இருப்பினைக் காத்துக்கொள்ளும் ஆளாக்கிவிடும் ஆசிரியர் ஜேஜேயினை அதீத இலட்சியத்துக்கு ஆக்கிவிடுகின்றார். மேன்மைக்குணங்களின் வரையறுப்புகள், நோக்குகள் முற்றிலும் வேறாயினும் இலட்சியத்தன்மை என்பதைப் பார்க்கும்போது ஜேஜேயும் இலக்கு என்றது நாம் முட்டிப்பார்க்க இழுத்துக்கொள்ளும் கற்பனை உச்சத்துக்கோடு என்கிறதை மறுத்து நா. பார்த்தசாரதியின் கதாநாயகர்களின் பண்புகளோடு போட்டிக்கு உரசிப்பார்க்கும் ஒரு மனிதனாகவே தெரிகின்றான். ஜேஜேயின் அகம்பாவமும் அச்சமும் தோல்வியும்கூட “பிச்சை பெற்றாலும் கொடுப்பவன் பிடிக்க நான் எடுத்துக்கொள்கின்றேன்” என்ற வகையான நாயகனின் இலட்சியத்தினை அலங்கரிக்கும் பண்புகளாகின்றதோ என்று படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இஃது ஒரு மையம் சார்ந்தொழுகாத படைப்பா இல்லையா என்கின்றதும் ஜே.ஜே.யின் (தெரிவிக்கப்பட்டதும் வாசகனாகப் புரிந்துகொண்டமைந்ததுமான) கருத்துத்தளம் மீதான விவாதங்களும் படைப்பினை வருங்காலத்துக்காக வகைபிரிக்கும் நோக்கிலும் அவரவர் தத்துவநோக்கு நிலையிலே நின்று வாதாடப்படவேண்டியதாகவும் பெரும்பாலும் இருக்கின்ற நிலையிலே வாசகனுக்கு கதை நகர்கின்றபோதிலே காலித்து கழன்றுகொள்ளாத சுவராசியமும் கதை எழுப்பும் உணர்வும் திறனாய்வாளரின் திமிறத்திமிற அழுத்தியூட்டலில்லாத தன்னறிதலும் திருப்தியும் முக்கியமாகின்றன. அந்தளவிலே - தம்மளவிலே சிறப்புற்றாலும் காலமும் சூழலும் பிறழ்ந்த சில நகைச்சுவையிழைகளையும் சில நீண்ட குறிப்புகளையும் தவிர்த்து - ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ பேச வந்த பொருளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி. மையம் சார்ந்தொழுகாத படைப்பா என்கின்ற கேள்வியின் தேவை எனக்குத் தேவையில்லாதபோதும் நாட்குறிப்பு என்பதுதான் மையம் என்று பருமப்பொருள் சார்ந்து ஏற்றுக்கொள்ளலாமோ என்று எண்ணுகின்றேன். இன்னொரு வாசகருக்கு அவரின் அனுபவத்தினைப் பொறுத்து அவர் கதையிலே வேறொரு குறியீடு மையமாகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலை இலக்கியம் சார்ந்து எழும் இதுவகையான கேள்விகளுக்கு ஜேஜேயோ வேறெவரோ பதிலேதும் கண்டு புதர் விலக்கிப் புதிர் அவிழ்க்கமுடியாது; எனக்கென்றால் ஏனோ ஜேஜேயின் வினாக்கள் மட்டுமல்ல தமிழ்ப்படைப்புலகமும் அப்படியேதான் பொம்மைகளும் பொம்மலாட்டக்காரர்களும் மாறினாலும் கூத்தேதோ மாறாமல் உலவும் என்று தோன்கின்றது. சில கேள்விகள் தொடர்ந்துகொண்டேதாம் இருக்கும். சூழலுக்கும் காலத்துக்குமேற்ப மனிதன் தனது வாழ்காலத்தைக் கருத்திலே வைத்துக்கொண்டு காய்களைச் சிறிதாக தனக்குப் பட்ட முன் திசையிலே நகர்த்திக்கொண்டு போகவேண்டும். ஆனால் கேள்விகளையும் குழப்பங்களையும் திணிவேற்றாமல் சுவராசியமாக வாசகர்கள்முன்னே பின்னிப்போட்டு உள்வாங்க வைத்ததன் காரணமாக ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ தமிழ்ப்படைப்புகளிலே ஒரு சிறப்பிடத்திலே இனி வருகின்றவற்றுக்கு ஓர் ஒப்புநோக்கியாக்கமாக இருக்கும் என்பது மறுக்கப்படமுடியாததாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;ஜே. ஜே. சில குறிப்புகள்.&lt;br /&gt;வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;img height="95" src="http://photos1.blogger.com/img/83/1568/0/sundararamaswamy.jpg" width="88" /&gt;&lt;/p&gt;&lt;div align="right"&gt;&lt;span style="font-size:78%;"&gt;படங்கள்: நன்றி =&gt; &lt;a href="http://www.chennaionline.com/panorama/artsandculture/06afm.asp"&gt;சென்னை ஒன்லைன்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9576093-111050092113562723?l=karaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaivu.blogspot.com/feeds/111050092113562723/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9576093&amp;postID=111050092113562723' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/111050092113562723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/111050092113562723'/><link rel='alternate' type='text/html' href='http://karaivu.blogspot.com/2005/03/blog-post.html' title='ஜே. ஜே. சில குறிப்புகள்'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9576093.post-110667130050447890</id><published>2005-01-25T11:36:00.000-05:00</published><updated>2005-01-25T11:41:40.503-05:00</updated><title type='text'>செம்மணி</title><content type='html'>&lt;p align="left"&gt;&lt;img src="http://photos1.blogger.com/img/83/1568//semmani_25012005.jpg" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம், செம்மணிப் படுகொலைகளை நினைவுகூருமுகமாக 'செம்மணி' என்ற இருபத்துநான்கு கவிஞர்களின் கவிதைகள் உள்ளடக்கிய நாற்பத்தெட்டுப்பக்கங்களினாலான தொகுதியை,&lt;br /&gt;&lt;br /&gt;'வதையுண்டு&lt;br /&gt;சிதையுண்டு&lt;br /&gt;செம்மணித்தரவைவெளியில்&lt;br /&gt;புதையுண்டுபோன&lt;br /&gt;நம் உறவுகளுக்கு&lt;br /&gt;இது படையல்'&lt;br /&gt;&lt;br /&gt;என்ற அர்ப்பணிப்புடன் காணக் கிடைத்தது. இந்நூல் தமிழிலே முதன்முதலாக, ஒரு தனி நிகழ்வினை எண்ணி (தனிமனிதர்களின் அறுபதாம் ஆண்டு விழாக்கள், தேசியத்தலைவர்களின் பிறந்தநாள்விழாக்கள் என்பனவற்றினை விடுத்துப் பார்த்தால்) வெளிவந்த பலரது எண்ணத்தொகுப்பாக இருக்குமோ என்று தோன்றுகின்றது ('கார்கில் யுத்தம்' சம்பந்தமாக சங்கரநாராயணன் ஆக்கி வெளியிட்ட சிறுகதைத்தொகுப்பொன்றும் வந்ததாகச் செய்தியும் திறனாய்வும் இணையத்தில் எங்கோ வாசித்தேன்)&lt;br /&gt;&lt;br /&gt;உமா ஜிப்ரான், போன்ற ஓரளவு அறியப்பெற்ற கவிஞர்களும் புதுவை இரத்தினதுரை போன்ற இயக்கம்சார் கவிஞர்களும் இன்னும் அறியப்படாத, ஆனால் அழுத்தமான ஒலியினை எழுப்பும் பலரும் ஒருமிக்கக் குரல் கொடுத்த தொகுதியாக இ·து அமைந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உமா ஜிப்ரானின், 'சிலுவையூன்றாச் சவக்காலை,' கருணாகரனின் 'நிறமிழக்கும் நகரத்தில்,' எஸ்போஸின் 'முள்வெளி,' தூயவளின் 'உன்னோடு ஒரு நிமிடம்,' மலைமகளின் 'உயரும் என்குரல்' ஆகியன, இவற்றுள் எனக்குப் பிடித்தமானவையாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;என் பார்வையிலே பழுதோ அல்லது நான் பார்த்தது சரிதானோ தெரியாது; மலைமகள் கவிதையில் 80'களின் சேரனின் நடையும் எஸ். போஸின் கவிதையில் வ.ஜ.ச. ஜெயபாலனின் அதே காலகட்ட எழுத்துப்பாங்கும் (+ ஒரு மொழிபெயர்ப்பூட்டல் உணர்வும்) உமாஜிப்ரானின் கவிதையில் இவையிரண்டும் கலந்திசையும் போக்கும் இருப்பதாக எனக்குத் தென்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;'மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மனிதரை&lt;br /&gt;எழுப்பும் வல்லமை எனக்கில்லை.&lt;br /&gt;ஆனால் கொல்லச் சொன்னவரை&lt;br /&gt;உயிருடன் உலாவும் பிணங்களாக்க&lt;br /&gt;என் குரலுக்கு இயலும்.&lt;br /&gt;வாய்கிழிந்து நரம்பு பிளந்து&lt;br /&gt;குருதி வழிகையிலும் என் குரல் அதிரும்.&lt;br /&gt;ஆதிக்கக் கோட்டைகள் உதிரும்வரையில்&lt;br /&gt;எனது குரல் உயரும்.' -மலைமகள்&lt;br /&gt;&lt;br /&gt;'சாக்குருவியின் துயர்ப்பாடலால் உறுஞ்சப்பட்ட&lt;br /&gt;மிகப் பழைய மனிதனின் மரணம்&lt;br /&gt;ஈரப்பாடை பற்றிய எல்லோரின் கனவுகளிலும்&lt;br /&gt;ஈரித்துறைந்தது.&lt;br /&gt;தீயின் வெம்மையடங்கி சாம்பல் பூத்த&lt;br /&gt;அவனுடைய மரணம்&lt;br /&gt;ஆன்ம வெளிகுதறும் அப்பாடலில் பின்னப்பட்டபோது&lt;br /&gt;பூக்களினதும்&lt;br /&gt;ஊதுபத்தி, மஞ்சள் நீரினதும் வாசனை&lt;br /&gt;வெளியின் மடிப்புகளில் ஊர்ந்தது.&lt;br /&gt;அந்த மிகப்பழைய மனிதனின் கனவுகள்&lt;br /&gt;-மண் பற்றியதும், விடிவுபற்றியதும் ஆதிமொழிபற்றியதும்-&lt;br /&gt;வரண்டழிந்த ஒரு காலத்தில்&lt;br /&gt;சாக்குருவியின் துயர்ப்பாடலில் விழுந்த மரணத்திற்காக&lt;br /&gt;அவனது குழந்தைகள் அழுதார்கள்;&lt;br /&gt;இதயத்தின் சோகத்தை உருக்கி&lt;br /&gt;மனசெங்கும் பரவினர்.' ' - எஸ்போஸ்&lt;br /&gt;&lt;br /&gt;'உண்மைகள்&lt;br /&gt;காணாமல்போன மனிதர்களை பிணங்களாய்க் கிளர்த்தின.&lt;br /&gt;மண்ணகழ்ந்த கிடங்குகளில் மனிதர்களை நிரவி&lt;br /&gt;செம்மணிவயலில் சாவிளைத்த இராணுவச்சாகசம்&lt;br /&gt;சந்தி சிரித்தது.&lt;br /&gt;உயிர்ப்பொறை உரியுண்டு உயிர்சுண்டிய&lt;br /&gt;எம் புருஷர் தேகப்பொதிகள்&lt;br /&gt;செம்மணியின் கள்ளறையுள்ளிருந்து புகைந்தன.&lt;br /&gt;வனப்புமிகு எம் பெண்டிர்&lt;br /&gt;தசைபுசித்த வெறியுடல்கள்&lt;br /&gt;தசைகுளிரும் பொழுதுவரை புசித்த&lt;br /&gt;தசைவெறி உடல்கள்&lt;br /&gt;செம்மணியின் பசியமண்ணில் பதனமிட்ட பிண்டங்கள்&lt;br /&gt;தெருக்களில் சம்மணமிட்டு வார்த்தையாடின.&lt;br /&gt;&lt;br /&gt;குழிகளில் புழுத்த&lt;br /&gt;உடல்கிளைத்த வயிறுகளின்&lt;br /&gt;ஒப்பாரிப்பாடல்பெற்ற ஸ்தலமாயிற்று செம்மணி.' - உமாஜிப்ரான்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாகரனின் 'நிறமிழக்கும் நகரத்தில்' தமிழ்க்கவிதைப்பரப்பளவில் உணர்வூட்டமாக இருந்தாலும் (தலைப்பும் கவிதைத் தொடக்கமும், ஏனோ நட்சத்திரன் செவ்விந்தியனின் 'பீற்றர்சன் றோட்டுக்கும் WA சில்வாமாவத்தவுக்கும் இடையில்' இனை நினைவூட்டியது என்பது வேறு விடயம்) தன்னளவில் ஈழத்துக்கவிதைகளின் தடம் பழகிப்போன&lt;br /&gt;எழுத்துக்கு ஒரு செம்மையான உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;'அது வனமொன்றின்&lt;br /&gt;இரகசிய அடுக்குகளில் நிகழவில்லை.&lt;br /&gt;கனவுகளும் பாதச்சுவடுகளும் அழிந்த கிராமங்களில்&lt;br /&gt;வெண்கொடிகள் நடப்பட்ட நகரின்&lt;br /&gt;இருள் ஆழங்களில்&lt;br /&gt;பேச்ச்சொடுங்கி&lt;br /&gt;பாடல்களும் ஒளியும் வற்றிய&lt;br /&gt;இரவுகளில்&lt;br /&gt;ஒதுக்குப்புற வெளியில்&lt;br /&gt;உவர்ப்புதர்களின் கீழ் ரகசிய மடிப்புகளில்&lt;br /&gt;அது நிகழ்ந்தது.&lt;br /&gt;...&lt;br /&gt;வயற்கரையில்&lt;br /&gt;அதன் முதிய வளைவீடுகளில்&lt;br /&gt;மூன்று குஞ்சுகளும்&lt;br /&gt;குஞ்சாகும் இரண்டு முட்டைகளும்&lt;br /&gt;அந்தப்புதைகுழிகளில் மூடுண்டன.&lt;br /&gt;நண்டின் வளைகள் மீதும் நாலுகுழிகள் ஐயோ&lt;br /&gt;அக்கணமோ&lt;br /&gt;குரலை விழுங்கி அக்குருவி தவித்தது&lt;br /&gt;தன் விதியழியத் தானே பார்த்துத் துடித்தது.&lt;br /&gt;அவ்வெளியில் விரிந்த பயங்கரங்கண்டு&lt;br /&gt;அது விறைத்தது.' - கருணாகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதியவரின் பெயரின்றி, யாழ்ப்பாண மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட கவிதை, 'அமைதிநகரின் மன்னம்பெரிகள்,' மிகுதி முழுக்கவிதைகளிலிருந்தும் வித்தியாசமான சரித்திர, புராண இழைகளினை தன் பாடுபொருளின் நடப்போடு கோர்த்துச் சொல்லமுயலும் ஒரு முயற்சி. அந்த அளவில் அது தன்னளவில் ஒரு நல்ல கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;அவலச்சுவையும் ஆத்திரமும் கவலையும் வெறியும் வேதனையும் மாறிமாறி ஒலிக்கும் குரல்களினாலான இந்தப் படைப்புகளில், புதுவை இரத்தினதுரையின் பாடலும் கவிதையும் வெறும் எழுச்சிக்கோரிக்கைகளின் தொகுப்பும் கேள்விகளுமாகச் சுருங்கிப் போய்விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மிகுதிக்கவிதைகளின் ஆக்கத்தில் தேவைக்கதிகமான கேள்விகளும் கோஷங்களும் சொல்வேள்விகளும் நிகழ்ந்தன போலொரு தோற்றம்; அத்தகைய நிலை, சில அபூர்வமான கவியிழைகள் தென்படினும், அவற்றில் கவிதையின் செழுமையினை முற்றாகப் படரவிடத் தடையாக இருப்பதாக எனக்குப் படுகின்றது&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, இந்தத்தொகுதி அதன் இலக்கெண்ணிப் பார்க்கும்போது, ஒரு வெற்றிக்குரியது என்பதில் ஏதும் மறுப்பிருக்கமுடியாது; அதனளவிலே மனதில் நிகழ்ந்த நிகழ்வினைப் பதியவைக்கும் அதன் படைப்புகள் பாராட்டுக்குரியன. ஆனால், இவை வாசிக்கப்பட வேண்டிய புலம் ஈழத்துக்கு அப்பால் என்றே தென்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நோக்கத்துக்கு அப்பால், இந்தக்கவிதைகள், ஈழத்துக்கவிதைகள் எந்த அளவுக்குத் தம் '80களின் போராட்டக்காலத்தடங்களுக்கு அப்பால், இருந்து வெளிவந்து உயிர்ப்பான புதுப்படிமங்களையும் நடைகளினையும் தரவேண்டிய பரிதாபகரமான நிலையில் இருக்கின்றன என்பதினைத் தெளிவாகச் சொல்கின்றனவுமாகி இருக்கின்றன. ஈழத்துப்படைப்பாளிகள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய உண்மை இது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல, தர்மபுரிமாவட்டத்தின் பேரூந்திற் தீயிடப்பட்ட படுகொலைகளினையும் இலக்கு வைத்து ஒரு தொகுதி வெளிவருவது, அவற்றின் விளைவுகளினை என்றைக்கும் நினைவூட்டும் விதமாக இருக்குமென்று படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;ஈழத்தின் 24 கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு.&lt;br /&gt;வெளியீடு:வெளிச்சம், தமிழீழம்.&lt;br /&gt;பக்கம்:48&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;img src="http://photos1.blogger.com/img/83/1568//20050125_2.jpg" /&gt;&lt;/p&gt;&lt;div align="right"&gt;&lt;span style="font-size:78%;"&gt;படங்கள்: நன்றி =&gt; &lt;a href="http://padippakam.blogspot.com/"&gt;படிப்பகம்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9576093-110667130050447890?l=karaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaivu.blogspot.com/feeds/110667130050447890/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9576093&amp;postID=110667130050447890' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/110667130050447890'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/110667130050447890'/><link rel='alternate' type='text/html' href='http://karaivu.blogspot.com/2005/01/blog-post_25.html' title='செம்மணி'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9576093.post-110584953022207622</id><published>2005-01-15T23:22:00.000-05:00</published><updated>2005-01-18T12:36:22.053-05:00</updated><title type='text'>படங்கள் இரண்டு</title><content type='html'>&lt;div align="justify"&gt;இன்றைக்கு அடுத்த மாநிலத்துக்கு நண்பர்களுடன் நண்பர்களைக் காணச்சென்றிருந்தோம். சென்று கண்ட நண்பர்களின் படத்தொகுப்பிலிருந்து எடுத்துப் பிரித்துக்கொண்ட முப்பதாண்டுகளுக்கு முந்திய படங்கள் இரண்டு இவை. அலைஞனின் அலைகள்: கரைவு பதிவு தமிழிலே நான் வாசிக்கும் நூல்கள் பற்றிய சிறுகுறிப்புகளை இடுவதற்காக அமைத்துக்கொண்டது. அதன் சுழிபோடும் உள்ளிடுகையாக இந்தப்படங்களை ஏற்றிக்கொள்வதிலே பேருவகை அடைகிறேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://photos1.blogger.com/img/83/1568//1.jpg" /&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;in 1976&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://photos1.blogger.com/img/83/1568//2.jpg" /&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;in 1971&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9576093-110584953022207622?l=karaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaivu.blogspot.com/feeds/110584953022207622/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9576093&amp;postID=110584953022207622' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/110584953022207622'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/110584953022207622'/><link rel='alternate' type='text/html' href='http://karaivu.blogspot.com/2005/01/blog-post.html' title='படங்கள் இரண்டு'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9576093.post-110284542342512135</id><published>2004-12-12T04:54:00.000-05:00</published><updated>2004-12-12T04:57:03.426-05:00</updated><title type='text'>நூற்பார்வை</title><content type='html'>நூற்பார்வை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9576093-110284542342512135?l=karaivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karaivu.blogspot.com/feeds/110284542342512135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9576093&amp;postID=110284542342512135' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/110284542342512135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9576093/posts/default/110284542342512135'/><link rel='alternate' type='text/html' href='http://karaivu.blogspot.com/2004/12/blog-post.html' title='நூற்பார்வை'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
